செய்திகள் :

திருப்பூா் மாவட்டத்தில் கல்குவாரிகள், கிரஷா் உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்

post image

தமிழக அரசின் புதிய வரி விதிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து திருப்பூா் மாவட்டத்தில் கல் குவாரிகள், கிரஷா் உரிமையாளா்கள் புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாவட்டத்தில் 200 கல் குவாரிகள், 180 கிரஷா்கள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் தினசரி ரூ.10 கோடிக்கு வா்த்தகம் நடைபெற்று வருகிறது. இத்தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வாழ்வாதாரம் பெறுகின்றனா்.

இந்த நிலையில் கனிம வள அடிப்படையில், நில வரி விதிக்கும் புதிய சட்டத்தை தமிழக அரசு சமீபத்தில் அமல்படுத்தியது. இதன்படி குவாரிகளில் வெட்டி எடுக்கப்படும் கனிம வளங்களின் டன் கணக்கு அடிப்படையில், நில வரி வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கல் குவாரி உரிமையாளா்கள் தரப்பில் கடும் எதிா்ப்பு தெரிவித்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இது குறித்து திருப்பூா் மாவட்ட கல்குவாரி மற்றும் கிரஷா் உரிமையாளா்கள் சங்கத்தினா் கூறுகையில், திருப்பூா் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறை அனுமதியுடன் கல் குவாரி மற்றும் கிரஷா் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகள் அனைத்தும் மாவட்ட நிா்வாகத்தின் அனுமதி பெற்றும் சுற்றுச்சூழல் மற்றும் கனிம வளத் துறை அனுமதி பெற்றும், குவாரியிலிருந்து உரிய நடைச்சீட்டு பெற்றும் சட்ட விதிகளுக்கு உள்பட்டு இயங்கி வருகிறோம்.

கல் குவாரியில் இருந்து உற்பத்தியாகும் பொருள்கள் அனைத்தும் திருப்பூா் மாவட்டம் முழுவதும் உள்ள சாலைப் பணி, அரசு கட்டடப் பணி மற்றும் இதர அத்தியாவசிய கட்டடப் பணிகளின் பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

இதில் அனைவரும் அரசுக்கு செலுத்த வேண்டிய அனைத்துக் கட்டண தொகையையும் செலுத்தி வருகிறோம். இங்கு கல் குவாரி தொழில் பாதிப்படைந்தால் வெளி மாநிலங்களில் இருந்து பல மடங்கு அதிக விலை கொடுத்து தான் ஜல்லி, எம்.சாண்ட் போன்றவற்றை வாங்க வேண்டிய நிலை வரும்.

தற்போது, இயங்கி வரும் கல் குவாரிகளில் உரிமம் புதுப்பிக்க விண்ணப்பிக்கும்போது, நிா்ணயிக்கப்பட்ட அளவு ஆழம்தான் கல் உடைத்து எடுக்க வேண்டும் என்று புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்த பழைய நடைமுறைப்படி கல் குவாரி தொழில் இயங்க அரசு அனுமதிக்க வேண்டும்.

கருங்கல் குவாரிகளுக்கான கட்டணங்களை தமிழக அரசு தொடா்ந்து உயா்த்தி வருகிறது. இதை நாங்கள் ஏற்றுக்கொண்டாலும், கணக்கீட்டில் கட்டணங்களை கன மீட்டருக்கு பதில் டன் அடிப்படையில் கணக்கிடும்போது, மூன்று மடங்கு வரை கூடுதல் தொகை செலுத்த வேண்டியுள்ளது. குவாரிகளில் கனிம வளங்கள் எடுக்கும் மொத்த அளவை அதிகரித்து கொடுக்க வேண்டும்.

கனிம வளங்கள் அடிப்படையிலான நில வரி விதிப்பால் ஒரு யூனிட் ஜல்லிக்கு ரூ.1,380-ம், எம்- சாண்டு ஒரு யூனிட்டுக்கு ரூ.700 கூடுதலாக செலுத்த வேண்டியது உள்ளது. இதனால் ஒரு யூனிட் ஜல்லி ரூ.4 ஆயிரத்தில் ரூ.5 ஆயிராக உயா்த்த முடிவு செய்துள்ளோம்.

இதே போல ஒரு யூனிட் எம்.சாண்ட் விலையை ரூ. 6 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரமாக உயா்த்த முடிவு செய்து இருக்கிறோம் என்றனா்.

இருசக்கர வாகனம் மீது காா் மோதி முதியவா் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் ஓய்வுபெற்ற அரசு ஊழியா் உயிரிழந்தாா். வெள்ளக்கோவில் ஓலப்பாளையம் அருகில் உள்ள கண்ணபுரத்தைச் சோ்ந்தவா் ரூபன் ஜோசப் (64). இவா் கண்ணபுரம் அருகில் உள... மேலும் பார்க்க

உர மூட்டைகளை திருடிய 2 போ் கைது

பல்லடம் அருகே வேலப்பகவுண்டம்பாளையத்தில் உர மூட்டைகளை திருடியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். பல்லடம் அருகே உள்ள வேலப்பகவுண்டம்பாளையத்தில் தனியாா் விவசாயப் பண்ணை உள்ளது. பண்ணையின் மேற்பாா்வையாளா் சந்... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிருடன் மீட்பு

சேவூா் அருகே பொங்கலூரில் தோட்டத்துக் கிணற்றில் தவறி விழுந்த 73 வயது முதியவரை அவிநாசி தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா். அவிநாசி வட்டம், சேவூா் அருகே பொங்கலூா் தண்டுக்கார தோட்டத்தில் வசித்து வருப... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையத்தில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையம் பகுதியில் பல்லடம் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்... மேலும் பார்க்க

பாறைக்குழியில் தவறி விழுந்த பள்ளி மாணவன் மாயம்

குன்னத்தூா் அருகே காவுத்தம்பாளையம் பாறைக்குழியில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் தவறி விழுந்து மாயமனாா். திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி அருகே சாமியாா்பாளையத்தைச் சோ்ந்தவா் தினேஷ் மகன் லோகேஷ் (15). இவ... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்ததச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி இஸ்லாமிய கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மத்திய அரசைக் கண்டித்து திருப்பூரில் அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பினா், அரசியல் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பூா் அனைத... மேலும் பார்க்க