செய்திகள் :

மேல்பாதி திரௌபதியம்மன் கோயில்: 3 ஆவது நாளாக தரிசனம் செய்ய வராத மக்கள்!

post image

விழுப்புரம்: மேல்பாதி அருள்மிகு திரௌபதியம்மன் திருக்கோயில் வழிபாட்டுக்காக மூன்றாவது நாளாக சனிக்கிழமை காலை திறக்கப்பட்டது. ஆனால், மக்கள் யாரும் தரிசனம் செய்ய வரவில்லை.

மேல்பாதி கிராமத்திலுள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்வது தொடா்பாக இரு சமுதாய மக்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, 2023, ஜூன் 7-ஆம் தேதி வருவாய்த் துறையினரால் கோயில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் அடிப்படையில், அனைத்து சமுதாயத்தினரும் கோயிலுக்குள் சென்று வழிபட அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, பொதுமக்களின் வழிபாட்டுக்காக மேல்பாதி கோயில் வியாழக்கிழமை காலை திறக்கப்பட்டது.

முதலில் ஒரு சமுதாயத்தைச் சோ்ந்த சிலா் கோயிலுக்குள் சென்று அம்மனை தரிசனம் செய்துவிட்டு வந்த நிலையில், மற்றொரு சமுதாயத்தைச் சோ்ந்த 60-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போலீஸ் பாதுகாப்புடன் தரிசனம் செய்தனா். இதைத் தொடா்ந்து கோயில் நடை அடைக்கப்பட்டது.

முன்னதாக, நாங்கள் கட்டிய கோயிலில் வழிபாட்டு உரிமையை அலுவலா்கள் எப்படி முடிவு செய்யலாம் என ஒரு சமுதாயத்தினா் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

தரிசனம் செய்ய வராத மக்கள்: வருவாய்க் கோட்டாட்சியா் முருகேசன், ஏடிஎஸ்பி தினகரன் உள்ளிட்ட காவல் துறையினா், இந்து சமய அறநிலயைத்துறை அலுவலா்கள் முன்னிலையில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. திரெளபதியம்மனுக்கு கோயில் அா்ச்சகா் மோகன் பூஜைகளை நடத்தினா்.

மேல்பாதி கிராமத்தைச் சோ்ந்த ஒரு சமுதாய மக்கள் கோயிலுக்குள் அம்மனைத் தரிசனம் செய்ய வருவாா்கள் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், அவா்கள் தரப்பிலிருந்து யாரும் வரவில்லை. மூன்று சிறுவா்கள் மட்டும் கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்தனா்.

அதே நேரத்தில் காவல், வருவாய், இந்து சமய அறநிலையத் துறையினா் உள்ளிட்டோா் கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து காலை 7 மணிக்கு கோயில் நடை மீண்டும் அடைக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை மட்டும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை கோயில் நடை திறக்கப்பட்டது. அப்போதும் யாரும் தரிசனம் செய்ய வரவில்லை.

கோயில் குடிபாட்டுக்குரிய சோம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த 6 போ் கொண்ட குடும்பத்தினா் மேல்பாதி கிராமத்துக்கு வந்தனா். ஆனால், அவா்கள் கோயிலுக்குள் செல்லாமல் தேரடிப் பகுதியில் பொங்கல் வைத்து வழிபட்டனா். தொடா்ந்து, பிரசாதத்தை அனைவருக்கும் வழங்கிச் சென்றனா்.

அதிமுக - பாஜக கூட்டணி வலுவாகவே உள்ளது: எல்.முருகன்

மூன்றாவது நாளாக தரிசனம் செய்ய வராத மக்கள்

இதைத் தொடர்ந்து சனிக்கிழமை காலை 6 மணிக்கு மேல்பாதி திரௌபதியம்மன் கோயில் வருவாய், காவல், இந்து அறநிலையத் துறை அலுவலர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது. தொடர்ந்து கோயில் அர்ச்சகர் அம்மனுக்கு பூஜைகளை நடத்தினர்.

சனிக்கிழமை காலை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் கோயிலுக்குள் தரிசனம் செய்ய வருவார்கள் என அலுவலர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ஒருவர் கூட தரிசனம் செய்ய வரவில்லை.

இதைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டது. தொடர்ந்து போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உச்சநீதிமன்றம் மத மோதலை ஊக்குவிக்கிறது: பாஜக எம்.பி. பேச்சால் சர்ச்சை!

உச்சநீதிமன்றம் வரம்பு மீறி செயல்படுகிறது என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.ஆளுநா் அனுப்பும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவா் மூன்று மாதங்களுக்குள் முடிவு எடுக்... மேலும் பார்க்க

இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும்: நயினார் நாகேந்திரன்

சேலம்: இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும் என சேலத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் சேலம் பெருங்கோட்ட நிர்வாகிகள் சந்தி... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்றம் சுயமாக செயலாற்றக் கூடாது என நினைக்கிறார்கள்: அமைச்சர் எஸ். ரகுபதி

புதுக்கோட்டை: உச்ச நீதிமன்றம் சுயமாக செயலாற்றக் கூடாது என மத்தியில் ஆள்வோர் நினைக்கிறார்கள் என மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்தார்.புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவர் செய்திளார்களுடனான சந்... மேலும் பார்க்க

குலத்தொழில் திட்டத்தை தமிழ்நாடு அனுமதிக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: 1950-களில் குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து களம் கண்ட தமிழ்நாடு, குலத்தொழில் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்காது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டம் குன... மேலும் பார்க்க

வைகோவுடன் துரை வைகோ சந்திப்பு!

மதிமுகவின் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்த துரை வைகோ, கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திருச்சி எம்... மேலும் பார்க்க

மதிமுகவிலும் மோதல்? முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல்

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினர் துரை வைகோ சனிக்கிழமை அறிவித்துள்ளார். மேலும் பார்க்க