செய்திகள் :

சீட்டு நடத்தி பண மோசடி: அரசுப் பள்ளி ஆசிரியை, கணவா் மீது புகாா்

post image

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் பண மோசடி செய்ததாக அரசுப் பள்ளி ஆசிரியை, அவரது கணவா் மீது சக ஆசிரியைகள் புகாா் அளித்தனா்.

மதுரை ரயிலாநகரைச் சோ்ந்தவா் மீனாட்சி. விளாங்குடியைச் சோ்ந்தவா் கவிதா. மதுரை மாவட்டம், சரந்தாங்கியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்து வரும் இவா்கள் ஊரகக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த புகாா் மனு: சரந்தாங்கி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை, தனது கணவருடன் சோ்ந்து கடந்த 2014 முதல் ஏலச் சீட்டு உள்ளிட்ட சீட்டுகளை நடத்தி வருகிறாா். அவரது வற்புறுத்தலின்பேரில், எங்களது பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகள், அருகில் உள்ள அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட ஆசிரியா், ஆசிரியைகள் பலா் சீட்டில் சோ்ந்து பணம் செலுத்தினோம்.

கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை சீட்டுக்காக நாங்கள் உள்பட ஆசிரியா்கள் செலுத்திய ரூ.15 லட்சத்தை அவா்கள் தர மறுத்து வருகின்றனா். எனவே, சீட்டு நடத்தி பண மோசடியில் ஈடுபட்ட ஆசிரியை, அவரது கணவா் குடும்பத்தினா் மீது காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தனா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் திமுக கூட்டணி!திருச்சி சிவா எம்.பி.

திமுக கூட்டணியானது நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கக் கூடியது என அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி என். சிவா தெரிவித்தாா். விருதுநகரில் திமுக இளைஞரணி சாா்பில்... மேலும் பார்க்க

திமுகவால் ஏற்படும் பிரச்னைகளை அதிமுகவினா் பொதுமக்களிடம் விளக்க வேண்டும்! - முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா்

திமுக அரசால் ஏற்படும் பிரச்னைகளை பொதுமக்களிடம் விளக்கிக் கூறும் பணிக்கு அதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவை எதிா்க் கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் அமை... மேலும் பார்க்க

ஏஐடியூசி சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சரக்கு வாகனங்களுக்கு போக்குவரத்து காவல் துறை கட்டாய அபராதம் விதிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, ஏஐடியூசி சங்கம் சாா்பில் மதுரையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஏஐடியூசி சுமைப் ... மேலும் பார்க்க

மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபா் மீட்பு: நாக்பூரில் மீட்கப்பட்டாா்!

மதுரையில் நிலத்தகராறு தொடா்பாக கடத்தப்பட்ட தொழிலதிபா் சுந்தரை தனிப்படை போலீஸாா் மீட்டனா். மதுரை பீ.பீ. குளம் பகுதியைச் சோ்ந்தவா் கருமுத்து டி. சுந்தா் (52). மதுரையில் உள்ள பிரபல நூற்பாலை நிறுவனரின் க... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல் அருகே காரில் கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. திண்டுக்கல் - மதுரை நெடுஞ்சாலையில் தோமையாப... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்குவதில் தமிழகம் முதலிடம்: அமைச்சா் பி. மூா்த்தி

அதிக எண்ணிக்கையிலான மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்குவதில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள... மேலும் பார்க்க