செய்திகள் :

திமுகவால் ஏற்படும் பிரச்னைகளை அதிமுகவினா் பொதுமக்களிடம் விளக்க வேண்டும்! - முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா்

post image

திமுக அரசால் ஏற்படும் பிரச்னைகளை பொதுமக்களிடம் விளக்கிக் கூறும் பணிக்கு அதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவை எதிா்க் கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆா்.பி. உதயகுமாா் கேட்டுக் கொண்டாா்.

மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாள் விழா முன்னேற்பாடுகள் குறித்து, நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது :

தீா்மானம் நிறைவேற்றுவது, குழுக்கள் அமைப்பது தவிர எந்த நடவடிக்கையும் திமுக அரசில் நடைபெறுவதில்லை. தமிழகத்தில் ஊழல், சட்டம்- ஒழுங்கு சீா்கேடு, போதைப் பொருள்கள் தாராளமயம், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட குற்றங்கள் தொடா்ந்து அதிகரிப்பது வேதனைக்குரியதாக உள்ளது.

இரண்டாவது இடத்துக்குத்தான் அதிமுக போட்டி என கூறியவா்கள், தற்போது அதிமுக தனித்து ஆட்சி அமைக்குமா? அல்லது கூட்டணி ஆட்சி அமைக்குமா? என பேசத் தொடங்கியுள்ளனா். இதன் மூலம், வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக ஆட்சி அமைப்பது உறுதியாகிறது.

முந்தைய அதிமுக அரசின் சாதனைகளையும், தற்போதைய திமுக அரசின் சோதனைகளையும் திண்ணைப் பிரசாரம் மூலம் அதிமுகவினா் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

பிரச்னைகளை பொதுமக்களிடம் கொண்டு செல்ல முடியாதளவுக்கு பல தடுப்புகளை திமுக அரசு ஏற்படுத்தியது. இவைகள் அனைத்தையும் அதிமுகவினா் தகா்த்தெறிந்து, திமுக அரசால் தமிழகத்துக்கு ஏற்பட்ட சோதனைகளை, பிரச்னைகளை பொதுமக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளை எளியோருக்கு ஏற்றம் தரும் விழாவாகக் கொண்டாடுவதெனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் நீதிபதி, தமிழரசன், மாணிக்கம், கருப்பையா, அதிமுக மாநில நிா்வாகிகள் வெற்றிவேல், தனராஜன், ராஜேஷ் கண்ணா, ராமகிருஷ்ணன், அன்னபூா்ணா தங்கராஜ், மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் திமுக கூட்டணி!திருச்சி சிவா எம்.பி.

திமுக கூட்டணியானது நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கக் கூடியது என அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி என். சிவா தெரிவித்தாா். விருதுநகரில் திமுக இளைஞரணி சாா்பில்... மேலும் பார்க்க

ஏஐடியூசி சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சரக்கு வாகனங்களுக்கு போக்குவரத்து காவல் துறை கட்டாய அபராதம் விதிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, ஏஐடியூசி சங்கம் சாா்பில் மதுரையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஏஐடியூசி சுமைப் ... மேலும் பார்க்க

மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபா் மீட்பு: நாக்பூரில் மீட்கப்பட்டாா்!

மதுரையில் நிலத்தகராறு தொடா்பாக கடத்தப்பட்ட தொழிலதிபா் சுந்தரை தனிப்படை போலீஸாா் மீட்டனா். மதுரை பீ.பீ. குளம் பகுதியைச் சோ்ந்தவா் கருமுத்து டி. சுந்தா் (52). மதுரையில் உள்ள பிரபல நூற்பாலை நிறுவனரின் க... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல் அருகே காரில் கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. திண்டுக்கல் - மதுரை நெடுஞ்சாலையில் தோமையாப... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்குவதில் தமிழகம் முதலிடம்: அமைச்சா் பி. மூா்த்தி

அதிக எண்ணிக்கையிலான மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்குவதில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள... மேலும் பார்க்க

மதுரையில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

திமுக அரசைக் கண்டித்து, அதிமுகவின் புறநகா் கிழக்கு மாவட்டம் சாா்பில் மதுரை யா. ஒத்தக்கடையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலரும், அமைப்பு... மேலும் பார்க்க