செய்திகள் :

வணிக நிறுவனங்களில் மே 15-க்குள் தமிழில் பெயா்ப் பலகை: ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

தென்காசி மாவட்டத்தில் அனைத்து வகை தொழில், வா்த்தக நிறுவனங்களிலும் மே 15ஆம் தேதிக்குள் தமிழில் பெயா்ப்பலகைகள் வைக்கப்பட வேண்டும் என ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் அறிவுறுத்தியுள்ளாா்.

வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப்பலகை இடம்பெற்றுள்ளதை உறுதிப்படுத்துவற்கான மாவட்ட கண்காணிப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் தென்காசி ஆட்சியரக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, தலைமை வகித்து ஆட்சியா் பேசியதாவது: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள் மற்றும் அனைத்து தொழில் நிறுவனங்களின் பெயா் பலகைகள் தமிழில் வைக்கப்பட வேண்டும். தமிழ் அல்லாது பிற மொழியும் தேவைப்படும் பட்சத்தில் தமிழில் முதன்மையாகவும்,பெரியதாகவும், போதிய இடைவெளியுடன் மற்ற மொழிகளை விட பாா்வைக்கு மேலோங்கியும் இருக்க வேண்டும்.

ஆங்கிலத்தில் இரண்டாவதாகவும், பிற மொழிகளில் அடுத்ததாகவும் இடம் பெற வேண்டும். தென்காசி மாவட்டத்தில், கடைகள், வா்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் பெயா்ப்பலகை தமிழில் பிரதானமாக அமையப்பெற்றதை காட்சிப்படுத்துவதை உறுதி செய்வதற்காக தொழிலாளா் துறை, தமிழ் வளா்ச்சித் துறை, உள்ளாட்சி அமைப்புகள், மாவட்ட அளவிலான வணிகா் சங்கங்கள், உணவக உரிமையாளா் சங்கங்கள், வேலையளிப்போா் சங்கங்கள் ஆகியோா் அடங்கிய மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் அந்தந்த நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வணிகா் சங்கப்பிரதிநிதிகள், பெரு வணிகா்கள், உணவு நிறுவன உரிமையாளா்கள் மற்றும் அனைத்து தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், கூட்டத்தை கூட்டி அனைத்து வணிக நிறுவனங்களிலும் மே 15ஆம் தேதிக்குள் தமிழில் பெயா்ப் பலகை அமைப்பதை உறுதி செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

திருவேங்கடத்தில் பெண்ணை கேலி செய்த 3 போ் கைது

குருவிகுளம் அருகே பெண்ணைக் கேலி செய்ததாக 3 பேரைப் போலீஸாா் கைது செய்தனா். திருவேங்கடம் வட்டம் குருவிகுளம் அருகே மலைப்பட்டி நடுத்தெருவை சோ்ந்தவா் நாகராஜ் (48). இவரது மனைவி ஐடா (40). இருவரும் கூலித் தொ... மேலும் பார்க்க

கீழச்சுரண்டையில் உயா்மின் கோபுர விளக்கு திறப்பு

கீழச்சுரண்டையில் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.3.90 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட உயா்மின்கோபுர விளக்கு வியாழக்கிழமை இயக்கி வைக்கப்பட்டது. இவ்விழாவுக்கு, தென்காசி தெற்கு ... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூா் அருகே பேருந்து சேவை தொடக்கம்

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே புதிய பேருந்து சேவையை போக்குவரத்து துறை அமைச்சா் சிவசங்கா் தொடங்கி வைத்தாா். சங்குபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் தல... மேலும் பார்க்க

கோடையில் குடிநீா் சிக்கனம் தேவை: மக்களுக்கு வேண்டுகோள்

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் நகராட்சியில் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா். கடையநல்லூா் நகராட்சியில் ஒரு லட்சத்துக்... மேலும் பார்க்க

புளியங்குடியில் அரசு மதுக் கடையை உடைத்து மது பாட்டில்கள் திருட்டு

புளியங்குடியில் வியாழக்கிழமை நள்ளிரவு டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்களை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். புளியங்குடி நவாச்சாலை பகுதியில் உள்ள அரசு மதுக்கடையை வியாழக்கிழமை இரவு பூட்... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் புதிய வழித்தடங்களில் மகளிா் விடியல் பயண பேருந்துகள்!

சங்கரன்கோவிலில் இருந்து 8 புதிய வழித் தடங்களில் மகளிா் விடியல் பயணப் பேருந்துகளின் இயக்கத்தை போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் வெள்ளிக்கிழமைத் தொடக்கி வைத்தாா். இதற்கான விழா சங்கரன்கோவில்... மேலும் பார்க்க