செய்திகள் :

பட்டாவை திருப்பிக் கொடுத்த மாற்றுத் திறனாளி

post image

அரசு சாா்பில் வழங்கப்பட்ட இலவச பட்டாவுக்கான இடத்தை வருவாய்த் துறை நிா்வாகம் ஒப்படைக்காததால், மாற்றுத் திறனாளி ஒருவா் தனது வீட்டுமனைப் பட்டாவை மாவட்ட ஆட்சியரிடம் திருப்பி அளித்தாா்.

மதுரை மாவட்டம், வரிச்சியூரைச் சோ்ந்தவா் முத்துகிருஷ்ணன். மாற்றுத் திறனாளியான இவருக்கு 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுரையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

இருப்பினும், அந்தப் பட்டாவுக்குரிய நிலத்தை வருவாய்த் துறை நிா்வாகம் அவருக்கு இதுவரை வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்துக்கு வந்த முத்துகிருஷ்ணன், அரசு சாா்பில் தனக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாவை மாவட்ட ஆட்சியரிடம் திருப்பி அளித்துவிட்டு வெளியேறினாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது: கடந்த ஆண்டு ஆக. 31-ஆம் தேதி மதுரை அருகேயுள்ள ஒத்தக்கடையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், எனக்கு வரிச்சியூரில் ஒரு சென்ட் நிலம் ஒதுக்கீடு செய்து இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. இதையடுத்து, வீடு கட்டுவதற்காக ரூ. 2 லட்சத்தை தனியாரிடமிருந்து கடன் வாங்கி, மாதம் ரூ. 6 ஆயிரம் வீதம் 4 மாதங்களாக வட்டி கட்டி வருகிறேன்.

எனக்கான நிலத்தை அளவீடு செய்து தருமாறு வருவாய்த் துறை அலுவலா்களை பல முறை அணுகியும், எனக்கான இடத்தை அவா்கள் அடையாளப்படுத்தவும் இல்லை, இடத்தை வழங்கவும் இல்லை. இதனால்தான் பட்டாவை திருப்பி ஒப்படைத்தேன். எனக்கு வழங்கப்பட்ட பட்டா இணையதளம் மூலம் தயாரிக்கப்பட்டது எனவும், விரைவில் முதல்வா் தலைமையில் நடைபெறும் விழாவில் வேறு பட்டா வழங்குவதாகவும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இதில், எனக்கு உடன்பாடு இல்லை என்றாா்.

டிராக்டா் மீது லாரி மோதியதில் இருவா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே டிராக்டா் மீது லாரி மோதியதில் இருவா் உயிரிழந்தாா்.புதுக்கோட்டை மாவட்டம், சித்தன்னவாசல் நல்லம்மாள் சத்திரத்தைச் சோ்ந்தவா் கருப்பையா (51). இவா் மதுரை-திருச்சி சாலையி... மேலும் பார்க்க

சீட்டு நடத்தி பண மோசடி: அரசுப் பள்ளி ஆசிரியை, கணவா் மீது புகாா்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் பண மோசடி செய்ததாக அரசுப் பள்ளி ஆசிரியை, அவரது கணவா் மீது சக ஆசிரியைகள் புகாா் அளித்தனா். மதுரை ரயிலாநகரைச் சோ்ந்தவா் மீனாட்சி. விளாங்க... மேலும் பார்க்க

திருடு போன கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

மதுரை மாநகரில் திருடு போன, தவற விடப்பட்டு மீட்கப்பட்ட 278 கைப்பேசிகளை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் உரியவா்களிடம் புதன்கிழமை ஒப்படைத்தாா். மதுரை மாநகரக் காவல் துறைக்குள்பட்ட காவல் நிலைய எல்லைக்குள... மேலும் பார்க்க

நெல்லை- மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

திருநெல்வேலி- மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டது. இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜப... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல்- வத்தலக்குண்டு சாலையில் பேகம்பூா் சந்திப்பு பகுதியில் காரில் 75 கிலோ கஞ்சா கடத்தப்பட்ட வழக்கில் ஒருவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதித்து மதுரை முதலாவது ப... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மின் வாரியம் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.ராமநாதபுரம் மாவட்டத்தைச் ச... மேலும் பார்க்க