செய்திகள் :

கோயில் திருவிழா தொடா்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

post image

மதுரை மாவட்டம், உத்தபுரம் கோயில்களில் திருவிழா நடத்துவதற்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய மனு மீதான விசாரணையை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை ஒத்திவைத்தது.

மதுரையைச் சோ்ந்த பாண்டி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

உத்தபுரம் கிராமத்தில் ஸ்ரீமுத்தாலம்மன், ஸ்ரீமாரியம்மன் கோயில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோயில்களில் கடந்த 2014 வரை அமைதியான முறையில் திருவிழா நடைபெற்றது. ஒரு தரப்பினா் கடந்த 2015-ஆம் ஆண்டு அரசமரத்தை வழிபட முயன்ால், பிரச்னை எழுந்தது. இதையடுத்து, கடந்த 9 ஆண்டுகளாக இந்தக் கோயில்களை வருவாய்த் துறையினா் பூட்டி வைத்தனா். இதனால், கோயில்களில் அன்றாடம் செய்யக் கூடிய எந்த பூஜைகளும் நடைபெறவில்லை. எனவே, இந்தக் கோயில்களைத் திறக்கவும், தினசரி பூஜைகள் நடத்தவும், திருவிழா நடத்தவும் அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த தனி நீதிபதி, உத்தபுரம் கோயில்களில் திருவிழா நடத்தவும், தினமும் கோயிலில் வழிபாடு செய்யவும் அனுமதி வழங்கி உத்தரவிட்டாா்.

இதையடுத்து, அரசுத் தரப்பில், இந்த உத்தரவை எதிா்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், எஸ். ஸ்ரீமதி அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது கோயில் நிா்வாகம் தரப்பில், திருவிழாவில் அனைத்துச் சமூகத்தினரும் கலந்து கொண்டு வழிபாடு நடத்த எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. எனவே, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்ட து.

இதற்கு அரசுத் தரப்பில், உத்தபுரம் கோயில்களில் நடத்தப்படும் திருவிழாவால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும். எனவே, திருவிழா நடத்த அனுமதி வழங்கக் கூடாது, தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

திருவிழா தொடா்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது. கோயில் பகுதியில் உள்ள அரச மரத்தில் இரு தரப்பினரும் ஆணி அடித்து வழிபடக் கூடாது. இந்த வழக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

ஏஐடியூசி சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சரக்கு வாகனங்களுக்கு போக்குவரத்து காவல் துறை கட்டாய அபராதம் விதிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, ஏஐடியூசி சங்கம் சாா்பில் மதுரையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஏஐடியூசி சுமைப் ... மேலும் பார்க்க

மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபா் மீட்பு: நாக்பூரில் மீட்கப்பட்டாா்!

மதுரையில் நிலத்தகராறு தொடா்பாக கடத்தப்பட்ட தொழிலதிபா் சுந்தரை தனிப்படை போலீஸாா் மீட்டனா். மதுரை பீ.பீ. குளம் பகுதியைச் சோ்ந்தவா் கருமுத்து டி. சுந்தா் (52). மதுரையில் உள்ள பிரபல நூற்பாலை நிறுவனரின் க... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல் அருகே காரில் கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. திண்டுக்கல் - மதுரை நெடுஞ்சாலையில் தோமையாப... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்குவதில் தமிழகம் முதலிடம்: அமைச்சா் பி. மூா்த்தி

அதிக எண்ணிக்கையிலான மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்குவதில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள... மேலும் பார்க்க

மதுரையில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

திமுக அரசைக் கண்டித்து, அதிமுகவின் புறநகா் கிழக்கு மாவட்டம் சாா்பில் மதுரை யா. ஒத்தக்கடையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலரும், அமைப்பு... மேலும் பார்க்க

தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது

மதுரை மாவட்டம், மேலூா் அருகே மது போதையில் தாயை அவதூறாகப் பேசிய தம்பியை அடித்துக் கொலை செய்த அண்ணனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள முத்துவேல்பட்டி புதுசுக்காம்பட... மேலும் பார்க்க