செய்திகள் :

இன்ஸ்டா வீடியோவில் காதல்; துப்பட்டாவால் கொலை செய்யப்பட்ட கணவன் - ஹரியானாவில் அதிர்ச்சி

post image

ஹரியானாவில் உள்ள பிரேம் நகரில் வசிப்பவர் ரவீனா(32). இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சுரேஷ் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் சேர்ந்து வீடியோக்களை உருவாக்கி யூடியூப் மற்றும் சமூக வலைதளத்தில் வெளியிட ஆரம்பித்தனர். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அவர்கள் இது போன்று வீடியோ வெளியிட்டு வந்தனர்.

இதற்கு ரவீனாவின் கணவர் மற்றும் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதனை ரவீனா கண்டுகொள்ளவில்லை. சில நேரங்களில் ரவீனா இதற்காக தனது கணவருடன் சண்டையும் போட்டுள்ளார். ரவீனாவிற்கு இன்ஸ்டாகிராமில் 34 ஆயிரம் பாலோயர்கள் இருக்கின்றனர். சம்பவத்தன்று வெளியில் சென்று இருந்த ரவீனாவின் கணவர் பிரவீன் திடீரென வீட்டிற்கு வந்தார். வீட்டிற்கு வந்த போது ரவீனாவும், சுரேஷும் தனிமையில் இருப்பதை பார்த்த பிரவீன் தன் மனைவியிடம் இது தொடர்பாக சண்டையிட்டார். இச்சண்டை முற்றிய நிலையில் சுரேஷுடன் இணைந்து ரவீனா தன் கணவனை துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டார். குடும்பத்தினர் பிரவீன் எங்கே என்று ரவீனாவிடம் கேட்டதற்கு தனக்கு தெரியாது என்று கூறிவிட்டார்.

இது குறித்து பிரவீன் உறவினர்கள் போலீஸில் புகார் செய்திருந்தனர். போலீஸார் விசாரித்து வந்தனர். தற்போது பிரவீன் உடல் அவரது வீட்டில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது ரவீனா வீட்டில் இருந்து ஒரு இரு சக்கர வாகனம் புறப்படுவது போன்று காட்சிகள் பதிவாகி இருந்தது. அதனை ஓட்டுபவர் ஹெல்மெட் அணிந்திருந்தார். ரவீனாவும் தன் முகத்தை மூடிய படி இரு சக்கர வாகனத்தில் இருந்தார். அவர்களுக்கு நடுவில் பிரவீன் உடல் இருந்தது. சிறிது நேரத்தில் அதே இரு சக்கர வாகனம் பிரவீன் இல்லாமல் இருவரும் மட்டும் வந்தனர். இதையடுத்து ரவீனா மற்றும் சுரேஷ் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். பிரவீன் - ரவீனாவுக்கு பிறந்த 6 வயது மகன் பிரவீனின் தந்தை வீட்டில் வசித்து வருகிறான்.

ராஜபாளையம்: 'குடும்ப தகராறில் கணவன் அடித்துக் கொலை'- தற்கொலை நாடகமாடிய தாய்-மகள் கைது!

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே குடும்பத் தகராறில் கணவனை அடித்துக் கொலை செய்துவிட்டு, தற்கொலை நாடகமாடிய சம்பவத்தில் தாய்-மகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போல... மேலும் பார்க்க

ரயில் தண்டவாளத்தில் தண்டால்; சோஷியல் மீடியாவில் பகிரப்பட்ட வீடியோ- இளைஞரை எச்சரித்து அனுப்பிய போலீஸ்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் அருகே தாமரை குட்டி விளைபகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். 90 கிலோ உடல் எடை கொண்ட கண்ணன், தனது எடையை விட 4 மடங்கு எடை கொண்ட 370 கிலோ காரை, யோக் வாக் என்ற முறைப்படி 25 மீட்ட... மேலும் பார்க்க

`பணம் திருடியதாக சந்தேகம்’ வேதனையில் 4வது மாடியில் இருந்து விபரீத முடிவெடுத்த கோவை மாணவி

கோவை நவ இந்தியா பகுதியில் இந்துஸ்தான் மருத்துவமனை இயங்கி வருகிறது. அவர்களுக்கு சொந்தமாக பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரியும் உள்ளது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். அங்கு திருவண்... மேலும் பார்க்க

`இருட்டுக்கடையைக் கேட்டு கொடுமை செய்கிறார்கள்' - கணவர் வீட்டார் மீது புதுமணப்பெண் வரதட்சணை புகார்!

``இருட்டுக்கடை அல்வா கடையை தன் பெயருக்கு எழுதிக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வேறொரு பெண்ணுடன் குடித்தனம் நடத்துவேன்" என தன் கணவர் மிரட்டியதாக புதுமணப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ... மேலும் பார்க்க

போதைப்பொருளை கடலில் போட்டு தப்பிய கடத்தல் கும்பல்; 300 கிலோ மீட்பு.. குஜராத்தில் நடந்தது என்ன?

குஜராத் கடல் பகுதியில் அடிக்கடி போதைப்பொருள் கடத்தி வரப்படுவது வழக்கமாக இருக்கிறது. குஜராத் கடல் பகுதி மட்டுமல்லாது குஜராத் துறைமுகத்திற்கும் வெளிநாட்டில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதை... மேலும் பார்க்க

Ooty: அனுமதியோ 40 மரங்களுக்கு, வெட்டிக் கடத்தப்பட்டதோ 250 மரங்கள்! என்ன நடந்தது?

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள சோலூர் பேரூராட்சி உட்பட்ட மணிக்கல் பகுதியில் அமைந்திருக்கிறது கழிவு மேலாண்மை கூடம். நீலகிரி தைல மரங்கள் எனப்படும் யூக்கலிப்டஸ் மரங்கள் நிறைந்த இந்த பகுதியில் நாள்தோ... மேலும் பார்க்க