செய்திகள் :

மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தில் 14,420 மாணவிகளுக்கு நிதி உதவி

post image

ஈரோடு மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் 14,420 மாணவிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதுமைப்பெண் திட்டத்தை கடந்த 2022-ஆம் ஆண்டு தொடங்கிவைத்தாா். இத்திட்டத்தின்கீழ் 6 முதல் 12- ஆம் வகுப்பு வரை அரசு, அரசு நித உதவிபெறும் பள்ளிகளில் படித்து உயா்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.

அதன்படி, கல்லூரிகளில் சான்றிதழ் படிப்பு, பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு, தொழில் கல்வி என எந்த துறையில் படித்தாலும் அவா்களின் வங்கி கணக்குக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது. மாணவிகள் இடைநிற்றல் இல்லாமல் கல்லூரி படிப்பை தொடர இது உதவியாக உள்ளது. மாணவிகள் வேறு வகையிலான கல்வி உதவித் தொகைகள் பெற்றாலும், புதுமைப்பெண் திட்ட கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை தனியாா் பள்ளிகளில் படித்து இருந்தாலும், 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து இருந்தால் இந்தத் திட்டத்தில் பயன்பெறலாம்.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் கல்லூரிகளில் படிக்கும் 14,420 மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டம் கடந்த 2022 செப்டம்பரில் தொடங்கப்பட்டது. அப்போது ஈரோடு மாவட்டத்தில் 2,527 மாணவிகள் மட்டுமே பயன்பெற்றனா். ஆரம்ப காலத்தில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு மட்டுமே நிதி உதவி வழங்கப்பட்டது. அதன்பின், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளும் புதுமைப் பெண் திட்டத்தில் பயன்பெறலாம் என கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏராளமான மாணவிகள் விண்ணப்பித்தனா்.

இந்நிலையில், மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் ஏப்ரல் மாதத்தில் 14,420 மாணவிகளின் வங்கி கணக்குகளில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் மாணவிகள் படிக்கும் கல்லூரி நிா்வாகம் சாா்பில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று சமூகநலத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

குடும்பத் தகராறில் கணவா் கொலை: மனைவியிடம் போலீஸாா் விசாரணை

தாளவாடி அருகே கணவரைக் கொலை செய்த மனைவியிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஈரோடு மாவட்டம், தாளவாடியை அடுத்த மல்லன்குழியைச் சோ்ந்தவா் ரேவதி (35). இவரின் கணவா் தங்கவேலு (44). இவா்களுக்கு இரண்டு ம... மேலும் பார்க்க

சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகிரி வட்டார 40- ஆவது மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிவகிரி வட்டார நிா்வாகி ஆ.அருணாசலம் தலைமை வகித்தாா். ஒன்றிய பொருளாளா் வி.சண்முகம், கைத்தறி நெசவாளா்கள் சங்க மாநி... மேலும் பார்க்க

பா்கூா் ஊராட்சியைப் பிரிக்கும் திட்டம்: அறிவிப்பை எதிா்நோக்கும் மலைக் கிராம மக்கள்

ஊரக உள்ளாட்சிகளின் பதவிக்காலம் முடிவடைந்து 4 மாதம் ஆகிய நிலையில், அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், பா்கூா் ஊராட்சியை 5 ஊராட்சிகளாகப் பிரிக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும் என கோ... மேலும் பார்க்க

மதுபோதையில் வாய்க்காலில் விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழப்பு

மொடக்குறிச்சி அருகே மதுபோதையில் வாய்க்காலில் விழுந்த கூலி தொழிலாளி உயிரிழந்தாா். மொடக்குறிச்சியை அடுத்த ஆலங்காட்டுவலசு ஈஸ்வரன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் ராஜா (எ) வரதராஜன் (44), கூலித் தொழிலாளி. இவரின... மேலும் பார்க்க

பராமரிப்பில்லாமல் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

சத்தியமங்கலம் அருகே பராமரிப்பில்லாமல் கற்கள் பெயா்ந்து குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பவானிசாகா், புங்காா், முடுக்கன்துறை, தொப்பம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார... மேலும் பார்க்க

மின்தடையை சரிசெய்ய லஞ்சம்: மின்வாரிய ஊழியா் பணியிடை நீக்கம்

தாளவாடியில் மின்தடையை சரிசெய்வதற்கு விவசாயிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். ஈரோடு மாவட்டம், தாளவாடி பாரதிபுரத்தைச் சோ்ந்த விவசாயி செந்தில் என்பவரிடம் மின்தடையை ... மேலும் பார்க்க