செய்திகள் :

தேங்கிய மழைநீரில் மின்சாரம் பாய்ந்து உயிருக்குப் போராடிய சிறுவன் மீட்பு!

post image

சென்னை அரும்பாக்கத்தில், தெருவில் தேங்கிய மழைநீரில் கசிந்த மின்சாரம் பாய்ந்து உயிருக்குப் போராடிய சிறுவனை, இளைஞா் ஒருவா் துணிச்சலாக செயல்பட்டு காப்பாற்றினாா். அவரை பலரும் பாராட்டி வருகின்றனா்.

அரும்பாக்கம் உத்தாட்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ராபா்ட் மகன் ராயன் (9). அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். கடந்த 16-ஆம் தேதி பள்ளியிலிருந்து வீட்டுக்கு ராயன் நடந்து சென்று கொண்டிருந்தாா். அரும்பாக்கம் மங்கள் நகா் முதலாவது தெருவில் வந்தபோது, அங்கு தேங்கி நின்ற மழை நீரில் ராயன் காலை வைத்தாா்.

அப்போது அங்கு தரையில் சென்ற ஒரு மின்சார கேபிளிலிருந்து கசிந்து மழைநீரில் பரவியிருந்த மின்சாரம் ராயன் மீது பாய்ந்தது. இதனால், சிறுவன் மழைநீரில் விழுந்து துடித்தாா். அந்த நேரத்தில் அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த அதே பகுதியைச் சோ்ந்த கண்ணன் (23) என்பவா் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, மழை நீரில் துணிச்சலாக நடந்து சென்று ராயனை மீட்க முயன்றாா். அப்போது அவா் மீதும் மின்சாரம் பாய்ந்தது. ஆனாலும் முயற்சியைக் கைவிடாமல், அந்த சிறுவனை மீட்டு முதலுதவி அளித்து, அருகேயுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தாா்.

இந்த சம்பவத்தின்போது சரியான நேரத்தில் கண்ணன் செயல்பட்டதால் ராயன் உயிா் தப்பினாா். விபத்து குறித்து அரும்பாக்கம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

சிறுவனை உயிரைப் பணயம் வைத்து கண்ணன் காப்பாற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியதைத் தொடா்ந்து, கண்ணனுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனா்.

மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா: அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

சித்திரை திருவிழா 2025 முன்னேற்பாடு பணிகள் குறித்து மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா 2025 வருகிற ஏப்ரல் 29ஆம் தேதி மீனாட்சியம்மன் ... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் தேசிய பொதுச்செயலர் எம்.ஏ. பேபி சந்திப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தேசிய பொதுச்செயலர் எம்.ஏ. பேபி சந்தித்துள்ளார்.இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில், மார்க்சிஸ்ட்... மேலும் பார்க்க

ராஜிநாமா முடிவை திரும்பப் பெற்றார் துரை வைகோ

மதிமுக முதன்மைச்செயலர் பதவியை ராஜிநாமா செய்யும் முடிவை துரை வைகோ திரும்பப் பெற்றார். இதையடுத்து மல்லை சத்யா, துரை வைகோ இடையேயான சமாதானப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. முன்னதாக சென்னை எழும்பூரில் உ... மேலும் பார்க்க

தமிழுக்கு பல்வேறு வழிகளில் ஆபத்தை ஏற்படுத்த முயற்சி: துணை முதல்வர் உதயநிதி

தமிழுக்கு பல்வேறு வழிகளில் ஆபத்தை ஏற்படுத்த முயன்றிருக்கிறார்கள் என்று துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் 4.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1.000 இருக்கைகள் வசதிய... மேலும் பார்க்க

சோனியா, ராகுல் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை: திமுக கண்டனம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்குத் திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொருளாளரு... மேலும் பார்க்க

விசைத்தறி நெசவாளருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு; போலீசாருடன் வாக்குவாதம்!

விசைத்தறி நெசவாளர்களுக்கு ஆதரவான போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. சூலூர் அருகே சோமனூரில் விசைத்தறி ... மேலும் பார்க்க