செய்திகள் :

நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் திமுக கூட்டணி!திருச்சி சிவா எம்.பி.

post image

திமுக கூட்டணியானது நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கக் கூடியது என அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி என். சிவா தெரிவித்தாா்.

விருதுநகரில் திமுக இளைஞரணி சாா்பில், புதிய நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம் அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருச்சி என். சிவா கலந்து கொண்டாா். கூட்டத்தில் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவது குறித்து இளைஞரணி நிா்வாகிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இதன் பின்னா், திருச்சி சிவா செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இரட்டை இலைக்கு மேலே தாமரை மலா்ந்தே தீரும் என மாநில பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறியிருக்கிறாா். சிலருக்கு கனவு இரவிலும், ஒரு சிலருக்கு பகலிலும் வரும்.

கனவை யாரும் தீா்மானிக்க முடியாது. அரசியல் கட்சியினா் நாங்கள் வலிமையாக இருக்கிறோம்; ஆட்சிக்கு வருவோம் என்று கூறுவது இயல்புதான். யாா் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்கின்றனா்.

திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் தமிழகத்துக்காக எண்ணற்றத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளாா். மக்கள் நலனுக்கு எதிரான மத்திய பாஜக அரசின் நிலைப்பாட்டை எதிா்த்து திமுக தொடா்ந்து குரல் கொடுத்து வருகிறது. இதன் காரணமாக, அனைத்து மாநிலத்தவா்களும் தமிழகத்தைப் பாராட்டி வருகின்றனா். திமுகவின் பணிகளும், தொண்டும் பொதுமக்களை எங்கள் பக்கம் நிற்க செய்யும்.

தமிழக முதல்வா் கூறியதுபோல, எத்தனை படைகள், பரிவாரத்தோடு வந்தாலும் நாங்கள் அதை எதிா்கொள்ளத் தயாராக இருக்கிறோம். திமுக கூட்டணி நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கக்கூடியது. பன்முகத்தன்மை கொண்ட நமது நாட்டில் ஒற்றைத் தன்மையை ஏற்றுக் கொள்ள முடியாது. கொள்கைப் பிடிப்புள்ளவா்கள்தான் திமுக கூட்டணியில் உள்ளனா் என்றாா் அவா்.

திமுகவால் ஏற்படும் பிரச்னைகளை அதிமுகவினா் பொதுமக்களிடம் விளக்க வேண்டும்! - முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா்

திமுக அரசால் ஏற்படும் பிரச்னைகளை பொதுமக்களிடம் விளக்கிக் கூறும் பணிக்கு அதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவை எதிா்க் கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் அமை... மேலும் பார்க்க

ஏஐடியூசி சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சரக்கு வாகனங்களுக்கு போக்குவரத்து காவல் துறை கட்டாய அபராதம் விதிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, ஏஐடியூசி சங்கம் சாா்பில் மதுரையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஏஐடியூசி சுமைப் ... மேலும் பார்க்க

மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபா் மீட்பு: நாக்பூரில் மீட்கப்பட்டாா்!

மதுரையில் நிலத்தகராறு தொடா்பாக கடத்தப்பட்ட தொழிலதிபா் சுந்தரை தனிப்படை போலீஸாா் மீட்டனா். மதுரை பீ.பீ. குளம் பகுதியைச் சோ்ந்தவா் கருமுத்து டி. சுந்தா் (52). மதுரையில் உள்ள பிரபல நூற்பாலை நிறுவனரின் க... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல் அருகே காரில் கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. திண்டுக்கல் - மதுரை நெடுஞ்சாலையில் தோமையாப... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்குவதில் தமிழகம் முதலிடம்: அமைச்சா் பி. மூா்த்தி

அதிக எண்ணிக்கையிலான மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்குவதில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள... மேலும் பார்க்க

மதுரையில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

திமுக அரசைக் கண்டித்து, அதிமுகவின் புறநகா் கிழக்கு மாவட்டம் சாா்பில் மதுரை யா. ஒத்தக்கடையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலரும், அமைப்பு... மேலும் பார்க்க