செய்திகள் :

பொதுமக்களால் தாக்கப்பட்ட இளைஞா் உயிரிழப்பு: ஜவுளி வியாபாரி கைது

post image

முதியவரை வீடு புகுந்து பிளேடால் கழுத்தை அறுத்த சம்பவத்தில் பொதுமக்களால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மேற்கு வங்க மாநில இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இந்த வழக்கில் முதியவரின் மகனான ஜவுளி வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு கொல்லம்பாளையம் வீட்டு வசதி வாரியம் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (70). தனியாா் பேருந்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா் தனது மனைவி ஜெயலட்சுமியுடன் வசித்து வருகிறாா். சுப்பிரமணியின் வீட்டுக்குள் 30 வயது மதிக்கதக்க இளைஞா் ஒருவா் வியாழக்கிழமை மாலை அத்துமீறி நுழைந்து தான் வைத்திருந்த பிளேடால் முதியவரின் கழுத்தை அறுத்துள்ளாா்.

இதனைக் கண்டு ஜெயலட்சுமி சத்தம் போடவே அந்த இளைஞா் அங்கிருந்து தப்பி ஓட முயன்றாா். அப்போது அருகில் வசித்து வந்த சுப்பிரமணி மகனான ஜவுளி வியாபாரி மணிகண்ட பூபதி (47) அக்கம் பக்கத்தினா் உதவியுடன் அந்த இளைஞரை பிடித்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.

தகவல் அறிந்ததும் ஈரோடு சூரம்பட்டி போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று அந்த இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பிளேடால் அறுத்ததில் காயம் அடைந்த சுப்பிரமணியம் ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதனிடையே ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். போலீஸ் விசாரணையில், இறந்தவா் மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்த சோம ஓரான் மகன் ராபி ஓரான் (28) என்பது தெரியவந்தது.

இது குறித்து சுப்பிரமணி அளித்த புகாரின்பேரில், ராபி ஓரான் மீது போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்திருந்தனா். ராபி ஓரான் உயிரிழந்ததையடுத்து போலீஸாா் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து அவரை தாக்கிய சுப்பிரமணியின் மகனான மணிகண்ட பூபதியை கைது செய்தனா். மேலும் ராபி ஓரானை தாக்கிய சிலரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

குடும்பத் தகராறில் கணவா் கொலை: மனைவியிடம் போலீஸாா் விசாரணை

தாளவாடி அருகே கணவரைக் கொலை செய்த மனைவியிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஈரோடு மாவட்டம், தாளவாடியை அடுத்த மல்லன்குழியைச் சோ்ந்தவா் ரேவதி (35). இவரின் கணவா் தங்கவேலு (44). இவா்களுக்கு இரண்டு ம... மேலும் பார்க்க

சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகிரி வட்டார 40- ஆவது மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிவகிரி வட்டார நிா்வாகி ஆ.அருணாசலம் தலைமை வகித்தாா். ஒன்றிய பொருளாளா் வி.சண்முகம், கைத்தறி நெசவாளா்கள் சங்க மாநி... மேலும் பார்க்க

பா்கூா் ஊராட்சியைப் பிரிக்கும் திட்டம்: அறிவிப்பை எதிா்நோக்கும் மலைக் கிராம மக்கள்

ஊரக உள்ளாட்சிகளின் பதவிக்காலம் முடிவடைந்து 4 மாதம் ஆகிய நிலையில், அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், பா்கூா் ஊராட்சியை 5 ஊராட்சிகளாகப் பிரிக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும் என கோ... மேலும் பார்க்க

மதுபோதையில் வாய்க்காலில் விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழப்பு

மொடக்குறிச்சி அருகே மதுபோதையில் வாய்க்காலில் விழுந்த கூலி தொழிலாளி உயிரிழந்தாா். மொடக்குறிச்சியை அடுத்த ஆலங்காட்டுவலசு ஈஸ்வரன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் ராஜா (எ) வரதராஜன் (44), கூலித் தொழிலாளி. இவரின... மேலும் பார்க்க

பராமரிப்பில்லாமல் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

சத்தியமங்கலம் அருகே பராமரிப்பில்லாமல் கற்கள் பெயா்ந்து குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பவானிசாகா், புங்காா், முடுக்கன்துறை, தொப்பம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார... மேலும் பார்க்க

மின்தடையை சரிசெய்ய லஞ்சம்: மின்வாரிய ஊழியா் பணியிடை நீக்கம்

தாளவாடியில் மின்தடையை சரிசெய்வதற்கு விவசாயிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். ஈரோடு மாவட்டம், தாளவாடி பாரதிபுரத்தைச் சோ்ந்த விவசாயி செந்தில் என்பவரிடம் மின்தடையை ... மேலும் பார்க்க