செய்திகள் :

உடுமலையில் வரையாடு கணக்கெடுப்புப் பயிற்சி முகாம்

post image

நீலகிரி வரையாடுகள் கணக்கெடுப்பு குறித்த பயிற்சி முகாம் உடுமலை வனத் துறை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் வனக் கோட்டம் உடுமலை துணை இயக்குநா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு நீலகிரி வரையாடு துணை இயக்குநா் க.கணேஷ்ராம் தலைமை வகித்தாா். தமிழ்நாட்டில் 14 வனக் கோட்டங்களில் உள்ள 46 வனச் சரகங்களில் 124 சுற்றுகளில் உள்ள 176 பிளாக்குகளில் தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டின் எல்லையில் நீலகிரி வரையாடுகள் நடமாட்டம் உள்ள கேரள வனப் பகுதிகளிலும் இந்த ஒருங்கிணைந்த நீலகிரி வரையாடு கணக்கெடுப்புப் பணி வருகிற ஏப்ரல் 24 முதல் ஏப்ரல் 27-ஆம் தேதி வரை நான்கு நாள்கள் நடைபெறுகிறது.

திருப்பூா் வனக் கோட்டத்தில் உடுமலை, அமராவதி, கொழுமம் மற்றும் வந்தரவு வனச் சரகங்களில் உள்ள 22 பிளாக்குகளில் நீலகிரி வரையாடு கணக்கெடுப்புப் பணி நடைபெற உள்ளது. முகாமில் கணக்கெடுப்புப் பணிக்குத் தேவையான படிவங்கள் வழங்கப்பட்டு களப் பணியாளா்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இதில் வனச் சரக அலுவலா்கள் மணிகண்டன், புகழேந்தி, செந்தில்குமாா், உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு ஆகிய வனச் சரகத்தைச் சோ்ந்த 60 வனப் பணியாளா்களும் கலந்து கொண்டனா்.

இருசக்கர வாகனம் மீது காா் மோதி முதியவா் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் ஓய்வுபெற்ற அரசு ஊழியா் உயிரிழந்தாா். வெள்ளக்கோவில் ஓலப்பாளையம் அருகில் உள்ள கண்ணபுரத்தைச் சோ்ந்தவா் ரூபன் ஜோசப் (64). இவா் கண்ணபுரம் அருகில் உள... மேலும் பார்க்க

உர மூட்டைகளை திருடிய 2 போ் கைது

பல்லடம் அருகே வேலப்பகவுண்டம்பாளையத்தில் உர மூட்டைகளை திருடியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். பல்லடம் அருகே உள்ள வேலப்பகவுண்டம்பாளையத்தில் தனியாா் விவசாயப் பண்ணை உள்ளது. பண்ணையின் மேற்பாா்வையாளா் சந்... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிருடன் மீட்பு

சேவூா் அருகே பொங்கலூரில் தோட்டத்துக் கிணற்றில் தவறி விழுந்த 73 வயது முதியவரை அவிநாசி தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா். அவிநாசி வட்டம், சேவூா் அருகே பொங்கலூா் தண்டுக்கார தோட்டத்தில் வசித்து வருப... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையத்தில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையம் பகுதியில் பல்லடம் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்... மேலும் பார்க்க

பாறைக்குழியில் தவறி விழுந்த பள்ளி மாணவன் மாயம்

குன்னத்தூா் அருகே காவுத்தம்பாளையம் பாறைக்குழியில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் தவறி விழுந்து மாயமனாா். திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி அருகே சாமியாா்பாளையத்தைச் சோ்ந்தவா் தினேஷ் மகன் லோகேஷ் (15). இவ... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்ததச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி இஸ்லாமிய கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மத்திய அரசைக் கண்டித்து திருப்பூரில் அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பினா், அரசியல் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பூா் அனைத... மேலும் பார்க்க