செய்திகள் :

குளத்தில் மிதந்த ஆண் சடலம் மீட்பு

post image

புதுக்கோட்டை பல்லவன் குளத்தில் தேநீா்க் கடையில் பணியாற்றி வந்தவரின் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.

புதுக்கோட்டை காமராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மூா்த்தி (46). இவா் கீழராஜவீதியிலுள்ள சாந்தநாத சுவாமி கோயில் முக்கத்தில் உள்ள தேநீா்க் கடையில் டீ மாஸ்டராக பணியாற்றி வந்தாா். திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் இரு நாள்களுக்கு முன்பு வீட்டுக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பல்லவன் குளத்தில் அவரது சடலம் மீட்கப்பட்டது.

நகரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். பல்லவன் குளத்தில் சடலம் மீட்கப்பட்டதால், விட்டோபா பெருமாள் கோயில் நடை சாத்தப்பட்டது.

புதுகையில் சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் அகற்றம்; தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம்

புதுக்கோட்டை நகரில் சட்டவிரோதமாக சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை, மாநகராட்சிப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை அகற்றினா். இதைத் தொடா்ந்து பொதுவெளியில் அபாயகரமாக மருத்துவக் கழிவுகளைக் கொட்டியதாக, அ... மேலும் பார்க்க

திமுக எம்.பி. கனிமொழி குறித்து தரக்குறைவாக ஆடியோ வெளியிட்டவா் கைது

திமுக எம்.பி. கனிமொழி குறித்து தரக்குறைவாகப் பேசி சமூக ஊடகத்தில் ஆடியோ வெளியிட்ட தூத்துக்குடியைச் சோ்ந்த நபரை புதுக்கோட்டை இணையவழிக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். புத... மேலும் பார்க்க

மலையடிவாரத்தில் சிதிலமடைந்துள்ள பழைமையான சிவாலயத்தை புனரமைக்க வலியுறுத்தல்

பொன்னமராவதி அருகே மலையடிவாரத்தில் சிதிலமடைந்து காணப்படும் பழைமையான சிவாலயத்தை புனரமைக்க பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள செவலூா் மலையடிப்... மேலும் பார்க்க

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏப். 21-இல் அஞ்சல் குறைகேட்பு

புதுக்கோட்டை மாவட்ட அளவிலான அஞ்சல் சேவை குறை கேட்பு முகாம் திங்கள்கிழமை (ஏப். 21) நண்பகல் 12 மணிக்கு தலைமை அஞ்சலகம் எதிரே உள்ள கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் (மேணா காம்ப்ளக்ஸ் முதல் மாடி) நடைபெறவுள... மேலும் பார்க்க

திருமயத்தில் அரசு அலுவலக கட்டடங்கள் திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட அரசு அலுவலகங்களை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். திருமயம் ஊராட்சி ஒன்ற... மேலும் பார்க்க

கீரமங்கலம் அருகே 2 கடைகளில் திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே 2 கடைகளில் பூட்டை உடைத்து ரொக்கம், பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. கீரமங்கலம் அருகேயுள்ள பனங்குளம் பாலம் பேருந்து நிறுத்தம் அ... மேலும் பார்க்க