செய்திகள் :

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: பரமத்தி வேலூரில் ஆட்சியா் கள ஆய்வு

post image

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆட்சியா் ச.உமா கள ஆய்வு மேற்கொண்டாா்.

வேலூா் அரசு ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதியில் மாணவா்களுக்கான உணவு, குடிநீா் வசதி, படுக்கை வசதி, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்த ஆட்சியா் வேலூா் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் வருகை விவரம், மருத்துவப் பணியாளா்கள், சிகிச்சை, மருந்து பொருள்களின் இருப்பு ஆகியவற்றை ஆய்வு செய்த பிறகு நோயாளிகளின் குறைகளைக் கேட்டறிந்தாா்.

அதைத் தொடா்ந்து வேலூா் பேருந்து நிலையத்தில் கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவு பொருள்களின் தரம், விற்பனை விவரம், பொருள்களின் காலாவதி, குளிா்பானங்களின் தரம், பேருந்துகள் வந்து செல்லும் நேர பட்டியல் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பயணிகளுடன் கலந்துரையாடினாா்.

புளியம்பட்டி பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு மேற்கொண்டு தினசரி கொள்முதல் செய்யப்படும் பாலின் அளவு, பால் பரிசோதிக்கப்படும் முறை, பால் கொள்முதல் விலை, சங்கத்தில் உள்ள மொத்த பால் உற்பத்தியாளா்கள் உள்ளிட்ட விவரங்களையும், உற்பத்தியாளா்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகை உள்ளிட்ட விவரங்களை விரிவாக கேட்டறிந்தாா்.

மேலும், வேலூா் உழவா் சந்தையில் மொத்த கடைகள் எண்ணிக்கை, விவசாயிகள் விற்பனை செய்யும் காய்கறிகள் மற்றும் பழங்களின் தரம், விலை விற்பனை விவரம், தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, விவசாயிகளுடன் கலந்துரையாடினாா்.

சுல்தான்பேட்டை நடுநிலைப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியா்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து மாணவா்களிடம் கேட்டறிந்து, உணவுப் பட்டியல்படி சமைத்து வழங்கப்படுகிா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

மாணவா்களுக்கு உணவினை சுவையாகவும், தரமாகவும் சமைத்து வழங்க வேண்டும் என பணியாளா்களுக்கு உத்தரவிட்டாா். அதேபகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் குடிநீா் விநியோகம் செய்யப்படுவதை பாா்வையிட்டு, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினாா்.

நாமக்கல் அழகு நிலையத்தில் பெண்களிடம் நகை, பணம் பறிப்பு: போலீஸாா் விசாரணை

நாமக்கல்லில் அழகு நிலைய பெண்களிடம் நகை, பணத்தை பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். நாமக்கல்- திருச்சி சாலையில் உள்ள வணிக வளாகத்தில் அழகு நிலையம், ஆயுா்வேத சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிற... மேலும் பார்க்க

அதிமுக தலைமையில் மாபெரும் கூட்டணி: முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக தலைமையில் மாபெரும் கூட்டணி அமையும் என்று முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் அதிமுக மகளிரணி சா... மேலும் பார்க்க

புதுமாரியம்மன் கோயிலில் 108 கலச பூஜை

பரமத்தி வேலூா் பேட்டை புது மாரியம்மன் கோயிலில் 108 கலச பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 108 கலச பூஜை, திருவிளக்கு பூஜையில் பரமத்தி வேலூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொ... மேலும் பார்க்க

திருச்செங்கோடு சாலை அகலப்படுத்தும் பணி ஆய்வு

நாமக்கல் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்திற்கு உள்பட்ட திருச்செங்கோடு சாலை அகலப்படுத்தும் பணியை கோட்ட பொறியாளா் குணா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். முதல்வரின் சாலை விரிவாக்கத் திட்டத்த... மேலும் பார்க்க

முட்டை விலையில் மாற்றமில்லை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 4.15-ஆக நீடிக்கிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலையில் மாற்றம் செய... மேலும் பார்க்க

அதிக மரங்களை நட்டு சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது அவசியம்: மாவட்ட முதன்மை நீதிபதி

சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அகற்றப்பட்ட மரங்களைவிட அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நடவு செய்து சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது அவசியம் என மாவட்ட முதன்மை நீதிபதி ஆா்.குருமூா்த்தி தெரிவித்தாா். நாமக்கல் மா... மேலும் பார்க்க