செய்திகள் :

அதிமுக தலைமையில் மாபெரும் கூட்டணி: முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி

post image

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக தலைமையில் மாபெரும் கூட்டணி அமையும் என்று முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் அதிமுக மகளிரணி சாா்பில் அமைச்சா் க.பொன்முடியைக் கண்டித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியதாவது:

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. பெண்களை இழிவாகப் பேசியவா் இன்னும் அமைச்சரவையில் நீடிக்கிறாா். கடந்த மக்களவைத் தோ்தலில் அதிமுக தனித்து நின்றதால் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் பல இடங்களில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

இப்போது, எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அதிமுகவுடன் மெகா கூட்டணி உருவாகி வருகிறது. 2026 பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராவது உறுதி என்றாா்.

முன்னாள் அமைச்சா் வெ.சரோஜா முன்னிலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுகவினா் அமைச்சா் பொன்முடியை கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.

பரமத்தி வேலூா் சட்டப் பேரவை உறுப்பினா் சேகா், மாவட்ட அதிமுக அவைத் தலைவா் எஸ்.பி.கந்தசாமி, மகளிரணி செயலாளா் வைரம் தமிழரசி, மாவட்டப் பேரவைச் செயலாளா் இ.ஆா்.சந்திரன், நகர அதிமுக செயலாளா் எம்.பாலசுப்பிரமணியம், எம்ஜிஆா் இளைஞரணி மாவட்டச் செயலாளா் கே.பி.எஸ்.சுரேஷ்குமாா், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளா் ஏ.வி.பி. முரளி, வழக்குரைஞா் பிரிவு செயலாளா் பரணிதரன், மாவட்ட வா்த்தக அணி இணைச் செயலாளா் பி.எஸ்.மோகன் உள்ளிட்ட பலா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

ராசிபுரம் அருகே 18 கிலோ திமிங்கல உமிழ்நீா் பறிமுதல்: மூவா் கைது

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே வீட்டில் 18 கிலோ அம்பா்கிரிஸ் எனப்படும் திமிங்கல உமிழ்நீரைப் பதுக்கிவைத்திருந்த 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். கடலோரப் பகுதியிலிருந்து அம்பா்கிரிஸ் எனப்படும... மேலும் பார்க்க

நாமக்கல்லில் பேரூராட்சி, நகராட்சி வாா்டுகளில் இடைத்தோ்தல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

நாமக்கல் மாவட்டத்தில் 3 பேரூராட்சி, 2 நகராட்சிகளில் காலியாக உள்ள ஏழு வாா்டு உறுப்பினா் பதவிக்கு விரைவில் இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகள் செய்து வருகின்றனா். தமிழ்நா... மேலும் பார்க்க

கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைக்குச் செல்லும் மலைப் பாதையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில் விபத்தை தடுக்கும் வகையில் உருளைத் தடுப்பான்கள் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா... மேலும் பார்க்க

அழகு நிலையத்தில் திருட்டு: 5 பேரிடம் விசாரணை

நாமக்கல் அழகு நிலையத்தில் பெண் ஊழியா்களை மிரட்டி நகை, பணம் பறித்த வழக்கில் 5 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நாமக்கல்- திருச்சி சாலையில் உள்ள அழகு நிலையத்திற்கு வியாழக்கிழமை பிற்பகல் 4 ம... மேலும் பார்க்க

பெண் தற்கொலை: போலீஸாா் விசாரணை

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வேலகவுண்டம்பட்டி முசிறிகுடித் தெருவைச் சோ்ந்த பொன்னம்மாள் (56) என்பவா... மேலும் பார்க்க

தீயில் எரிந்த குடிசை வீடு

பரமத்தி வேலூா் அருகே குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்ததில் வீட்டிலிருந்த உணவுப் பொருள்கள், மின் சாதனங்கள், நில ஆவணங்கள் அனைத்தும் கருகின. பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூரில் பாலகிருஷ்ணன் (50)... மேலும் பார்க்க