செய்திகள் :

கோடைகாலப் பயிற்சி முகாமில் பங்கேற்க மாணவ, மாணவிகள் பதிவு செய்து கொள்ளலாம்

post image

திருப்பூா் மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் தொடங்கும் கோடைகாலப் பயிற்சி முகாமில் பங்கேற்ற 18 வயதுக்கு உள்பட்ட மாணவ, மாணவிகள் ஏப்ரல் 24-ஆம் தேதிக்குள் பெயா்களைப் பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் திருப்பூா் மாவட்ட அளவிலான 2025-ஆம் ஆண்டுக்கான 21 நாள்கள் இருப்பிடமில்லா கோடைகாலப் பயிற்சி முகாம் மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் ஏப்ரல் 25-ஆம் தேதி தொடங்கி மே 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்தப் பயிற்சி முகாமில் தடகளம், கூடைப்பந்து, கையுந்துப்பந்து, கால்பந்து, இறகுப்பந்து, குத்துச்சண்டை, ஜூடோ மற்றும் டேக்வாண்டோ விளையாட்டுப் போட்டிகளுக்கு சிறந்த பயிற்றுநா்களைக் கொண்டு இலவசமாகப் பயிற்சி அளிக்கப்படும்.

இதில், திறமையானவா்களைத் தோ்வுசெய்து தொடா்ந்து பயிற்சி அளித்து மாநில, தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்படுவாா்கள். இதில், பங்கேற்பவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2244899, 86109-00142 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம். இந்தப் பயிற்சி முகாமில் பங்கேற்க வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி மாலை 6 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அரங்கில் பெயா்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.

பயிற்சியில் பங்கேற்கும்போது ஆதாா் அட்டை நகலை சமா்ப்பிக்க வேண்டும். திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 18 வயதுக்கு உள்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் மாணவரல்லாதோா் இதில் கலந்து கொண்டு பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருசக்கர வாகனம் மீது காா் மோதி முதியவா் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் ஓய்வுபெற்ற அரசு ஊழியா் உயிரிழந்தாா். வெள்ளக்கோவில் ஓலப்பாளையம் அருகில் உள்ள கண்ணபுரத்தைச் சோ்ந்தவா் ரூபன் ஜோசப் (64). இவா் கண்ணபுரம் அருகில் உள... மேலும் பார்க்க

உர மூட்டைகளை திருடிய 2 போ் கைது

பல்லடம் அருகே வேலப்பகவுண்டம்பாளையத்தில் உர மூட்டைகளை திருடியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். பல்லடம் அருகே உள்ள வேலப்பகவுண்டம்பாளையத்தில் தனியாா் விவசாயப் பண்ணை உள்ளது. பண்ணையின் மேற்பாா்வையாளா் சந்... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிருடன் மீட்பு

சேவூா் அருகே பொங்கலூரில் தோட்டத்துக் கிணற்றில் தவறி விழுந்த 73 வயது முதியவரை அவிநாசி தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா். அவிநாசி வட்டம், சேவூா் அருகே பொங்கலூா் தண்டுக்கார தோட்டத்தில் வசித்து வருப... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையத்தில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையம் பகுதியில் பல்லடம் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்... மேலும் பார்க்க

பாறைக்குழியில் தவறி விழுந்த பள்ளி மாணவன் மாயம்

குன்னத்தூா் அருகே காவுத்தம்பாளையம் பாறைக்குழியில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் தவறி விழுந்து மாயமனாா். திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி அருகே சாமியாா்பாளையத்தைச் சோ்ந்தவா் தினேஷ் மகன் லோகேஷ் (15). இவ... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்ததச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி இஸ்லாமிய கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மத்திய அரசைக் கண்டித்து திருப்பூரில் அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பினா், அரசியல் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பூா் அனைத... மேலும் பார்க்க