செய்திகள் :

போதைப்பொருளை கடலில் போட்டு தப்பிய கடத்தல் கும்பல்; 300 கிலோ மீட்பு.. குஜராத்தில் நடந்தது என்ன?

post image

குஜராத் கடல் பகுதியில் அடிக்கடி போதைப்பொருள் கடத்தி வரப்படுவது வழக்கமாக இருக்கிறது. குஜராத் கடல் பகுதி மட்டுமல்லாது குஜராத் துறைமுகத்திற்கும் வெளிநாட்டில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தி வரப்படும் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது.

அடிக்கடி பாகிஸ்தான் கடத்தல்காரர்கள் குஜராத்திற்குள் படகில் போதைப்பொருளை கடத்தி வருகின்றனர். இதனால் குஜராத் கடல் பகுதியில் எப்போதும் பாதுகாப்பு பலமாக இருக்கும்.

குஜராத் எல்லைக்குள் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக குஜராத் தீவிரவாத தடுப்பு படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனே இது குறித்து கடலில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த கடலோர பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். குஜராத் தீவிரவாத தடுப்பு படையினரும் கடலுக்குள் விரைந்து சென்றனர்.

வேறு இடத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த கடலோர பாதுகாப்புப்படை கப்பல் உடனடியாக சர்வதேச எல்லைக்கு திருப்பிவிடப்பட்டது.

நள்ளிரவில் கடுமையான இருட்டு நிலவியது. அந்த இருட்டையும் பொருட்படுத்தாமல் சந்தேகத்திற்கு இடமான வகையில் மர்ம படகு ஒன்று இந்திய கடல் எல்லைக்குள் வருவதை கவனித்தனர். உடனே அந்த படகை நோக்கி வேகமாக பாதுகாப்புப்படை கப்பலை செலுத்தினர்.

இந்திய கப்பல் வருவதை பார்த்த கடத்தல் கும்பல், படகில் இருந்த போதைப்பொருள்களை கடலில் தூக்கிப்போட்டுவிட்டு அவசர அவசரமாக சர்வதேச கடல் எல்லைக்குள் சென்றுவிட்டனர்.

இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் வருவதற்குள் அவர்கள் சர்வதேச கடல் எல்லைக்குள் சென்றுவிட்டதால் அவர்களை பிடிக்க முடியவில்லை. ஆனால் அவர்கள் கடலில் தூக்கிப்போட்ட போதைப்பொருள் கடலில் மிதந்துகொண்டிருந்தது. இரவு முழுக்க தேடுதல் நடத்தி 300 கிலோ எடையுள்ள மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

மீட்கப்பட்ட போதைப்பொருளுடன் கடலோர பாதுகாப்பு படையினர்

கடத்தல்காரர்கள் எவ்வளவு போதைப்பொருளை கடலில் போட்டார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அதில் 300 கிலோ மட்டுமே சிக்கியது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.1800 கோடியாகும். அப்போதைப்பொருளை போர்பந்தர் கடற்கரைக்கு கொண்டு வந்து குஜராத் தீவிரவாத தடுப்புபடையினரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து குஜராத் சர்வதேச எல்லையில் ரோந்துப்பணி மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

ராஜபாளையம்: 'குடும்ப தகராறில் கணவன் அடித்துக் கொலை'- தற்கொலை நாடகமாடிய தாய்-மகள் கைது!

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே குடும்பத் தகராறில் கணவனை அடித்துக் கொலை செய்துவிட்டு, தற்கொலை நாடகமாடிய சம்பவத்தில் தாய்-மகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போல... மேலும் பார்க்க

ரயில் தண்டவாளத்தில் தண்டால்; சோஷியல் மீடியாவில் பகிரப்பட்ட வீடியோ- இளைஞரை எச்சரித்து அனுப்பிய போலீஸ்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் அருகே தாமரை குட்டி விளைபகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். 90 கிலோ உடல் எடை கொண்ட கண்ணன், தனது எடையை விட 4 மடங்கு எடை கொண்ட 370 கிலோ காரை, யோக் வாக் என்ற முறைப்படி 25 மீட்ட... மேலும் பார்க்க

`பணம் திருடியதாக சந்தேகம்’ வேதனையில் 4வது மாடியில் இருந்து விபரீத முடிவெடுத்த கோவை மாணவி

கோவை நவ இந்தியா பகுதியில் இந்துஸ்தான் மருத்துவமனை இயங்கி வருகிறது. அவர்களுக்கு சொந்தமாக பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரியும் உள்ளது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். அங்கு திருவண்... மேலும் பார்க்க

`இருட்டுக்கடையைக் கேட்டு கொடுமை செய்கிறார்கள்' - கணவர் வீட்டார் மீது புதுமணப்பெண் வரதட்சணை புகார்!

``இருட்டுக்கடை அல்வா கடையை தன் பெயருக்கு எழுதிக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வேறொரு பெண்ணுடன் குடித்தனம் நடத்துவேன்" என தன் கணவர் மிரட்டியதாக புதுமணப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ... மேலும் பார்க்க

இன்ஸ்டா வீடியோவில் காதல்; துப்பட்டாவால் கொலை செய்யப்பட்ட கணவன் - ஹரியானாவில் அதிர்ச்சி

ஹரியானாவில் உள்ள பிரேம் நகரில் வசிப்பவர் ரவீனா(32). இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சுரேஷ் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் சேர்ந்து வீடியோக்களை உருவாக்கி யூடியூப் மற்றும் சமூக வலைதளத்தில் வெளியிட ... மேலும் பார்க்க

Ooty: அனுமதியோ 40 மரங்களுக்கு, வெட்டிக் கடத்தப்பட்டதோ 250 மரங்கள்! என்ன நடந்தது?

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள சோலூர் பேரூராட்சி உட்பட்ட மணிக்கல் பகுதியில் அமைந்திருக்கிறது கழிவு மேலாண்மை கூடம். நீலகிரி தைல மரங்கள் எனப்படும் யூக்கலிப்டஸ் மரங்கள் நிறைந்த இந்த பகுதியில் நாள்தோ... மேலும் பார்க்க