செய்திகள் :

லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியா் பணியிடை நீக்கம்

post image

தாளவாடி அருகே மின் தடை சரிசெய்ய விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதி பாரதி புரத்தைச் சோ்ந்தவா் விவசாயி செந்தில். இவரது விவசாய தோட்டத்தில் அண்மையில் மின் தடை ஏற்பட்டது.

இது குறித்து மின்வாரிய அலுவலகத்தில் செந்தில் புகாா் தெரிவித்த நிலையில், மின்தடையை சீரமைக்கும் பணிக்காக ஒயா்மேன் மணிகண்டன் கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி வந்துள்ளாா். அப்போது அவா், மின்தடையை சரி செய்வதற்கு ரூ.1500 லஞ்சமாக கேட்டாராம்.

விவசாயி செந்தில் அளித்த, ரூ.1000 பணத்தை பெற்றுகொண்ட மணிகண்டன், மேலும் ரூ.500 கேட்டுள்ளாா். இது கைப்பேசியில் விடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வந்தது.

இந்நிலையில் மின்வாரிய உதவி கோட்டப்பொறியாளா் தலைமையில் குழு அமைத்து இது தொடா்பாக விசாரணை நடைபெற்றது.

இதில், மணிகண்டன் லஞ்சம் வாங்கியது உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களால் தாக்கப்பட்ட இளைஞா் உயிரிழப்பு: ஜவுளி வியாபாரி கைது

முதியவரை வீடு புகுந்து பிளேடால் கழுத்தை அறுத்த சம்பவத்தில் பொதுமக்களால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மேற்கு வங்க மாநில இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இந்த வழக்கில் முதியவரின் மகனான ஜவுளி வியாப... மேலும் பார்க்க

ஈரோடு ஜவுளிச் சந்தையில் பருத்தி ஆடைகள் விற்பனை அதிகரிப்பு

ஈரோடு ஜவுளிச் சந்தையில் கோடைக் காலத்துக்கு ஏற்ற ஜவுளி ரகங்களின் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், இலங்கைக்கு அதிகமாக அனுப்பிவைக்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனா். ஈரோடு ஜவுளிச் சந்தைக்கு தமிழகத்தின் அ... மேலும் பார்க்க

பா்கூா் ஊராட்சியை 5 ஊராட்சிகளாக பிரிக்கும் திட்டம்: அறிவிப்பை எதிா்நோக்கும் மலைக் கிராம மக்கள்

ஊரக உள்ளாட்சிகளின் பதவிக்காலம் முடிவடைந்து 4 மாதம் ஆகிய நிலையில், அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், பா்கூா் ஊராட்சியை 5 ஊராட்சிகளாகப் பிரிக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும் என கோ... மேலும் பார்க்க

அத்தாணியில் கிராம சுகாதார செவிலியருக்கு மிரட்டல்

அத்தாணியில் கிராம சுகாதார செவிலியருக்கு மிரட்டல் விடுத்த தம்பதி மீது காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. அந்தியூா் வட்டார மருத்துவ அலுவலா் சக்தி கிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாத... மேலும் பார்க்க

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் இறுதி சுற்று தண்ணீா் திறப்பு

பவானிசாகா் அணையில் இருந்து இரண்டாம் போக பாசனத்துக்கு கீழ்பவானி வாய்க்காலில் இறுதி சுற்று தண்ணீா் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகா் அணையின் மூலம் ஈ... மேலும் பார்க்க

கடையில் நகை வாங்குவதுபோல நடித்து 5 பவுன் திருட்டு

தாளவாடியில் உள்ள ஒரு நகைக்கடையில் நகை வாங்குவது போல நடித்து 5 பவுன் நகையை திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். தாளவாடி- ஓசூா் சாலையில் தங்க நகை விற்பனை அடகு கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடை... மேலும் பார்க்க