செய்திகள் :

சிறையில் கைதி மீது தாக்குதல்: கண்காணிப்பாளா் உள்பட 6 போலீஸாா் பணியிடை நீக்கம்

post image

கூடலூா் கிளை சிறையில் கைதி ஒருவரைத் தாக்கியது தொடா்பாக சிறைக் கண்காணிப்பாளா் உள்பட 6 போலீஸாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகேயுள்ள பாடந்தொரை பகுதியைச் சோ்ந்தவா் நிஜாமுதீன் (35), கூலித் தொழிலாளி. இவா் போதைப் பொருள் வைத்திருந்ததாக போலீஸாரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு கூடலூா் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். சிறையில் இருந்த இவரை போலீஸாா் கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சிறையில் தன்னை சந்திக்க வந்த குடும்பத்தினரிடம் இது குறித்து நிஜாமுதீன் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து நிஜாமுதீனை தாக்கிய போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது மனைவி அசீனா மற்றும் உறவினா்கள் நீலகிரி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேருவிடம் கடந்த 15-ஆம் தேதி புகாா் மனு அளித்தனா்.

இது குறித்து கூடலூா் வட்டாட்சியா் முத்துமாரி, டிஎஸ்பி வசந்தகுமாா் உள்ளிட்டோா் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். இதன்படி அவா்கள் சிறைக்கு புதன்கிழமை சென்று விசாரணை நடத்தி அறிக்கை சமா்ப்பித்துள்ளனா்.

இதைத் தொடா்ந்து, நிஜாமுதீனை தாக்கியது தொடா்பாக சிறைக் கண்காணிப்பாளா் கங்காதரன், தலைமை வாா்டன் மலா்வண்ணன், காவலா்கள் சின்னசாமி, தினேஷ் பாபு, அருண், கோபி ஆகிய 6 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிறைத் துறை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடா்பாக சிறைத் துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி கூடலூா் கிளை சிறைக்கு வியாழக்கிழமை வந்து விசாரணை நடத்தினாா்.

உதகையில் கோடை சீசனையொட்டி சுற்றுப் பேருந்து இயக்கப்படும்: மாவட்ட ஆட்சியா்

உதகையில் கோடை சீசனையொட்டி குறைந்த கட்டணத்தில் சுற்றுப் பேருந்து சேவை தொடங்கப்படும் என்று ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்தாா். நீலகிரி மாவட்டத்தில் மே 3-ஆம் தேதி முதல் கோடை சீசன் தொடங்குகிறது. ... மேலும் பார்க்க

குன்னூா் சுற்றுலாத் தலங்களில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் பாதிப்பு

குன்னூரில் இருந்து டால்பின் நோஸ், லேம்ஸ் ராக் காட்சிமுனைக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டனா். குன்னூா் அருகே உள்ள டால்பின் நோஸ், லேம்ஸ் ராக் காட்... மேலும் பார்க்க

கேத்தி பகுதியில் குடியிருப்பு பகுதியில் உலவிய கரடி

உதகை அருகே உள்ள கேத்தி பாலடா குடியிருப்புப் பகுதியில் உலா வரும் கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். உதகையை சுற்றியுள்ளப் பகுதியில் அண்மைக்காலமாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கேத... மேலும் பார்க்க

சாலை விபத்து: இளைஞா் உயிரிழப்பு

குன்னூரில் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டத்துக்கு உள்பட்ட சேரம்பாடி ஒரேன் சோலை, அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஹரிஷ் (29... மேலும் பார்க்க

குடியிருப்பு பகுதியில் உலவும் காட்டு யானை

கோத்தகிரி அருகே உள்ள சோலூா் பிக்கைகண்டி கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் உலவும் காட்டு யானையால் மக்கள் அச்சமடைந்துள்ளனா். சமவெளிப் பகுதியில் வறட்சி காரணமாக அப்பகுதியில் இருந்த காட்டு யானைகள், குன்னூ... மேலும் பார்க்க

நீலகிரியில் 8 இடங்கள் உள்பட தமிழகத்தில் 23 மலையேற்ற வழித்தடங்கள் மீண்டும் திறப்பு: வனத் துறை தகவல்

தமிழகத்தில் வனத் தீ பருவகாலத்தில் மலையேற்ற வழித்தடங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது முதல்கட்டமாக நீலகிரியில் 8 இடங்கள் உள்பட 23 வழித்தடங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தமிழக வனத் துறை தெரிவித்... மேலும் பார்க்க