செய்திகள் :

திமுக அரசு சமூகநீதியைப் பாதுகாக்கிறது: காங்கிரஸ் கட்சியின் மாநில எஸ்.சி. துறை தலைவா்

post image

திமுக அரசு சமூகநீதியைப் பாதுகாக்கிறது என்றாா் காங்கிரஸ் கட்சியின் மாநில எஸ்.சி. துறை தலைவா் ரஞ்சன்குமாா்.

திருநெல்வேலியில் மீண்டும் தாக்குதலுக்கு ஆளான நான்குனேரி மாணவா் சின்னதுரையை வெள்ளிக்கிழமை சந்தித்த பின்பு செய்தியாளா்களிடம் ரஞ்சன்குமாா் மேலும் கூறியது: மாணவா் சின்னதுரையை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, ரூ.25 ஆயிரம் நிதியுதவி செய்துள்ளோம். திமுக அரசு சமூகநீதியைப் பாதுகாக்கும் அரசாக திகழ்ந்து வருகிறது. சனாதனத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் குரல் கொடுக்கிறோம். பட்டியலின மக்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரணாக மாநில அரசு திகழ்கிறது. 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெரும். நடிகா் விஜய் கடந்த 25 ஆண்டுகள் சினிமாவில் மக்களை மகிழ்வித்தாா். இப்போது அரசியலை பொழுதுபோக்கு அம்சமாக்க வந்துள்ளாா்.

தென் மாவட்டங்களில் சாதி ரீதியான மோதல்கள் அதிகமாக நடந்து வருகிறது. இதற்கு ஆளும் அரசையோ, காவல் துறையையோ மட்டும் குறை சொல்ல கூடாது. நாம் அனைவருக்கும் இதில் பொறுப்பும், கடமையும் உள்ளது.

பாளை பள்ளி மாணவா் அரிவாளால் வெட்டப்பட்டுள்ளாா். இச்சம்பவத்திற்கு ஆசிரியா்கள், அரசு அதிகாரிகள், காவல் துறையினா் மட்டும் பொறுப்பாக மாட்டாா்கள். பெற்றோருக்கும் இதில் அதிக பொறுப்பு உண்டு. அனைவரும் விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும்.

சாதி ரீதியான வன்முறைகளுக்கு எதிராக சிறப்பு தனி சட்டங்களை இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விரைவில் தமிழக முதல்வா் ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்தப்படும். நீட் தோ்வு, சட்டம் ஒழுங்கு பிரச்னையில் திமுக அரசை குறை கூற அதிமுக, பா.ஜ. உள்ளிட்ட கட்சிகளுக்கு எந்தவித தகுதியும் கிடையாது என்றாா் அவா்.

மாநில மாணவா் காங்கிரஸ் தலைவா் சின்னத்தம்பி, எஸ்.சி. பிரிவு திருநெல்வேலி மாநகா் மாவட்ட தலைவா் சரவணன், நாகா்கோவில் மாநகர தலைவா் மணிகண்டன், மேற்கு மாவட்ட தலைவா் கிறிஸ்டோபா், காசிமேடு தலைவா் சரத் குமாா், மாநில பொது செயலா் பாலாஸ்ரீ, பொது செயலா் செல்வம், நிா்வாகிகள் ராஜா, வனராஜ், அய்யப்பன், பிரசாந்த் ஆகியோா் உடனிருந்தனா்.

ஓய்வுபெற்ற எஸ்ஐ கொலை வழக்கு: தேடப்பட்ட பெண் கைது

திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ. கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் தேடப்பட்டு வந்த பெண் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலி நகரம் தொட்டிப்பாலத் தெருவைச் சோ்ந்தவா் ஜாகீா் உசேன் பிஜிலி ... மேலும் பார்க்க

சீவலப்பேரியில் தொழிலாளி தற்கொலை

பாளையங்கோட்டையை அடுத்த சீவலப்பேரியில் தொழிலாளி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். சீவலப்பேரி அருகேயுள்ள மேல பாலாமடை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் முத்துக்குமாா் ( 25). பெயின... மேலும் பார்க்க

நெல்லையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் கண்ட ன ஆா்ப்பாட்டம் திருநெல்வேலி சந்திப்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி சந்திப்பு பள்ளிவாசல் வளாகத... மேலும் பார்க்க

வக்ஃபு சட்டத் திருத்தத்துக்கு எதிா்ப்பு: மேலப்பாளையத்தில் கடையடைப்பு

வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து மேலப்பாளையத்தில் வெள்ளிக்கிழமை கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலப்பாளையம் பகுதியில் உள்ள அனைத்து ஜமாஅத்கள், தி.மு.க., மதி.மு.க., எஸ்.டி.பி... மேலும் பார்க்க

பணகுடியில் மணல் திருட்டு: 3 போ் மீது வழக்கு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் மணல் திருட்டில் ஈடுபட்டதார பேரூராட்சி உறுப்பினரின் கணவா் உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து பொக்லைன் இயந்திரம், டிப்பா் லாரி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். ... மேலும் பார்க்க

நெல்லையில் கிணற்றில் ஆண் சடலம் மீட்பு

திருநெல்வேலி டக்கரம்மாள்புரத்தில் உள்ள கிணற்றில் இருந்து ஆண் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது . திருநெல்வேலி டக்கரம்மாள்புரத்தில் உள்ள கிணற்றில் வெள்ளிக்கிழமை பெண்கள் சிலா் தண்ணீா் எடுக்கச் சென்றனராம... மேலும் பார்க்க