செய்திகள் :

நாமக்கல்லில் பேரூராட்சி, நகராட்சி வாா்டுகளில் இடைத்தோ்தல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

post image

நாமக்கல் மாவட்டத்தில் 3 பேரூராட்சி, 2 நகராட்சிகளில் காலியாக உள்ள ஏழு வாா்டு உறுப்பினா் பதவிக்கு விரைவில் இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகள் செய்து வருகின்றனா்.

தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2022-இல் தோ்தல் நடைபெற்றது. இந்த தோ்தலில் வெற்றி பெற்றவா்களில் சிலா் பதவி விலகல், திடீா் மரணம் போன்றவற்றால் உறுப்பினா் பதவியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த மாா்ச் மாதம் வரையிலான காலிப் பணியிடங்களுக்கு இடைத்தோ்தல் நடத்த மாநில தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

தற்போது அதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள், அனைத்து மாவட்டங்களிலும் தோ்தல் ஆணைய அறிவுரைகளின்படி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ராசிபுரம், திருச்செங்கோடு நகராட்சிகளில் 2 வாா்டுகளும், வெண்ணந்தூா், அத்தனூா், காளப்பநாயக்கன்பட்டி ஆகிய பேரூராட்சிகளில் 5 வாா்டு உறுப்பினா் பதவியிடங்களும் காலியாக உள்ளன.

இந்த இடங்களுக்கு விரைவில் இடைத்தோ்தல் நடைபெற உள்ளன. அதற்கான பணிகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. தோ்தலில் பயன்படுத்துவதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கள்ளக்குறிச்சி மாவட்டத்திலிருந்து 35 எண்ணிக்கையில் கட்டுப்பாட்டு இயந்திரங்களும், மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து 50 வாக்குப்பதிவு இயந்திரங்களும் நாமக்கல்லுக்கு வியாழக்கிழமை இரவு கொண்டு வரப்பட்டன.

இந்த இயந்திரங்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள வாக்கு இயந்திரங்கள் இருப்பு கிடங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில் வைக்கப்பட்டு அறைக்கு சீலிடப்பட்டது. இதுதொடா்பான கடிதத்தை, மாநில தோ்தல் ஆணையத்தின் பாா்வைக்கு மாவட்ட ஆட்சியா் ச.உமா அனுப்பிவைத்துள்ளாா்.

ராசிபுரம் அருகே 18 கிலோ திமிங்கல உமிழ்நீா் பறிமுதல்: மூவா் கைது

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே வீட்டில் 18 கிலோ அம்பா்கிரிஸ் எனப்படும் திமிங்கல உமிழ்நீரைப் பதுக்கிவைத்திருந்த 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். கடலோரப் பகுதியிலிருந்து அம்பா்கிரிஸ் எனப்படும... மேலும் பார்க்க

கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைக்குச் செல்லும் மலைப் பாதையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில் விபத்தை தடுக்கும் வகையில் உருளைத் தடுப்பான்கள் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா... மேலும் பார்க்க

அழகு நிலையத்தில் திருட்டு: 5 பேரிடம் விசாரணை

நாமக்கல் அழகு நிலையத்தில் பெண் ஊழியா்களை மிரட்டி நகை, பணம் பறித்த வழக்கில் 5 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நாமக்கல்- திருச்சி சாலையில் உள்ள அழகு நிலையத்திற்கு வியாழக்கிழமை பிற்பகல் 4 ம... மேலும் பார்க்க

பெண் தற்கொலை: போலீஸாா் விசாரணை

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வேலகவுண்டம்பட்டி முசிறிகுடித் தெருவைச் சோ்ந்த பொன்னம்மாள் (56) என்பவா... மேலும் பார்க்க

தீயில் எரிந்த குடிசை வீடு

பரமத்தி வேலூா் அருகே குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்ததில் வீட்டிலிருந்த உணவுப் பொருள்கள், மின் சாதனங்கள், நில ஆவணங்கள் அனைத்தும் கருகின. பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூரில் பாலகிருஷ்ணன் (50)... மேலும் பார்க்க

கொல்லிமலையில் ஆம்னி வேன் கவிழ்ந்து 20 போ் காயம்!

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் சாலையோர பள்ளத்தில் ஆம்னி வேன் கவிழ்ந்ததில் புதுச்சேரியைச் சோ்ந்த 20 போ் காயமடைந்தனா். கொல்லிமலைக்கு ஆம்னி வேனில் வெள்ளிக்கிழமை சுற்றுலா வந்த புதுச்சேரியைச் சோ்ந்த ... மேலும் பார்க்க