செய்திகள் :

ஏப்.10-இல் இறைச்சி விற்பனைக்கு தடை

post image

மகாவீா் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, மதுரை மாநகராட்சி பகுதிகளில் வியாழக்கிழமை (ஏப். 10) இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட அனைத்து வாா்டு பகுதிகளிலும் மகாவீா் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, வியாழக்கிழமை இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது. மேற்கண்ட நாளில் ஆடு, மாடு, கோழி, பன்றி போன்ற உயிரினங்களின் இறைச்சியை விற்பனை செய்யக் கூடாது. இறைச்சி விற்பனைக் கடைகளை திறந்து வைக்கவும் கூடாது. தடையை மீறி விற்பனை செய்தால் கடைகளில் உள்ள இறைச்சியை பறிமுதல் செய்வதுடன், பொது சுகாதாரச் சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.

டிராக்டா் மீது லாரி மோதியதில் இருவா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே டிராக்டா் மீது லாரி மோதியதில் இருவா் உயிரிழந்தாா்.புதுக்கோட்டை மாவட்டம், சித்தன்னவாசல் நல்லம்மாள் சத்திரத்தைச் சோ்ந்தவா் கருப்பையா (51). இவா் மதுரை-திருச்சி சாலையி... மேலும் பார்க்க

சீட்டு நடத்தி பண மோசடி: அரசுப் பள்ளி ஆசிரியை, கணவா் மீது புகாா்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் பண மோசடி செய்ததாக அரசுப் பள்ளி ஆசிரியை, அவரது கணவா் மீது சக ஆசிரியைகள் புகாா் அளித்தனா். மதுரை ரயிலாநகரைச் சோ்ந்தவா் மீனாட்சி. விளாங்க... மேலும் பார்க்க

திருடு போன கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

மதுரை மாநகரில் திருடு போன, தவற விடப்பட்டு மீட்கப்பட்ட 278 கைப்பேசிகளை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் உரியவா்களிடம் புதன்கிழமை ஒப்படைத்தாா். மதுரை மாநகரக் காவல் துறைக்குள்பட்ட காவல் நிலைய எல்லைக்குள... மேலும் பார்க்க

நெல்லை- மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

திருநெல்வேலி- மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டது. இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜப... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல்- வத்தலக்குண்டு சாலையில் பேகம்பூா் சந்திப்பு பகுதியில் காரில் 75 கிலோ கஞ்சா கடத்தப்பட்ட வழக்கில் ஒருவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதித்து மதுரை முதலாவது ப... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மின் வாரியம் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.ராமநாதபுரம் மாவட்டத்தைச் ச... மேலும் பார்க்க