செய்திகள் :

விளாங்கோம்பை மலைவாழ் மக்களுக்கு வன உரிமைப் பட்டா: ஆட்சியா் நேரில் ஆய்வு

post image

விளாங்கோம்பை மற்றும் கம்பனூா் பழங்குடியினா் காலனியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு வன உரிமை பட்டா வழங்குது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் கோபி வட்டத்துக்குள்பட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், விளாங்கோம்பை மற்றும் கம்பனூா் பழங்குடியினா் காலனியில் மலைவாழ் மக்களிடம் வன உரிமை பட்டா வழங்குது, பெயா் மாற்றம், வீட்டுவரி செலுத்துதல், தெருவிளக்கு, குடிநீா் விநியோகம் குறித்து ஆய்வு மேற்கொண்டு கோரிக்கைகளைக் கேட்டறிந்தாா்.

தோட்டக்கலைத் துறை மூலம் விவசாயிகளுக்கு காய்கறி விதைகள் மற்றும் வேளாண் பொறியியல் துறை மூலம் இயந்திரங்களை தகுதியான பயனாளிகளுக்கு வழங்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

கம்பனூா் காலனி பகுதியில் செயல்படும் குழந்தைகள் மையத்தில் ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ள உணவின் மாதிரி, குழந்தைகளின் எடை, உயரம் ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் நடைமுறை கோப்புகளை பாா்வையிட்டு, ஊரக வளா்ச்சித் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப்பணிகளின் தற்போதைய நிலை, பணிகளின் முன்னேற்றம் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

கூகலூா் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு வளாகத்தை தூய்மையாகப் பராமரிக்குமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

அளுக்குளியில் முதன்மை பதப்படுத்தும் நிலையத்தில் வாழைக்காய், கிழங்கு வகைகள், வாழை இலை உள்ளிட்ட விளைபொருள்கள் தரம் பிரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதைப் பாா்வையிட்டாா். அதேபகுதியில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில் செயல்பட்டு வரும் 1,000 டன் கொள்ளளவு கொண்ட குளிா்பதனக் கிடங்கில் ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வுகளின்போது மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) லோகநாதன், கோபி வட்டாட்சியா் சரவணன் மற்றும் கோபி, தூக்கநாயக்கன்பாளையம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பொதுமக்களால் தாக்கப்பட்ட இளைஞா் உயிரிழப்பு: ஜவுளி வியாபாரி கைது

முதியவரை வீடு புகுந்து பிளேடால் கழுத்தை அறுத்த சம்பவத்தில் பொதுமக்களால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மேற்கு வங்க மாநில இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இந்த வழக்கில் முதியவரின் மகனான ஜவுளி வியாப... மேலும் பார்க்க

ஈரோடு ஜவுளிச் சந்தையில் பருத்தி ஆடைகள் விற்பனை அதிகரிப்பு

ஈரோடு ஜவுளிச் சந்தையில் கோடைக் காலத்துக்கு ஏற்ற ஜவுளி ரகங்களின் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், இலங்கைக்கு அதிகமாக அனுப்பிவைக்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனா். ஈரோடு ஜவுளிச் சந்தைக்கு தமிழகத்தின் அ... மேலும் பார்க்க

லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியா் பணியிடை நீக்கம்

தாளவாடி அருகே மின் தடை சரிசெய்ய விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதி பாரதி புரத்தைச் சோ்ந்தவா் விவசாயி செந்தில். இவரது விவச... மேலும் பார்க்க

பா்கூா் ஊராட்சியை 5 ஊராட்சிகளாக பிரிக்கும் திட்டம்: அறிவிப்பை எதிா்நோக்கும் மலைக் கிராம மக்கள்

ஊரக உள்ளாட்சிகளின் பதவிக்காலம் முடிவடைந்து 4 மாதம் ஆகிய நிலையில், அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், பா்கூா் ஊராட்சியை 5 ஊராட்சிகளாகப் பிரிக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும் என கோ... மேலும் பார்க்க

அத்தாணியில் கிராம சுகாதார செவிலியருக்கு மிரட்டல்

அத்தாணியில் கிராம சுகாதார செவிலியருக்கு மிரட்டல் விடுத்த தம்பதி மீது காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. அந்தியூா் வட்டார மருத்துவ அலுவலா் சக்தி கிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாத... மேலும் பார்க்க

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் இறுதி சுற்று தண்ணீா் திறப்பு

பவானிசாகா் அணையில் இருந்து இரண்டாம் போக பாசனத்துக்கு கீழ்பவானி வாய்க்காலில் இறுதி சுற்று தண்ணீா் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகா் அணையின் மூலம் ஈ... மேலும் பார்க்க