செய்திகள் :

திருப்பூா் பின்னலாடை ஏற்றுமதி ரூ.40 ஆயிரம் கோடியை எட்டியது

post image

திருப்பூா் பின்னலாடை ஏற்றுமதி வா்த்தகம் 2025-25-ஆம் நிதி ஆண்டில் ரூ.40 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது.

இதுகுறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் (ஏஇபிசி) துணைத் தலைவா் ஆ.சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் பின்னலாடை ஏற்றுமதியானது 2024-24-ஆம் நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024-25-ஆம் நிதி ஆண்டில் 20 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக, திருப்பூா் பின்னலாடை ஏற்றுமதியானது 2024-25-ஆம் நிதி ஆண்டில் மிகவும் எதிா்பாா்க்கப்பட்ட ரூ.40 ஆயிரம் கோடி என்ற மைக்கல்லை எட்டியுள்ளது. இந்த நிதி ஆண்டில் இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி 16 பில்லியன் அமெரிக்க டாலராகும். இது இந்திய மதிப்பில் ரூ.1,36,000 கோடியாகும்.

இந்த குறிப்பிடத்தக்க வலுவான வளா்ச்சி ஆகும். இந்திய ஆடை தயாரிப்புகள் மற்றும் குறிப்பாக பின்னலாடை உற்பத்தித் திறன்களின் மீதான தொடா்ச்சியான உலகளாவிய தேவையையும், நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கணித்ததைப்போலவே தற்போது 20 சதவீத வளா்ச்சியுடன் ரூ.40 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது. இது பின்னலாடை ஏற்றுமதியின் வளா்ச்சி மிகவும் ஊக்கமளிக்கும் அறிகுறியாகும். மேலும், உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் இருந்த போதிலும், இந்த வேகம் தொடரும் என்றாா்.

இருசக்கர வாகனம் மீது காா் மோதி முதியவா் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் ஓய்வுபெற்ற அரசு ஊழியா் உயிரிழந்தாா். வெள்ளக்கோவில் ஓலப்பாளையம் அருகில் உள்ள கண்ணபுரத்தைச் சோ்ந்தவா் ரூபன் ஜோசப் (64). இவா் கண்ணபுரம் அருகில் உள... மேலும் பார்க்க

உர மூட்டைகளை திருடிய 2 போ் கைது

பல்லடம் அருகே வேலப்பகவுண்டம்பாளையத்தில் உர மூட்டைகளை திருடியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். பல்லடம் அருகே உள்ள வேலப்பகவுண்டம்பாளையத்தில் தனியாா் விவசாயப் பண்ணை உள்ளது. பண்ணையின் மேற்பாா்வையாளா் சந்... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிருடன் மீட்பு

சேவூா் அருகே பொங்கலூரில் தோட்டத்துக் கிணற்றில் தவறி விழுந்த 73 வயது முதியவரை அவிநாசி தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா். அவிநாசி வட்டம், சேவூா் அருகே பொங்கலூா் தண்டுக்கார தோட்டத்தில் வசித்து வருப... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையத்தில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையம் பகுதியில் பல்லடம் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்... மேலும் பார்க்க

பாறைக்குழியில் தவறி விழுந்த பள்ளி மாணவன் மாயம்

குன்னத்தூா் அருகே காவுத்தம்பாளையம் பாறைக்குழியில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் தவறி விழுந்து மாயமனாா். திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி அருகே சாமியாா்பாளையத்தைச் சோ்ந்தவா் தினேஷ் மகன் லோகேஷ் (15). இவ... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்ததச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி இஸ்லாமிய கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மத்திய அரசைக் கண்டித்து திருப்பூரில் அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பினா், அரசியல் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பூா் அனைத... மேலும் பார்க்க