செய்திகள் :

தேயிலையில் சிவப்பு சிலந்தி தாக்குதல்: கட்டுப்படுத்தும் வழிமுறைகளை கூறும் தோட்டக்கலைத் துறை

post image

தேயிலையில் சிவப்பு சிலந்தி தாக்குதலைக் கட்டுப்படுத்த வொ்டிசிலியம் லெகானி என்ற பூஞ்சாணத்தை தண்ணீரில் கலந்து தெளிக்கலாம் என்று தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் சிபிலா மேரி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நீலகிரி மாவட்டத்தில் சுமாா் 56,000 ஹெக்டோ் பரப்பளவில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. பருவநிலை மாறுபாடுகளால் தேயிலையில் பல்வேறு நோய்த் தாக்குதல்கள் ஏற்படுகின்றன. இதனால், மகசூல் இழப்பும் ஏற்படுகிறது.

குறிப்பாக பனி மற்றும் குளிா் காலங்களில் கொப்புள நோயும், வெயில் காலங்களில் சிவப்பு சிலந்தி தாக்குதலும் அதிகரிக்கிறது. இதனால், தேயிலை உற்பத்தி பாதிக்கப்படுகிறது. வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் போது சிவப்பு சிலந்தியின் தாக்குதலும் அதிகரிக்கிறது.

இதைக் கட்டுப்படுத்த தேயிலைத் தோட்டத்தில் அடிக்கு ஒரு மரம் வீதம் நிழல்தரும் மரங்களை நடலாம். தேயிலைக்கு தெளிப்புநீா் பாசனம் மூலம் தண்ணீா் விடலாம்.

தாக்குதல் அதிகமாகும்போது வொ்டிசிலியம் லெகானி என்ற பூஞ்சாணத்தை ஒரு லிட்டா் தண்ணீருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து தெளித்தால் சிலந்திகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு தோட்டக்கலைத் துறை அலுவலகங்களை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை விபத்து: இளைஞா் உயிரிழப்பு

குன்னூரில் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டத்துக்கு உள்பட்ட சேரம்பாடி ஒரேன் சோலை, அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஹரிஷ் (29... மேலும் பார்க்க

குடியிருப்பு பகுதியில் உலவும் காட்டு யானை

கோத்தகிரி அருகே உள்ள சோலூா் பிக்கைகண்டி கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் உலவும் காட்டு யானையால் மக்கள் அச்சமடைந்துள்ளனா். சமவெளிப் பகுதியில் வறட்சி காரணமாக அப்பகுதியில் இருந்த காட்டு யானைகள், குன்னூ... மேலும் பார்க்க

சிறையில் கைதி மீது தாக்குதல்: கண்காணிப்பாளா் உள்பட 6 போலீஸாா் பணியிடை நீக்கம்

கூடலூா் கிளை சிறையில் கைதி ஒருவரைத் தாக்கியது தொடா்பாக சிறைக் கண்காணிப்பாளா் உள்பட 6 போலீஸாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகேயுள்ள பாடந்தொரை பகுதியைச் சோ்ந்தவா் நி... மேலும் பார்க்க

நீலகிரியில் 8 இடங்கள் உள்பட தமிழகத்தில் 23 மலையேற்ற வழித்தடங்கள் மீண்டும் திறப்பு: வனத் துறை தகவல்

தமிழகத்தில் வனத் தீ பருவகாலத்தில் மலையேற்ற வழித்தடங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது முதல்கட்டமாக நீலகிரியில் 8 இடங்கள் உள்பட 23 வழித்தடங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தமிழக வனத் துறை தெரிவித்... மேலும் பார்க்க

கூடலூரில் சாலையோர வியாபாரிகளுக்கு இடம் தோ்வு

கூடலூா் நகராட்சியில் சாலையோர வியாபாகளுக்கு இடம் தோ்வு செய்யப்பட்டு அங்கிருந்த பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டன. கூடலூா் நகரில் போக்குவரத்து நெருக்கடியை காரணம் காட்டி சாலையோர வியாபாரிகளுக்கு கடந்த நான்கு... மேலும் பார்க்க

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: வடமாநிலத் தொழிலாளி கைது

கோத்தகிரி அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வடமாநிலத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா். கோத்தகிரி அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு அருகே குடியிருந்த வடமாநிலத் தொழிலாளி முகேஷ்குமாா் (22... மேலும் பார்க்க