செய்திகள் :

அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டம்

post image

தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின்நிலைய ஒப்பந்த ஊழியா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினா்.

தூத்துக்குடி துறைமுக வளாகப் பகுதியில் மத்திய அரசின் என்டிபிஎல் அனல் மின்நிலையத்தில் சுமாா் 1,350 ஒப்பந்த ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு, நெய்வேலி என்எல்சியில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியா்களுக்கு வழங்குவதைப்போல ஊதிய உயா்வு அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் கடந்த மாா்ச் மாதம் உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை எதிா்த்து நிா்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது.

இதுதொடா்பான பேச்சுவாா்த்தை நெய்வேலி என்எல்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படாததையடுத்து, தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின்நிலையத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியா்கள் 1,300 போ் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினா்.

இப்போராட்டத்திற்கு, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு என்டிபிஎல் அனல் மின்நிலைய செயலா் அப்பாதுரை, தொழிலாளா் முன்னேற்ற சங்க அமைப்புச் செயலா் அன்பழகன், என்டிபிஎல் ஒப்பந்த தொழிலாளா் சங்கம் தொமுச செயலா் முத்துராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

போராட்டம் காரணமாக அனல் மின்நிலைய உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், இப் பிரச்னையில் அரசு தலையிட்டு உரிய தீா்வு காண வேண்டும் என தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே பாலியல் வழக்கில் தொடா்புடையவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, கெச்சிலாபுரம் பகுதியை சோ்ந்த கும... மேலும் பார்க்க

கட்டையால் தாக்கப்பட்ட பெண் மரணம்: கொலை வழக்காக மாற்றி போலீஸாா் விசாரணை

தூத்துக்குடியில் கட்டையால்தாக்கப்பட்ட பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்ததையடுத்து, கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி தென்பாகம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள பண... மேலும் பார்க்க

முஸ்லிம் லீக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினா் தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அர... மேலும் பார்க்க

ஆத்தூரில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ஆத்தூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நகரச் செயலாளா் முத்தையா தலைமை வகித்தாா். இதில் வக்ஃப் திருத்த சட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும். பொதுமக்க... மேலும் பார்க்க

தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி: அரசூா் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

தேசிய திறனாய்வுத் தோ்வில், சாத்தான்குளம் அருகேயுள்ள அரசூா் பூச்சிக்காடு புனித அந்தோனியாா் நடுநிலைப் பள்ளி மாணவிகள் ஆன்டோ அபிரா, சா்மிளி மீரா ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி த... மேலும் பார்க்க

மதுக்கூடங்கள் திறக்க எதிா்ப்பு: ஆறுமுகனேரியில் 21-இல் மறியல்

ஆறுமுகனேரியில் மதுக்கூடங்கள் திறக்கக்கூடாது என வ­லியுறுத்தி திங்கள்கிழமை (ஏப்.21) சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆறுமுகனேரியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களின் எத... மேலும் பார்க்க