செய்திகள் :

ரஷியாவில் தலிபான்கள் மீதானத் தடை நீக்கம்?

post image

ரஷியாவில் தலிபான்கள் மீதானத் தடையானது விரைவில் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் நாட்டை ஆளும் தலிபான்கள் மீதானத் தடை நீக்கப்பட்டு அந்நாட்டுடனான ராஜதந்திர உறவுகளை மேம்படுத்தும் முயற்சியாக ரஷியாவின் உச்ச நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞரால் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவுக்கு நாளை (ஏப்.17) தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த தலிபான் இயக்கத்தை கடந்த 2003-ம் ஆண்டு ரஷியா தீவிரவாத அமைப்பாக அறிவித்தது. இந்நிலையில், அந்தத் தடையை நீக்குமாறு ரஷியாவின் அரசு வழக்கறிஞரான ஜெனரல் இகோர் கிராஸ்னோவ் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்படவுள்ள நிலையில் அரசு கோரியதைப் போல் தலிபான்கள் மீதானத் தடை நீக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

முன்னதாக, கடந்த 2024-ம் ஆண்டின் மே மாதம், ரஷியாவின் வெளியுறவுத் துறை மற்றும் நீதித் துறை அமைச்சகம் அதிபர் விளாடிமீர் புதினிடம் அறிக்கை ஒன்றை சமர்பித்தனர்.

அந்த அறிக்கையில் தலிபான்களை தீவிரவாதிகளின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு, ஆப்கானிஸ்தான் அரசுடன் ராஜதந்திர உறவுகளை மேம்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

கடந்த 2021-ம் ஆண்டு அமெரிக்க படைகள் வெளியேறிய பின்னர் ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைத்த தலிபான் அரசுடன் சில மத்திய ஆசிய நாடுகள் ராஜதந்திர உறவுகளை நிறுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:தொடர்ந்து பரவும் நோயினால் அங்கீகாரத்தை இழக்கும் அமெரிக்கா?

பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் 4 தீவிரவாதிகள் பலி!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைபர் பக்துன்குவா மாகாணத்தின் ஸ்வாத் மாவட்... மேலும் பார்க்க

முகலாய மன்னரின் சுவரோவியத்தின் மீது கருப்புச் சாயம் பூச்சு!

உத்தரப் பிரதேசத்தின் ரயில் நிலையத்திலுள்ள முகலாய மன்னரின் சுவரோவியத்தின் மீது இந்து வலதுசாரி அமைப்பினர் கருப்புச் சாயம் பூசியுள்ளனர். காசியாபாத் ரயில் நிலையத்தில் வரையப்பட்டிருந்த முகாலாப் பேரரசின் கட... மேலும் பார்க்க

நேபாளம்: சுற்றுலாப் பேருந்து விபத்தில் 21 இந்தியர்கள் படுகாயம்!

நேபாளத்தில் சுற்றுலாப் பேருந்து விபத்தில் 21 இந்தியர்கள் படுகாயமடைந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் லக்னௌ மாவட்டத்தைச் சேர்ந்த பேருந்தின் மூலம் நேபாளத்தின் பிரபல சுற்றுலாத் தளமான போகராவிற்கு 25-க்கும் ... மேலும் பார்க்க

வாகன விபத்தில் 9 ஒட்டகங்கள் பலி! நெடுஞ்சாலையை முடக்கிய கிராமவாசிகள்!

ராஜஸ்தானின் பலோடி மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த வாகனம் மோதியதில் 9 ஒட்டகங்கள் பலியானதினால் கிராமவாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பலோடியின் போஜஸார் பகுதியில் பரத்மாலா நெடுஞ்சாலையில் நேற்ற... மேலும் பார்க்க

அரிசியால் உண்டாகும் புற்றுநோய்? 2050-க்குள் பாதிப்படையும் இந்தியா?

வரும் 2050-க்குள் ஆசிய நாடுகளில் உற்பத்தியாகும் அரிசியினால் அந்நாடுகளின் மக்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கக் கூடும் என அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்... மேலும் பார்க்க

யேமனின் எண்ணெய்த் துறைமுகத்தின் மீது அமெரிக்கா தாக்குதல்! 58 பேர் பலி!

யேமன் நாட்டின் எண்ணெய்த் துறைமுகத்தின் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 58 பேர் கொல்லப்பட்டனர்.யேமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சிப்படையின் கட்டுப்பாட்டிலுள்ள ராஸ் இஸா எண்ணெய்த் துறைமுகத்தின் ம... மேலும் பார்க்க