செய்திகள் :

குலத்தொழில் திட்டத்தை தமிழ்நாடு அனுமதிக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

post image

சென்னை: 1950-களில் குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து களம் கண்ட தமிழ்நாடு, குலத்தொழில் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்காது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் உள்ள சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் கைவினை திட்டம் தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.

குரு.சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் விழாவிற்கு முன்னிலை வகித்தார். இந்த விழாவில் 8,951 கைவினை கலைஞர்களுக்கு தலா ரூ.3 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பேசியதாவது:

அண்மையில் மத்திய அரசு விஸ்வகர்மா திட்டம் என்ற ஒரு திட்டத்தை கொண்டு வந்தது.இந்த திட்டமானது குலக்கல்வியை மட்டும் ஆதரிக்கும் திட்டமாகவும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் வளரச் செய்யும் திட்டமாகவும் இருந்தது. இது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதினேன் அந்த கடிதத்தில் விஸ்வகர்மா திட்டத்தில் உள்ள குறைகளை நீக்குமாறு எழுதி இருந்தேன். ஆனால் மத்திய அரசு எனது கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது.

பின்னர் மத்திய அரசின் குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சகத்துக்கு எனது எதிர்ப்பை தெரிவித்து கடிதம் எழுதினேன்.

எந்த திட்டமாக இருந்தாலும் சமூகநீதியை, சமத்துவத்தை நிலைநாட்டுவதாக இருக்க வேண்டும். மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் சமூகநீதிக்கானது அல்ல. சமூக நீதியை நிலைநாட்டும் வகையில், சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டாத வகையில், கைவினைக் கலைஞர்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் உருவாக்கட்டதுதான் கலைஞர் கைவினைத் திட்டம். இதுதான் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டதற்கான அரசியல் பின்னணி.

மதிமுகவிலும் மோதல்? முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல்

விஸ்வகர்மா திட்டத்தின்மூலம் இளைஞர்களை குலத்தொழிலில் தள்ளிவிட மத்தியில் ஆளும் பாஜக அரசு முயற்சிக்கிறது. சாதிய வேறுபாடுகள் நிறைந்த இந்திய சமூகத்தில் விஸ்வகர்மா திட்டம் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்? இதனை மனசாட்சி உள்ள ஒருவர் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்?.

மத்திய அரசு கொண்டு வந்த திட்டத்தில் உள்ள அனைத்து குறைகளையும் நீக்கி திராவிட மாடல் அரசு கொண்டுவந்த கலைஞர் கைவினைத் திட்டம் பல கைவினை கலைஞர்களையும் வாழ வைக்கும் திட்டமாக இருக்கும்.

மானியத்துடன் கூடிய கடனுதவிகளை கைவினைக் கலைஞர்களுக்கு வழங்கும் திட்டம். இந்த திட்டமானது சம நீதியையும் சமூக நீதியையும் வளர்க்கும் திட்டமாக இருக்கும்.

1950-களில் குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து களம் கண்ட தமிழ்நாடு, குலத்தொழில் திட்டத்தை ஒருபோதும் செயல்படுத்த மாட்டோம்.

எனவே கைவினைக் கலைஞர்கள் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாழ்வில் உயர்ந்திட வேண்டுகிறேன் என முதல்வர் கூறினார்.

விழாவில் அரசு உயர் அதிகாரிகள்,நாடாளுமன்றம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் மக்கள் கைவினைக் கலைஞர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும்: நயினார் நாகேந்திரன்

சேலம்: இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும் என சேலத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் சேலம் பெருங்கோட்ட நிர்வாகிகள் சந்தி... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்றம் சுயமாக செயலாற்றக் கூடாது என நினைக்கிறார்கள்: அமைச்சர் எஸ். ரகுபதி

புதுக்கோட்டை: உச்ச நீதிமன்றம் சுயமாக செயலாற்றக் கூடாது என மத்தியில் ஆள்வோர் நினைக்கிறார்கள் என மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்தார்.புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவர் செய்திளார்களுடனான சந்... மேலும் பார்க்க

வைகோவுடன் துரை வைகோ சந்திப்பு!

மதிமுகவின் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்த துரை வைகோ, கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திருச்சி எம்... மேலும் பார்க்க

மதிமுகவிலும் மோதல்? முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல்

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினர் துரை வைகோ சனிக்கிழமை அறிவித்துள்ளார். மேலும் பார்க்க

தூத்துக்குடி: நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விலை உயர்வு

தூத்துக்குடி: கடலில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதை அடுத்து தூத்துக்குடி நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டது. அதிகபட்சமாக சீலா ஒரு கிலோ ரூ.1,300-க்கு விற்பனை செய்ய... மேலும் பார்க்க

மேல்பாதி திரௌபதியம்மன் கோயில்: 3 ஆவது நாளாக தரிசனம் செய்ய வராத மக்கள்!

விழுப்புரம்: மேல்பாதி அருள்மிகு திரௌபதியம்மன் திருக்கோயில் வழிபாட்டுக்காக மூன்றாவது நாளாக சனிக்கிழமை காலை திறக்கப்பட்டது. ஆனால், மக்கள் யாரும் தரிசனம் செய்ய வரவில்லை.மேல்பாதி கிராமத்திலுள்ள அருள்மிகு ... மேலும் பார்க்க