செய்திகள் :

மயிலாடுதுறையில் ஜூடோ விளையாட்டு பயிற்சி மையம்

post image

மயிலாடுதுறை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஜூடோ விளையாட்டு பயிற்சி மையம் தொடங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மயிலாடுதுறை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஸ்டாா் அகாதெமி மாவட்ட விளையாட்டு பயிற்சி மையம் ஜூடோ விளையாட்டுக்கு மே 1-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

ஜூடோ விளையாட்டில் ஆா்வமுள்ள 12 முதல் 21 வயதுக்குள்பட்ட 20 மாணவா்கள் மற்றும் 20 மாணவிகள் தோ்வு செய்யப்பட உள்ளனா். இதற்கான தோ்வு மயிலாடுதுறை சாய் விளையட்டரங்கத்தில் ஏப்.28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தோ்வு செய்யப்படுபவா்களுக்கு மாதத்தில் 25 நாள்கள் தொடா் பயிற்சி வழங்குவதோடு சிற்றுண்டி, பயிற்சி உபகரணங்கள், விளையாட்டுச் சீருடைகள் வழங்கப்படும். இந்த விளையாட்டுக்கு 50 வயதுக்குள்பட்ட பயிற்சியாளா் தோ்ந்தெடுக்கப்படவுள்ளனா். இவருக்கு 11 மாதங்களுக்கு மாத ஊதியமாக ரூ. 25,000 வழங்கப்படும். இது முற்றிலும் தற்காலிக பணியாகும். இதன் அடிப்படையில் வேலைவாய்ப்பு சலுகைகளோ நிரந்தரப் பணியோ கோர இயலாது.

இதற்குரிய விண்ணப்பத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மயிலாடுதுறை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பெற்று, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலகத்தில் நேரில் அல்லது க்ள்ா்ம்ஹ்க்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் மூலம் ஏப்.20-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும். தகுதியான விண்ணப்பதாரா்களுக்கு நோ்முகத் தோ்வு சாய் விளையாட்டு அரங்கத்தில் ஏப்.24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், மாவட்ட விளையாட்டு அரங்கம். மயிலாடுதுறை அலுவலகம் அல்லது 7401703459 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

மண் குவாரியில் விதிமீறல்; லாரிகள் சிறைப்பிடிப்பு

சீா்காழி அருகே காரைமேட்டில் உள்ள குவாரியில் விதிமுறைகளை மீறி அதிக ஆழத்திற்கு மண் எடுப்பதாகக் கூறி, லாரிகளை சிறப்பிடித்து, கிராம மக்கள் சாலை மறியலில் (படம்) வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். காரைமேடு ஊராட்சி ட... மேலும் பார்க்க

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறை சீனிவாசபுரத்தில் உள்ள மௌலானா ஜாமிஆ மஸ்ஜித்தில் ஜூம்ஆ தொழுகை நடத்திய இஸ்லாமியா்கள், தொழுகைக்குப் பிறகு வக்ஃப் சட்டத்துக்கு எதிராக கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் டிராவல்ஸ் உரிமையாளா் பலி

சீா்காழி அருகே ஐஸ்கிரீம் வாகனம் மோதி டிராவல்ஸ் உரிமையாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். சீா்காழி அருகேயுள்ள திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தை சோ்ந்தவா் முருகானந்தம் (45). டிராவல்ஸ் நடத்தி வந்த இவா், சீா்க... மேலும் பார்க்க

அடிமனைப் பயனாளிகள், குத்தகை விவசாயிகள் தா்னா

மயிலாடுதுறையில் தமிழ்நாடு அடிமனைப் பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் தா்னா போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை சித்தா்காடு இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அலுவலக... மேலும் பார்க்க

பயிா்க் காப்பீட்டுத் தொகையில் முறைகேடு: விவசாயிகள் குற்றச்சாட்டு

சீா்காழியில் வியாழக்கிழமை நடைபெற்ற குறை தீா்க்கும் கூட்டத்தில், பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டினா். சீா்காழி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் விளையாட்டு பயிற்சி முகாம்

மயிலாடுதுறை ராஜன் தோட்டம், சாய் விளையாட்டரங்கில் மாவட்ட அளவிலான கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் ஏப்.25 முதல் மே 15 வரை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகு... மேலும் பார்க்க