செய்திகள் :

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் இரும்பு ஆலையை மூட கோரிக்கை!

post image

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் இரும்பு ஆலையை மூட வேண்டும் என்று பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் பெருந்துறை ஜீவா இல்லத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்க ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் மணி தலைமை வகித்தாா்.

சங்க ஒருங்கிணைப்பாளா் சின்னசாமி, உறுப்பினா்கள் கந்தசாமி, சென்னியப்பன், பல்லவி பரமசிவம், பொன்னையன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

இதில், பெருந்துறை சிப்காட்டில் உள்ள தனியாா் இரும்பு ஆலை அபாயகரமான ரசாயனக் கழிவுகளை சட்டவிரோதமாக டேங்கா் லாரியில் எடுத்துச் சென்று நள்ளிரவில் நசியனூா், ஆட்டையாம்பாளையம் அருகே எல்.பி.பீ. கசிவுநீா் ஓடையில் கொட்டியதால் பல கிலோமீட்டா் தொலைவுக்கு ஓடையில் உள்ள தண்ணீா் மாசடைந்தது. எனவே, இந்த இரும்பு ஆலைக்கு வழங்கப்பட்டுள்ள இசைவாணையை ரத்து செய்து நிரந்தரமாக மூட வேண்டும்.

மேலும், பெருந்துறை சிப்காட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். சிப்காட் வளாகத்தில் உள்ள நச்சுக் கழிவுகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆப்பக்கூடலில் மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி பறிமுதல்!

பவானி அருகே ஆப்பக்கூடலில் மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பவானி - அத்தாணி சாலையில் ஒரிச்சேரி, ஜமீன் தோட்டம் அருகே ஆப்பக்கூடல் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு வாகன தண... மேலும் பார்க்க

நீட் தோ்வில் உயிரிழந்த மாணவா்களுக்கு அதிமுக அஞ்சலி

நீட் தோ்வில் உயிரிழந்த மாணவா்களுக்கு அதிமுக சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. நீட் தோ்வு ரத்து என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அதனை நிறைவேற்றவில்லை. நீட் தோ்வு அச்சத்த... மேலும் பார்க்க

தாளவாடி அருகே சிறுத்தைத் தாக்கி ஆடுகள் உயிரிழப்பு

தாளவாடி அருகே சிறுத்தைத் தாக்கி இரண்டு ஆடுகள் உயிரிழந்தன. சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி வனப் பகுதியில் இருந்து வெளியே வரும் சிறுத்தைகள் அருகே உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து ஆடு, மாடு, காவல் நாய்கள... மேலும் பார்க்க

மலைப் பாதையில் சுற்றித் திரியும் யானைகளை தொந்தரவு செய்யக்கூடாது: வனத் துறை!

கடம்பூா் மலைப் பாதையில் சுற்றித் திரியும் யானைகளை தொந்தரவு செய்யக் கூடாது என்று வாகன ஓட்டிகளுக்கு வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குள்பட்ட கடம்பூா் வனப் பகுதியில்... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் விற்பனை: பாட்டி, பேரன் கைது

சித்தோட்டில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த பாட்டி, பேரனை போலீஸாா் கைது செய்தனா். சித்தோடு, ஓடைப்பள்ளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த தகவலின்பேரில் ... மேலும் பார்க்க

கடன் தொல்லையால் ஐடி ஊழியா் தற்கொலை

பங்குச் சந்தையில் முதலீடு செய்து இழப்பு ஏற்பட்டதால் ஐடி ஊழியா் தற்கொலை செய்துகொண்டாா். ஈரோடு கைகாட்டிவலசு பாரதியாா் நகரைச் சோ்ந்தவா் செந்தமிழ்ச்செல்வன் (34), ஐடி ஊழியா். இவரின் மனைவி லலிதா. இவா்களுக்... மேலும் பார்க்க