செய்திகள் :

அதிமுக - பாஜக கூட்டணி வலுவாகவே உள்ளது: எல்.முருகன்

post image

நாமக்கல்: அதிமுக - பாஜக கூட்டணி வலுவாக உள்ளது, எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன என மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.

நாமக்கல்லில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நீட் தேர்வு விவகாரத்தில் திமுக அரசியல் செய்வதைத்தவிர, வேறு ஒன்றையும் இதுவரை செய்ததில்லை. திமுக - காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சியில் பங்கு பெற்றிருந்தபோதுதான் நீட் கொண்டு வரப்பட்டது. அதை சட்டமாக்க உதவியது திமுக அமைச்சர்கள்தான். நீட் தேர்வுக்காக படிக்கும் மாணவர்களின் வாழ்க்கையில் திமுக விளையாடி வருகிறது.

பாஜக - அதிமுக கூட்டணி வலிமையாகவே உள்ளது. வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும்.

ஆட்சியில் பங்கு குறித்து தேசிய தலைமைதான் முடிவு செய்யும். சட்டப்பேரவை தேர்தலில் திமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். கடந்த காலங்களில் தமிழகத்தில் ஆட்சி செய்த திமுக, அதிமுக முதல்வர்கள் மத்திய அரசுடன் ஒரு இணக்கமான போக்கில் செயல்பட்டு வந்தனர். தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை பெற்றனர்.

மத்திய பிரதேசம், பிகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் இரட்டை இன்ஜின் சர்க்கார் அமைத்து சிறப்பாக மாநிலங்களை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்கிறது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியை தவறாக வழி நடத்துவதன் காரணமாக, மத்திய அரசுடன் இணக்கமாக இல்லாமல் மோதல் போக்கை மட்டுமே செய்கிறார்.

தமிழக வளர்ச்சிக்காக அவர் எதையும் செய்யவில்லை. திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் வழக்கு தொடர்ந்தால் அதை சட்டரீதியாக சந்திப்பேன் என்றார்.

இதையும் படிக்க | ஜகதீப் தன்கருடன் ஆர்.என். ரவி சந்திப்பு

பரபரப்பான சூழலில் கூடிய மதிமுக நிர்வாகக் குழு!

பரபரப்பான சூழலில் மதிமுக நிர்வாகக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.சென்னையில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழத்தின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நிர்வாகக் கூட்டம் நடைபெற்று வருகிறது.மதிமுக அவ... மேலும் பார்க்க

ஈஸ்டர் திருநாள்: கிறிஸ்துவ தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை!

ஈஸ்டர் திருநாள் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள கிறிஸ்துவ தேவாலங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த நாளை உலகம் ம... மேலும் பார்க்க

மக்களின் மனுக்களுக்கு மதிப்பளிக்காத அரசு: திமுக அரசுக்கு அதிமுக கண்டனம்

திருச்சியில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததால், 3 பேர் பலியான சம்பவத்தைக் குறிப்பிட்டு, திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் தனது எக்ஸ... மேலும் பார்க்க

ஈஸ்டர் திருநாள்: விஜய் வாழ்த்து!

ஈஸ்டர் திருநாளுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “அன்பு, கருணை, மனிதநேயம், சகோதரத்துவம், தியாகம் ஆகியவற்றை மனித குலத்துக்குப் போதி... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2832 கன அடியாக அதிகரித்துள்ளது.காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று(ஏப். 20) காலை மேட்டூர் அணை... மேலும் பார்க்க

தேங்கிய மழைநீரில் மின்சாரம் பாய்ந்து உயிருக்குப் போராடிய சிறுவன் மீட்பு!

சென்னை அரும்பாக்கத்தில், தெருவில் தேங்கிய மழைநீரில் கசிந்த மின்சாரம் பாய்ந்து உயிருக்குப் போராடிய சிறுவனை, இளைஞா் ஒருவா் துணிச்சலாக செயல்பட்டு காப்பாற்றினாா். அவரை பலரும் பாராட்டி வருகின்றனா். அரும்பா... மேலும் பார்க்க