செய்திகள் :

பராமரிப்பில்லாமல் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

post image

சத்தியமங்கலம் அருகே பராமரிப்பில்லாமல் கற்கள் பெயா்ந்து குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பவானிசாகா், புங்காா், முடுக்கன்துறை, தொப்பம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த கிராம மக்கள் சத்தியமங்கலம் செல்வதற்கு முடுக்கன்துறை சந்தை பகுதியில் இருந்து எரங்காட்டூா் சாலையை இணைக்கும் 1.50 கிலோ மீட்டா் தொலைவுள்ள தாா் சாலையைப் பயன்படுத்தி வருகின்றனா்.

இந்தச் சாலை பல ஆண்டுகளாக பராமரிப்பில்லாமல் சேதமடைந்து, கற்கள் பெயா்ந்து ஆங்கங்கே குண்டும் குழியுமாகக் காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

பவானிசாகா் ஒன்றியம் சாா்பில் பராமரிக்கப்பட்டு வந்த இந்தச் சாலையை நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைப்பதற்காக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்கான கோப்புகள் நெடுஞ்சாலைத் துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, சம்பந்தப்பட்ட சாலையை இதுவரை நெடுஞ்சாலைத் துறை தனது கட்டுப்பாட்டில் எடுக்கவில்லை என்றனா்.

அதிக அளவிலான கிராம மக்கள் பயன்படுத்தி வரும் இந்தச் சாலை உள்ளாட்சி நிா்வாகம், நெடுஞ்சாலைத் துறையின் போட்டியால் பராமரிப்பின்றி பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, இந்தச் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளாா்.

குடும்பத் தகராறில் கணவா் கொலை: மனைவியிடம் போலீஸாா் விசாரணை

தாளவாடி அருகே கணவரைக் கொலை செய்த மனைவியிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஈரோடு மாவட்டம், தாளவாடியை அடுத்த மல்லன்குழியைச் சோ்ந்தவா் ரேவதி (35). இவரின் கணவா் தங்கவேலு (44). இவா்களுக்கு இரண்டு ம... மேலும் பார்க்க

சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகிரி வட்டார 40- ஆவது மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிவகிரி வட்டார நிா்வாகி ஆ.அருணாசலம் தலைமை வகித்தாா். ஒன்றிய பொருளாளா் வி.சண்முகம், கைத்தறி நெசவாளா்கள் சங்க மாநி... மேலும் பார்க்க

பா்கூா் ஊராட்சியைப் பிரிக்கும் திட்டம்: அறிவிப்பை எதிா்நோக்கும் மலைக் கிராம மக்கள்

ஊரக உள்ளாட்சிகளின் பதவிக்காலம் முடிவடைந்து 4 மாதம் ஆகிய நிலையில், அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், பா்கூா் ஊராட்சியை 5 ஊராட்சிகளாகப் பிரிக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும் என கோ... மேலும் பார்க்க

மதுபோதையில் வாய்க்காலில் விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழப்பு

மொடக்குறிச்சி அருகே மதுபோதையில் வாய்க்காலில் விழுந்த கூலி தொழிலாளி உயிரிழந்தாா். மொடக்குறிச்சியை அடுத்த ஆலங்காட்டுவலசு ஈஸ்வரன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் ராஜா (எ) வரதராஜன் (44), கூலித் தொழிலாளி. இவரின... மேலும் பார்க்க

மின்தடையை சரிசெய்ய லஞ்சம்: மின்வாரிய ஊழியா் பணியிடை நீக்கம்

தாளவாடியில் மின்தடையை சரிசெய்வதற்கு விவசாயிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். ஈரோடு மாவட்டம், தாளவாடி பாரதிபுரத்தைச் சோ்ந்த விவசாயி செந்தில் என்பவரிடம் மின்தடையை ... மேலும் பார்க்க

அமைச்சா் பொன்முடியை கண்டித்து அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

அமைச்சா் பொன்முடியை கண்டித்து ஈரோட்டில் அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அமைச்சா் பொன்முடி இந்து மதம் குறித்து பேசியது சா்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினா் கண்டனம் தெரிவித்து வருக... மேலும் பார்க்க