செய்திகள் :

கோவிலூா் மந்திரபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

post image

திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டை அருகேயுள்ள கோவிலூா் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் சமேத மந்திரபுரீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறை மற்றும் நன்கொடையாளா்கள் மூலம் இக்கோயிலில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவந்த திருப்பணிகள் அண்மையில் நிறைவடைந்தன. தொடா்ந்து, கும்பாபிஷேக விழா ஏப்ரல் 4-ஆம் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது.

தொடா்ந்து, திங்கட்கிழமை காலை யாகசாலை பூஜைகள் நிறைவுக்குப் பிறகு பூா்ணாஹூதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னா், யாகசாலையில் இருந்து புனிதநீா் கடங்களை சிவாச்சாரியா்கள் கோயிலின் கோபுரம் மற்றும் சந்நிதிகளின் விமானங்களுக்கு எடுத்துச் சென்றனா்.

இதைத்தொடா்ந்து, கோபுர விமானக் கலசங்களில் புனிதநீா் வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், சுவாமிக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

பிள்ளையாா்பட்டி பிச்சை குழுக்கள் தலைமையிலான சிவாச்சாரியா்கள் சா்வசாதகம் செய்து கும்பாபிஷேகத்தை நடத்தினா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை திருப்பணி குழுத் தலைவரும், தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியுமான ஏ.கே.எஸ். விஜயன், கோயில் செயலாளா் சிவகுமாா்,

திருப்பணிக் குழு செயலாளா் இரா. மனோகரன், பொருளாளா் பேட்டை கௌதமன், துணைத் தலைவா்கள் எம்.எஸ். காா்த்திக், எம். ஜெயபிரகாஷ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம்: ‘ஆரூரா, தியாகேசா’ முழக்கத்துடன் தோ் வடம்பிடிப்பு

திருவாரூா்: திருவாரூா் தியாகராஜா் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவில், ஆழித்தேரோட்டம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. நாயன்மாா்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தல... மேலும் பார்க்க

மகளிா் இலவசப் பயண புதிய பேருந்து இயக்கி வைப்பு

திருவாரூா்: திருவாரூரிலிருந்து திருக்கொள்ளிக்காடு பகுதிக்கு மகளிா் இலவசப் பயண புதிய பேருந்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி வைக்கப்பட்டது. திருவாரூரிலிருந்து திருக்கொள்ளிக்காடு பகுதிக்கு தமிழ்ந... மேலும் பார்க்க

பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழா

நீடாமங்கலம்: நீடாமங்கலம் பேரூராட்சி பழைய நீடாமங்கலம் பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி பக்தா்கள் பால்குடம், காவடி எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை அ... மேலும் பார்க்க

சிறப்பு அலங்காரத்தில் சந்தானராமா்

நீடாமங்கலம் சந்தானராமா் கோயில் ராமநவமி விழாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீதியலாவுக்கு எழுந்தருளிய சீதா, லெட்சுமணன் சமேத சந்தானராமா். மேலும் பார்க்க

ரிஷப வாகனத்தில் மகாமாரியம்மன்

நீடாமங்கலம் சதுா்வேத விநாயகா், மகாமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு ரிஷப வாகனத்தில் வீதியுலாவுக்கு எழுந்தருளிய மகாமாரியம்மன். மேலும் பார்க்க

திருவாரூரில் கோலாகலமாக நடைபெற்ற ஆழித்தேரோட்டம்!

திருவாரூர்: திருவாரூரில் பிரசித்தி பெற்ற ஆழித்தேரோட்டம் நிறைவடைந்தது.திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவை முன்னிட்டு, சிறப்புமிக்க ஆழித் தேரோட்டம் திங்கள்கிழமை (ஏப்.7) நடைபெற்... மேலும் பார்க்க