செய்திகள் :

போக்சோ வழக்கு: பிரபல மத போதகர் தலைமறைவு.. கோவையில் நடந்தது என்ன?

post image

கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ் (வயது 37). இவர் காந்திபுரம் பகுதியில் உள்ள ஜெப கூடத்தில் மத போதகராக உள்ளார். மேலும் இவர் தன்னுடைய இசைக் கச்சேரிகள் மூலம் கிறிஸ்துவ சமுதாயத்தில் நன்கு பிரபலமானவர்.

மத போதகர் ஜான் ஜெபராஜ்

தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இசைச் கச்சேரி நடத்தியுள்ளார். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தையும் இருக்கிறது.

ஜான் ஜெபராஜின் மாமனார் ஒரு ஆதரவற்ற சிறுமியை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். ஜெபராஜ் கடந்த 2024 மே 21-ம் தேதி தன் வீட்டில் ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளார். ஜெபராஜின் மாமனார் அதற்கு அந்த 17 வயது சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார்.

பாலியல் தொந்தரவு

மேலும் அந்த சிறுமியின் தோழியான 14 வயது சிறுமி ஒருவரையும் உடன் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது மதபோதகர் ஜெபராஜ் இரண்டு சிறுமிகளிடமும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். பயந்து போன சிறுமிகள் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

ஆனால் இந்த பாலியல் தொல்லை குறித்து சிறுமிகள் உடனடியாக யாரிடமும் தெரிவிக்கவில்லை. அவர்களின் நடவடிக்கையை பார்த்து உறவினர் ஒருவர் பேசியபோது அதில் ஒரு சிறுமி பாலியல் சீண்டல் குறித்து கூறியுள்ளார். அவர்கள் மூலம் இந்த தகவல் காவல்துறைக்கு சொல்லப்பட்டது.

மத போதகர் ஜான் ஜெபராஜ்

வழக்கை விசாரித்த அனைத்து மகளிர் (மத்திய) காவல்நிலையத்தில் ஜெபராஜ் மீது போக்சோ உள்ளிட்ட  3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள ஜெபராஜை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.  

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

'அந்த பொண்ணுக்கு 3 முறை நிச்சயம் ஆகிருக்கு; எல்லாமே மோசடி' - இருட்டுக்கடை உரிமையாளர் சம்பந்தி

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா உரிமையாளரின் மகளுக்கு வரதட்சணை கொடுமை நடந்ததாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அப்போது இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் மகள் கனிஷ்கா தன் மாமனார் யுவராஜ் சிங் மற்றும் ... மேலும் பார்க்க

ராஜபாளையம்: 'குடும்ப தகராறில் கணவன் அடித்துக் கொலை'- தற்கொலை நாடகமாடிய தாய்-மகள் கைது!

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே குடும்பத் தகராறில் கணவனை அடித்துக் கொலை செய்துவிட்டு, தற்கொலை நாடகமாடிய சம்பவத்தில் தாய்-மகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போல... மேலும் பார்க்க

ரயில் தண்டவாளத்தில் தண்டால்; சோஷியல் மீடியாவில் பகிரப்பட்ட வீடியோ- இளைஞரை எச்சரித்து அனுப்பிய போலீஸ்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் அருகே தாமரை குட்டி விளைபகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். 90 கிலோ உடல் எடை கொண்ட கண்ணன், தனது எடையை விட 4 மடங்கு எடை கொண்ட 370 கிலோ காரை, யோக் வாக் என்ற முறைப்படி 25 மீட்ட... மேலும் பார்க்க

`பணம் திருடியதாக சந்தேகம்’ வேதனையில் 4வது மாடியில் இருந்து விபரீத முடிவெடுத்த கோவை மாணவி

கோவை நவ இந்தியா பகுதியில் இந்துஸ்தான் மருத்துவமனை இயங்கி வருகிறது. அவர்களுக்கு சொந்தமாக பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரியும் உள்ளது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். அங்கு திருவண்... மேலும் பார்க்க

`இருட்டுக்கடையைக் கேட்டு கொடுமை செய்கிறார்கள்' - கணவர் வீட்டார் மீது புதுமணப்பெண் வரதட்சணை புகார்!

``இருட்டுக்கடை அல்வா கடையை தன் பெயருக்கு எழுதிக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வேறொரு பெண்ணுடன் குடித்தனம் நடத்துவேன்" என தன் கணவர் மிரட்டியதாக புதுமணப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ... மேலும் பார்க்க

போதைப்பொருளை கடலில் போட்டு தப்பிய கடத்தல் கும்பல்; 300 கிலோ மீட்பு.. குஜராத்தில் நடந்தது என்ன?

குஜராத் கடல் பகுதியில் அடிக்கடி போதைப்பொருள் கடத்தி வரப்படுவது வழக்கமாக இருக்கிறது. குஜராத் கடல் பகுதி மட்டுமல்லாது குஜராத் துறைமுகத்திற்கும் வெளிநாட்டில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதை... மேலும் பார்க்க