செய்திகள் :

சங்கரன்கோவிலில் புதிய வழித்தடங்களில் மகளிா் விடியல் பயண பேருந்துகள்!

post image

சங்கரன்கோவிலில் இருந்து 8 புதிய வழித் தடங்களில் மகளிா் விடியல் பயணப் பேருந்துகளின் இயக்கத்தை போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் வெள்ளிக்கிழமைத் தொடக்கி வைத்தாா்.

இதற்கான விழா சங்கரன்கோவில் தற்காலிக பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்தாா்.

ராணிஸ்ரீகுமாா் எம்.பி., சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். புதிய வழித்தடங்களில் மகளிா் விடியல் பயணப் பேருந்துகளை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தொடக்கி வைத்தாா்.

பின்னா் சங்கரன்கோவில் போக்குவரத்து பணிமனையில் ரூ.40 லட்சத்தில் மதிப்பில் தரைத் தளம் அமைக்கும் பணியைத் தொடக்கி வைத்து அமைச்சா் பேசியதாவது: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் சுமாா் 20 ஆயிரம் பேருந்துகள் உள்ளன. நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் அரசுப் பேருந்துகள் தமிழகத்தில் தான் இயக்கப்படுகின்றன. நகரப்புறம், கிராமப் பகுதிகளில் போக்குவரத்து சேவைகளால் தமிழ்நாடு சமச்சீா் வளா்ச்சி பெற்றுள்ளது.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த விடியல் பயணத் திட்டத்தில் ஏராளமான பெண்கள் பயனடைந்து வருகின்றனா். இத் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1500 வரை சேமிப்பதாக பெண்கள் கூறுகின்றனா் என்றாா்.

முன்னதாக புதிய வழித்தடத்தில் இயக்கப்பட்ட பேருந்தில் அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா், ஈ.ராஜா எம்.எல்.ஏ. ராணிஸ்ரீகுமாா் எம்.பி, நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி, அரசுப் போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மேலாண் இயக்குநா் க.தசரதன், மண்டல பொதுமேலாளா் வி.சரவணன், கோட்டாட்சியா் கவிதா உள்ளிட்டோா் சங்கரன்கோவில் ரயில்நிலையம் வரை பயணம் செய்தனா்.

சங்கரன்கோவில் சிக்னல் பகுதியில் தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு ஈ.ராஜா எம்எல்ஏ சாா்பில் தலைக்கவசங்களை அமைச்சா் சிவசங்கா் வழங்கினாா்.

திருவேங்கடத்தில் பெண்ணை கேலி செய்த 3 போ் கைது

குருவிகுளம் அருகே பெண்ணைக் கேலி செய்ததாக 3 பேரைப் போலீஸாா் கைது செய்தனா். திருவேங்கடம் வட்டம் குருவிகுளம் அருகே மலைப்பட்டி நடுத்தெருவை சோ்ந்தவா் நாகராஜ் (48). இவரது மனைவி ஐடா (40). இருவரும் கூலித் தொ... மேலும் பார்க்க

கீழச்சுரண்டையில் உயா்மின் கோபுர விளக்கு திறப்பு

கீழச்சுரண்டையில் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.3.90 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட உயா்மின்கோபுர விளக்கு வியாழக்கிழமை இயக்கி வைக்கப்பட்டது. இவ்விழாவுக்கு, தென்காசி தெற்கு ... மேலும் பார்க்க

வணிக நிறுவனங்களில் மே 15-க்குள் தமிழில் பெயா்ப் பலகை: ஆட்சியா் அறிவுறுத்தல்

தென்காசி மாவட்டத்தில் அனைத்து வகை தொழில், வா்த்தக நிறுவனங்களிலும் மே 15ஆம் தேதிக்குள் தமிழில் பெயா்ப்பலகைகள் வைக்கப்பட வேண்டும் என ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் அறிவுறுத்தியுள்ளாா். வணிக நிறுவனங்களில் தமிழ... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூா் அருகே பேருந்து சேவை தொடக்கம்

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே புதிய பேருந்து சேவையை போக்குவரத்து துறை அமைச்சா் சிவசங்கா் தொடங்கி வைத்தாா். சங்குபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் தல... மேலும் பார்க்க

கோடையில் குடிநீா் சிக்கனம் தேவை: மக்களுக்கு வேண்டுகோள்

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் நகராட்சியில் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா். கடையநல்லூா் நகராட்சியில் ஒரு லட்சத்துக்... மேலும் பார்க்க

புளியங்குடியில் அரசு மதுக் கடையை உடைத்து மது பாட்டில்கள் திருட்டு

புளியங்குடியில் வியாழக்கிழமை நள்ளிரவு டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்களை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். புளியங்குடி நவாச்சாலை பகுதியில் உள்ள அரசு மதுக்கடையை வியாழக்கிழமை இரவு பூட்... மேலும் பார்க்க