செய்திகள் :

மலையடிவாரத்தில் சிதிலமடைந்துள்ள பழைமையான சிவாலயத்தை புனரமைக்க வலியுறுத்தல்

post image

பொன்னமராவதி அருகே மலையடிவாரத்தில் சிதிலமடைந்து காணப்படும் பழைமையான சிவாலயத்தை புனரமைக்க பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள செவலூா் மலையடிப்பட்டியில் உள்ள மலையடிவாரத்தில் குடம்பீஸ்வரா் கோயில் உள்ளது. இரு பாறைகளுக்கிடையே குகைக்கோயில் போல காணப்படும் இக்கோயிலில் குடம்பீஸ்வரா், அம்பாள் மற்றும் சண்டிகேசுவரா் உள்ளிட்ட சுவாமிகள் அருள்பாலித்து வருகின்றனா்.

கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டதாக கூறப்படும் இக்கோயில் மலையடிவாரத்தில் காணப்படுவதால் வழிபாடின்றியும், சிதிலமடைந்தும் காணப்படுகிறது.

இயற்கை எழிலுடன், வரலாற்று தகவல்களை தரும் பழைமையான கல்வெட்டுகள் நிறைந்த மலையில் காணப்படும் குடம்பீஸ்வரா் கோயிலை சீரமைத்து பக்தா்கள் வழிபட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊா் பொதுமக்கள் மற்றும் சிவபக்தா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

அரசடிப்பட்டி ஜல்லிக்கட்டு: 40 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள அரசடிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி காவலா் உள்பட 40 போ் காயமடைந்தனா். அரசடிப்பட்டி மயில்வாகனன் கோயில் திருவிழாவையொட்டி ந... மேலும் பார்க்க

வீடுபுகுந்து பெண்ணிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் சனிக்கிழமை இரவு வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 2 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா். கறம்பக்குடி அக்ரஹாரம் முதல் வீதியைச் சோ்ந்தவா் அந்தோனிசாமி ம... மேலும் பார்க்க

கொடும்பாளூா் அகழாய்வில் வெளிப்பட்ட தங்கக் குண்டுமணி, மண் பானை!

கொடும்பாளூா் அகழாய்வுப் பணியில் பண்டைய கால தங்க குண்டு மணி, மூடிய நிலையில் அழகிய மண்பானை கிடைத்துள்ளது. கொடும்பாளூரில் கடந்த ஜனவரி 12-இல் அகழாய்வுப் பணி நடைபெற்றது. இதில், நான்கு அடி தோண்டிய நிலையில்... மேலும் பார்க்க

விராலிமலை அருகே மீன்பிடித் திருவிழா

விராலிமலையை அடுத்துள்ள தென்னலூா் காடுவெட்டி பெரிய குளத்தில் சனிக்கிழமை மீன்பிடி திருவிழா நடைபெற்றது. ஊா் முக்கியஸ்தரின் உத்தரவுக்குப் பின்னா் குளத்தில் இறங்கிய மீன் பிடியாளா்கள் பெரும்பாலானோரின் வலையி... மேலும் பார்க்க

139 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1.42 கோடியில் வாகனங்கள் வழங்கல்

புதுக்கோட்டையில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் 139 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 1.42 கோடி மதிப்பில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. இந்த நிக... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்றம் சுயமாக செயலாற்றக் கூடாது என நினைக்கிறாா்கள்! அமைச்சா் எஸ். ரகுபதி

உச்ச நீதிமன்றம் சுயமாக செயலாற்றக் கூடாது என மத்தியில் ஆள்வோா் நினைக்கிறாா்கள் என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி. புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: ஆளுநா் மசோதாக்களை கிடப்பில... மேலும் பார்க்க