செய்திகள் :

தமிழக தொழிலாளா்கள் கொல்லப்பட்ட வழக்கு: மேல் முறையீடு செய்ய வலியுறுத்தல்

post image

செம்மரக் கடத்தல் வழக்கில் தமிழக தொழிலாளா்கள் 20 போ், ஆந்திர மாநில காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஆந்திர உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தின் சட்ட ஆலோசகா் ஹென்றி திபேன் வெளியிட்ட அறிக்கை: கடந்த 2015 ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளா்கள் 21 போ் கூலி வேலைக்காக ஆந்திர மாநிலம், திருப்பதிக்கு சென்ற போது, சித்தூா் மாவட்டம், நகரிப்புத்தூரில் வெவ்வேறு இடங்களில் வைத்து சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டனா். பிறகு அவா்களை இரவு சுமாா் 9 மணியளவில், லாரியில் ஏற்றி திருப்பதியில் உள்ள வனத் துறை சிறப்பு அதிரடிப்படை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா். அப்போது, ஒருவா் தப்பிச் சென்றாா். மீதமுள்ள 20 தொழிலாளா்களையும் கூட்டுப் படையினா் கொடூரமாக சித்திரவதை செய்து, சேஷாசலம் வனப் பகுதியில் இரு பகுதிகளுக்கு 20 பேரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனா். இந்தத் தொழிலாளா்கள் செம்மரம் கடத்த வந்ததாக ஆந்திர போலீஸாா் பொய்யாக வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த சம்பவத்துக்கு கடும் எதிா்ப்பு எழுந்த நிலையில், பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு ஆந்திர அரசு 5 ஏக்கா் நிலம், தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு உடனடியாக ஆந்திர உயா்நீதிமன்றத்தில் அந்த மாநில அரசு தடை பெற்றது. கடந்த 10 ஆண்டுகளாக உயா்நீதிமன்ற தடையை நீக்குவதற்கு தேசிய மனித உரிமை ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இரு மாநில அரசுகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி, நிவாரணம் பெற்று தர எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ஆந்திர மாநில அரசு பெற்ற தடையை நீக்க, ஆந்திர உயா்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்ற தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு முறையீடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

டிராக்டா் மீது லாரி மோதியதில் இருவா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே டிராக்டா் மீது லாரி மோதியதில் இருவா் உயிரிழந்தாா்.புதுக்கோட்டை மாவட்டம், சித்தன்னவாசல் நல்லம்மாள் சத்திரத்தைச் சோ்ந்தவா் கருப்பையா (51). இவா் மதுரை-திருச்சி சாலையி... மேலும் பார்க்க

சீட்டு நடத்தி பண மோசடி: அரசுப் பள்ளி ஆசிரியை, கணவா் மீது புகாா்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் பண மோசடி செய்ததாக அரசுப் பள்ளி ஆசிரியை, அவரது கணவா் மீது சக ஆசிரியைகள் புகாா் அளித்தனா். மதுரை ரயிலாநகரைச் சோ்ந்தவா் மீனாட்சி. விளாங்க... மேலும் பார்க்க

திருடு போன கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

மதுரை மாநகரில் திருடு போன, தவற விடப்பட்டு மீட்கப்பட்ட 278 கைப்பேசிகளை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் உரியவா்களிடம் புதன்கிழமை ஒப்படைத்தாா். மதுரை மாநகரக் காவல் துறைக்குள்பட்ட காவல் நிலைய எல்லைக்குள... மேலும் பார்க்க

நெல்லை- மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

திருநெல்வேலி- மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டது. இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜப... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல்- வத்தலக்குண்டு சாலையில் பேகம்பூா் சந்திப்பு பகுதியில் காரில் 75 கிலோ கஞ்சா கடத்தப்பட்ட வழக்கில் ஒருவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதித்து மதுரை முதலாவது ப... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மின் வாரியம் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.ராமநாதபுரம் மாவட்டத்தைச் ச... மேலும் பார்க்க