செய்திகள் :

அரிசியால் உண்டாகும் புற்றுநோய்? 2050-க்குள் பாதிப்படையும் இந்தியா?

post image

வரும் 2050-க்குள் ஆசிய நாடுகளில் உற்பத்தியாகும் அரிசியினால் அந்நாடுகளின் மக்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கக் கூடும் என அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் காலநிலை வெப்பம் 2 டிகிரி செல்சியஸ்-க்கும் மேலாக உயர்வதினாலும், கார்பன் டை ஆக்சைடு வாயு அதிகரிப்பதினாலும் மண்ணின் ரசாயணத் தன்மை மாறுபடும் என்றும் அதனால் அதில் உண்டாகும் இயற்கையல்லாத ஆர்சனிக் (ஆர்கானிக் ஆர்சனிக்) எனும் அமிலம் அதிகரித்து மண்ணிலிருந்து நெற்ப் பயிருக்குள் உறிஞ்சப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், நெல் வளர்ப்பின்போது மாசுப்பெற்ற மண்ணாலும், பாசனத்துக்குப் பயன்படுத்தப்பட்ட தண்ணீராலும் அரிசியில் உள்ள இயற்கையல்லாத ஆர்சனிக் அதிகரிக்கக் கூடும் எனவும் ஆர்சனிக் அமிலம் அதிகம் உட்கொள்ளப்படுவதினால் நுரையீரல், சிறுநீர்ப்பை மற்றும் தோல் போன்றவற்றில் ஏற்படும் புற்றுநோய்களின் அபாயம் அதிகரிப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், அரிசி சமையலுக்குப் பயன்படுத்தப்படும் தண்ணீரிலிருந்தும் கூடுதல் ஆர்சனிக்கை உறிஞ்சிவிடும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் லீவிஸ் ஸிஸ்கா கூறுகையில், மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளின் மூலம் ஆர்சனிக் அமிலம் அதிகரிப்பதினால் நீரிழிவு நோய், இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் அல்லாத உடல் பாதிப்புகளும் ஏற்படக் கூடும் எனவும் உலகின் பெரும்பாலான நாடுகளில் அரிசி பிரதானமான உணவாக உட்கொள்ளப்படுவதினால், உலகளவில் புற்றுநோய், இதய நோய் ஆகியவை பெரும் சுமையாக மாறக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அரசியைப் பிரதான உணவாக தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளான இந்தியா, சீனா, பிலிப்பின்ஸ், வங்கதேசம், நேபாளம், தாய்லாந்து மற்றும் வியட்னாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் உட்கொண்டு வருகின்றனர்.

எனவே, வரும் 2025-ம் ஆண்டுக்குள் அந்நாடுகளின் மக்களின் ஆரோக்கியத்திற்கு அரிசி மிகப் பெரிய அச்சுறுத்தலாக உருவாகக் கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் 10 ஆண்டுகளில் 28 வகை அரிசிகளில் அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் கார்பன் டை ஆக்சைட் ஆகியவற்றின் விளைவுகளை ஆராய்ச்சியாளர்கள் அளவிட்டுள்ளனர்.

இருப்பினும், அரிசியிலுள்ள ஆர்சனிக் அமிலத்தின் மீதான கார்பன் டை ஆக்சைட் மற்றும் வெப்பநிலைகளின் ஒருங்கிணைந்த விளைவுகள் (கம்பைண்ட் எஃபெக்ட்ஸ்) குறித்து இதுவரை விரிவான ஆய்வுகள் செய்யப்படவில்லை என ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.

இதில், அரிசியில் உண்டாகும் இயற்கையல்லாத ஆர்சனிக்கின் விளைவாக பாதிக்கப்படப் போகும் நாடுகளில் சீனா முதல் இடத்தில் உள்ளதெனவும்; அந்நாட்டில், சுமார் 1.34 கோடி பேருக்கு புற்றுநோய் ஏற்படக் கூடும் எனவும் அந்த ஆய்வின் முடிவில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:யேமனின் எண்ணெய்த் துறைமுகத்தின் மீது அமெரிக்கா தாக்குதல்! 74 பேர் பலி!

இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும்: நயினார் நாகேந்திரன்

சேலம்: இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும் என சேலத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் சேலம் பெருங்கோட்ட நிர்வாகிகள் சந்தி... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்றம் சுயமாக செயலாற்றக் கூடாது என நினைக்கிறார்கள்: அமைச்சர் எஸ். ரகுபதி

புதுக்கோட்டை: உச்ச நீதிமன்றம் சுயமாக செயலாற்றக் கூடாது என மத்தியில் ஆள்வோர் நினைக்கிறார்கள் என மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்தார்.புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவர் செய்திளார்களுடனான சந்... மேலும் பார்க்க

குலத்தொழில் திட்டத்தை தமிழ்நாடு அனுமதிக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: 1950-களில் குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து களம் கண்ட தமிழ்நாடு, குலத்தொழில் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்காது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டம் குன... மேலும் பார்க்க

வைகோவுடன் துரை வைகோ சந்திப்பு!

மதிமுகவின் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்த துரை வைகோ, கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திருச்சி எம்... மேலும் பார்க்க

மதிமுகவிலும் மோதல்? முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல்

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினர் துரை வைகோ சனிக்கிழமை அறிவித்துள்ளார். மேலும் பார்க்க

தூத்துக்குடி: நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விலை உயர்வு

தூத்துக்குடி: கடலில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதை அடுத்து தூத்துக்குடி நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டது. அதிகபட்சமாக சீலா ஒரு கிலோ ரூ.1,300-க்கு விற்பனை செய்ய... மேலும் பார்க்க