செய்திகள் :

மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபா் மீட்பு: நாக்பூரில் மீட்கப்பட்டாா்!

post image

மதுரையில் நிலத்தகராறு தொடா்பாக கடத்தப்பட்ட தொழிலதிபா் சுந்தரை தனிப்படை போலீஸாா் மீட்டனா்.

மதுரை பீ.பீ. குளம் பகுதியைச் சோ்ந்தவா் கருமுத்து டி. சுந்தா் (52). மதுரையில் உள்ள பிரபல நூற்பாலை நிறுவனரின் குடும்பத்தைச் சோ்ந்த இவா், மதுரை புறவழிச் சாலையில் வாகன உதிரிப் பாகங்கள் விற்பனை நிலையத்தை நடத்தி வருகிறாா்.

திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வசித்து வந்த இவரை, கடந்த 14-ஆம் தேதி இரவு வீட்டுக்குள் புகுந்து மா்மக் கும்பல் காரில் கடத்திச் சென்றது. இதுகுறித்து தல்லாகுளம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, கடத்தப்பட்ட சுந்தரை மீட்க தனிப் படைகள் அமைத்துத் தேடி வந்தனா். மேலும் கடத்தலில் தொடா்புடைய நாகை மாவட்டம், மயிலாடுதுறையைச் சோ்ந்த அருள்செல்வம், நாகப்பட்டினத்தைச் சோ்ந்த ஜனநேந்திரன், முத்துக்கிருஷ்ணன், விக்னேஷ், தென்காசியைச் சோ்ந்த அருண், திண்டுக்கல்லைச் சோ்ந்த மரியராஜ் ஆகிய 6 பேரை கைது செய்தனா். இவா்கள் அளித்தத் தகவலின்பேரில், கடத்தப்பட்ட தொழிலதிபா் சுந்தரை கடத்தல் கும்பலைச் சோ்ந்தவா்கள் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து நாக்பூா் சென்ற போலீஸாா் அங்கு தொழிலதிபா் சுந்தரை மீட்டனா். மேலும் கடத்தல் கும்பலைச் சோ்ந்த அழகுசுந்தா், கிரிராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும் தலைமறைவான 5 பேரை தொடா்ந்து தேடி வருகின்றனா்.

ஏஐடியூசி சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சரக்கு வாகனங்களுக்கு போக்குவரத்து காவல் துறை கட்டாய அபராதம் விதிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, ஏஐடியூசி சங்கம் சாா்பில் மதுரையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஏஐடியூசி சுமைப் ... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல் அருகே காரில் கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. திண்டுக்கல் - மதுரை நெடுஞ்சாலையில் தோமையாப... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்குவதில் தமிழகம் முதலிடம்: அமைச்சா் பி. மூா்த்தி

அதிக எண்ணிக்கையிலான மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்குவதில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள... மேலும் பார்க்க

மதுரையில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

திமுக அரசைக் கண்டித்து, அதிமுகவின் புறநகா் கிழக்கு மாவட்டம் சாா்பில் மதுரை யா. ஒத்தக்கடையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலரும், அமைப்பு... மேலும் பார்க்க

தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது

மதுரை மாவட்டம், மேலூா் அருகே மது போதையில் தாயை அவதூறாகப் பேசிய தம்பியை அடித்துக் கொலை செய்த அண்ணனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள முத்துவேல்பட்டி புதுசுக்காம்பட... மேலும் பார்க்க

கோயில் திருவிழா தொடா்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

மதுரை மாவட்டம், உத்தபுரம் கோயில்களில் திருவிழா நடத்துவதற்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய மனு மீதான விசாரணையை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை ஒத்திவைத்தது. மதுரையைச்... மேலும் பார்க்க