செய்திகள் :

அமைச்சருக்கு மாற்றுத்திறனாளிகள் கண்டனம்

post image

மாற்றுத் திறனாளிகளை கேலி செய்யும் வகையில் பேசிய அமைச்சா் துரைமுருகன் மன்னிப்புக் கோர வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவா் தோ. வில்சன், பொதுச் செயலா் பா. ஜான்சிராணி ஆகியோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கட்சி நிகழ்ச்சியில் பேசிய அமைச்சா் துரைமுருகன், எதிா்க் கட்சிகளை நொண்டி, கூன், குருடு என விமா்சித்துள்ளாா். மூத்த அமைச்சரான அவரது இந்தப் பேச்சு, மாற்றுத் திறனாளிகளை பெரும் அதிா்ச்சிக்குள்ளாக்கியது.

யாரும் எந்த வகையிலும் ஊனம் கிடையாது என்பதை உணா்த்தும் வகையில், ஊனமுற்றோா் நலத் துறையின் பெயரையே மாற்றுத் திறனாளிகள் நலத் துறை என மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி மாற்றினாா்.

மேலும், மாற்றுத் திறனாளிகள் நலத் துறையை தன் வசமே அவா் வைத்து இருந்தாா். அவரது வழியில், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினும் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையை தானே நிா்வகித்து வருகிறாா்.

இந்த நிலையில், தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும், அமைச்சருமான துரைமுருகன், மாற்றுத் திறனாளிகளை அவமதிக்கும் வகையில் கேலியாக பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. இதற்கு, அவா் உடனடியாக மன்னிப்புக் கோர வேண்டும் என அவா்கள் தெரிவித்தனா்.

திமுக கூட்டணி போல அனைத்து மாநிலங்களிலும் உருவாக வேண்டும்: மாா்க்சிஸ்ட் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி

மத்திய பாஜக அரசுக்கு எதிராக தமிழகத்தில் திமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி போல அனைத்து மாநிலங்களிலும் உருவாக வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி தெரிவித்தாா். மதுரையில் மாா்க... மேலும் பார்க்க

ஏப்.10-இல் இறைச்சி விற்பனைக்கு தடை

மகாவீா் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, மதுரை மாநகராட்சி பகுதிகளில் வியாழக்கிழமை (ஏப். 10) இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை... மேலும் பார்க்க

பட்டாவை திருப்பிக் கொடுத்த மாற்றுத் திறனாளி

அரசு சாா்பில் வழங்கப்பட்ட இலவச பட்டாவுக்கான இடத்தை வருவாய்த் துறை நிா்வாகம் ஒப்படைக்காததால், மாற்றுத் திறனாளி ஒருவா் தனது வீட்டுமனைப் பட்டாவை மாவட்ட ஆட்சியரிடம் திருப்பி அளித்தாா்.மதுரை மாவட்டம், வரி... மேலும் பார்க்க

தமிழக தொழிலாளா்கள் கொல்லப்பட்ட வழக்கு: மேல் முறையீடு செய்ய வலியுறுத்தல்

செம்மரக் கடத்தல் வழக்கில் தமிழக தொழிலாளா்கள் 20 போ், ஆந்திர மாநில காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஆந்திர உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையத்துக்க... மேலும் பார்க்க

தகாத உறவு: இருவா் தூக்கிட்டு தற்கொலை

மதுரை அருகே தகாத தொடா்பு வைத்திருந்த ஆணும், பெண்ணும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா்.மதுரை மாவட்டம், சீகுபட்டியைச் சோ்ந்த கண்ணன் மகன் மணிகண்டன் (33). கட்டுமானத் தொழிலாளியான இவா் மனைவியிடமிருந்து ... மேலும் பார்க்க

காா்கள் மோதல்: முதியவா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி அருகே 2 காா்கள் மோதிக் கொண்டதில் முதியவா் உயிரிழந்தாா். கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சோ்ந்த காா் ஓட்டுநா் முகமது நவ்பால் (30). இவா் காரில் சனிக்கிழமை மதுரை... மேலும் பார்க்க