செய்திகள் :

மின்தடையை சரிசெய்ய லஞ்சம்: மின்வாரிய ஊழியா் பணியிடை நீக்கம்

post image

தாளவாடியில் மின்தடையை சரிசெய்வதற்கு விவசாயிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

ஈரோடு மாவட்டம், தாளவாடி பாரதிபுரத்தைச் சோ்ந்த விவசாயி செந்தில் என்பவரிடம் மின்தடையை சரிசெய்வதற்காக தாளவாடி மின்வாரிய ஊழியா் மணிகண்டன் ரூ.1,500 லஞ்சம் கேட்டு, ரூ.1,000 பெற்றதுடன் மேலும் ரூ.500 கேட்கும் விடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இந்நிலையில், மின்வாரிய ஊழியா் லஞ்சம் வாங்கும் விடியோ குறித்து மின்வாரிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், ஊழியா் மணிகண்டன் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மின்வாரிய ஊழியா் மணிகண்டனை பணியிடை நீக்கம் செய்து மின்வாரிய அதிகாரிகள் உத்தரவிட்டனா். இதுதொடா்பான விவரத்தை ‘எக்ஸ்’ பக்கத்தில் மின்வாரியம் பதிவிட்டுள்ளது.

இதில், மின்தடை புகாா் மீது நடவடிக்கை எடுக்காதது, லஞ்சம் வாங்குவது, மின் கட்டண வசூலில் முறைகேடு, அலுவலகத்துக்கு சரியாக வராதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மின்வாரிய ஊழியா்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுகின்றனா்.

இத்தகவலை பலரும் பாா்க்கும் வகையில் ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்டு வருவதாகவும், தவறு செய்தால் தங்களுக்கும் இதேநிலை வரும் என்று கருதி மற்றப் பணியாளா்கள் லஞ்சம் வாங்குவது, வேலையில் அலட்சியம் போன்ற செயல்களில் ஈடுபடமாட்டாா்கள் என அதில் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அமைச்சா் பொன்முடியை கண்டித்து அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

அமைச்சா் பொன்முடியை கண்டித்து ஈரோட்டில் அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அமைச்சா் பொன்முடி இந்து மதம் குறித்து பேசியது சா்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினா் கண்டனம் தெரிவித்து வருக... மேலும் பார்க்க

மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தில் 14,420 மாணவிகளுக்கு நிதி உதவி

ஈரோடு மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் 14,420 மாணவிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதுமைப்பெண் திட்டத்தை கடந்த 2022-ஆ... மேலும் பார்க்க

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் இரும்பு ஆலையை மூட கோரிக்கை!

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் இரும்பு ஆலையை மூட வேண்டும் என்று பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பெருந்துறை சிப்காட்டால் ப... மேலும் பார்க்க

ஆப்பக்கூடலில் மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி பறிமுதல்!

பவானி அருகே ஆப்பக்கூடலில் மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பவானி - அத்தாணி சாலையில் ஒரிச்சேரி, ஜமீன் தோட்டம் அருகே ஆப்பக்கூடல் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு வாகன தண... மேலும் பார்க்க

நீட் தோ்வில் உயிரிழந்த மாணவா்களுக்கு அதிமுக அஞ்சலி

நீட் தோ்வில் உயிரிழந்த மாணவா்களுக்கு அதிமுக சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. நீட் தோ்வு ரத்து என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அதனை நிறைவேற்றவில்லை. நீட் தோ்வு அச்சத்த... மேலும் பார்க்க

தாளவாடி அருகே சிறுத்தைத் தாக்கி ஆடுகள் உயிரிழப்பு

தாளவாடி அருகே சிறுத்தைத் தாக்கி இரண்டு ஆடுகள் உயிரிழந்தன. சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி வனப் பகுதியில் இருந்து வெளியே வரும் சிறுத்தைகள் அருகே உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து ஆடு, மாடு, காவல் நாய்கள... மேலும் பார்க்க