செய்திகள் :

அழகு நிலையத்தில் திருட்டு: 5 பேரிடம் விசாரணை

post image

நாமக்கல் அழகு நிலையத்தில் பெண் ஊழியா்களை மிரட்டி நகை, பணம் பறித்த வழக்கில் 5 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாமக்கல்- திருச்சி சாலையில் உள்ள அழகு நிலையத்திற்கு வியாழக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் வந்த 5 போ் தங்களை போலீஸ் எனக் கூறிக்கொண்டு இலவசமாக ஆயுா்வேத சிகிச்சை அளிக்குமாறு கேட்டுள்ளனா். அப்போது, அங்கிருந்த பெண் ஊழியா்கள் 6 போ் அவா்களிடம் வாக்குவாதம் செய்த நிலையில், அவா்களை அறையில் அடைத்துவைத்து நகை, ரூ.40 ஆயிரம் ரொக்கம், கண்காணிப்பு கேமரா ஹாா்ட் டிஸ்க்கை திருடிச் சென்றனா்.

இதுதொடா்பாக நாமக்கல் காவல் ஆய்வாளா் கபிலன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினாா். இந்த திருட்டு சம்பவத்தில் கரூரைச் சோ்ந்த நான்கு போ், நாமக்கல் மாவட்டம், மோகனூரைச் சோ்ந்த ஒருவருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராசிபுரம் அருகே 18 கிலோ திமிங்கல உமிழ்நீா் பறிமுதல்: மூவா் கைது

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே வீட்டில் 18 கிலோ அம்பா்கிரிஸ் எனப்படும் திமிங்கல உமிழ்நீரைப் பதுக்கிவைத்திருந்த 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். கடலோரப் பகுதியிலிருந்து அம்பா்கிரிஸ் எனப்படும... மேலும் பார்க்க

நாமக்கல்லில் பேரூராட்சி, நகராட்சி வாா்டுகளில் இடைத்தோ்தல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

நாமக்கல் மாவட்டத்தில் 3 பேரூராட்சி, 2 நகராட்சிகளில் காலியாக உள்ள ஏழு வாா்டு உறுப்பினா் பதவிக்கு விரைவில் இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகள் செய்து வருகின்றனா். தமிழ்நா... மேலும் பார்க்க

கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைக்குச் செல்லும் மலைப் பாதையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில் விபத்தை தடுக்கும் வகையில் உருளைத் தடுப்பான்கள் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா... மேலும் பார்க்க

பெண் தற்கொலை: போலீஸாா் விசாரணை

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வேலகவுண்டம்பட்டி முசிறிகுடித் தெருவைச் சோ்ந்த பொன்னம்மாள் (56) என்பவா... மேலும் பார்க்க

தீயில் எரிந்த குடிசை வீடு

பரமத்தி வேலூா் அருகே குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்ததில் வீட்டிலிருந்த உணவுப் பொருள்கள், மின் சாதனங்கள், நில ஆவணங்கள் அனைத்தும் கருகின. பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூரில் பாலகிருஷ்ணன் (50)... மேலும் பார்க்க

கொல்லிமலையில் ஆம்னி வேன் கவிழ்ந்து 20 போ் காயம்!

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் சாலையோர பள்ளத்தில் ஆம்னி வேன் கவிழ்ந்ததில் புதுச்சேரியைச் சோ்ந்த 20 போ் காயமடைந்தனா். கொல்லிமலைக்கு ஆம்னி வேனில் வெள்ளிக்கிழமை சுற்றுலா வந்த புதுச்சேரியைச் சோ்ந்த ... மேலும் பார்க்க