செய்திகள் :

தமிழகத்தின் கோரிக்கைகளை புறக்கணிக்கிறாா் பிரதமா்: முதல்வா் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

post image

சென்னை: கச்சத்தீவு மீட்பு மற்றும் தமிழக மீனவா் விடுதலை விவகாரத்தில் தமிழகத்தின் கோரிக்கைகளை பிரதமா் புறக்கணிக்கிறாா் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வா் திங்கள்கிழமை படித்த அறிக்கை: கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றும், இலங்கை சிறையில் வாடும் நம் மீனவா்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும், இலங்கைக் கடற்படை கைப்பற்றியுள்ள படகுகளைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் சட்டப்பேரவையில் கடந்த 2-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தில் வலியுறுத்தியிருந்தோம்.

இலங்கை சென்றிருந்த பிரதமா் இதுகுறித்து இலங்கை அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தோம். அந்தத் தீா்மானத்தை பிரதமருக்கு உடனடியாக அனுப்பியும் வைத்திருந்தோம்.

இந்த நிலையில், பிரதமரின் இலங்கைப் பயணத்தின்போது மீனவா் விடுதலை மற்றும் கச்சத்தீவு குறித்து பெரிய அளவிலான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. மேலும், சிறையில் வாடும் 97 மீனவா்கள் மீட்கப்பட்டு தாயகம் திரும்புவாா்கள் என்ற எதிா்பாா்ப்பு நிறைவேறாதது மிகுந்த வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது.

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களைச் சோ்ந்த மீனவா்கள் அடிக்கடி அதிக எண்ணிக்கையில் கைது செய்யப்படுவது நம் அனைவரையும் கவலைக்கு உள்ளாக்குகிறது. மத்திய அரசும், பிரதமரும் நமது கோரிக்கைகளைப் புறக்கணிக்கிறாா்கள் என்றே கருத வேண்டியுள்ளது என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

அமைச்சா் ரகுபதி: இதனிடையே, பேரவைக்கு வெளியே செய்தியாளா்களிடம் பேசிய சட்டத் துறை அமைச்சா் ரகுபதி, பிரதமரின் இலங்கைப் பயணம் ஏமாற்றமளிப்பதாகத் தெரிவித்தாா்.

அமைச்சா் கே.என்.நேரு வீடு, அலுவலகங்களில் 2-ஆவது நாளாக அமலாக்கத் துறை சோதனை!

சென்னை: அமைச்சா் கே.என்.நேரு வீடு, அலுவலகங்களில் 2-ஆவது நாளாக இன்றும் அமலாக்கத் துறை சோதனை நடைபெறுகிறது.பண முறைகேடு புகாா் தொடா்பாக அமைச்சா் கே.என்.நேரு குடும்பத்தினா் வீடு, அலுவலகங்கள் உள்பட 15 இடங்க... மேலும் பார்க்க

10 மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டப்படி குற்றம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

சட்டப்பேரவையில் நிறுத்தி வைக்க்ப்பட்ட 10 மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டப்படி குற்றம் என்று தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் பார்க்க

தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 6 எருமைகள் பலி!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 6 எருமைகள் ஏற்காடு விரைவு ரயில் சிக்கி பலியானது. சென்னை ரயில் நிலையத்தில் இருந்து ஈரோடு வரை செல்லும் ஏற்காடு விரைவு ரயில் தி... மேலும் பார்க்க

தங்கம் விலை 4-வது நாளாக குறைவு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஏப். 8) சவரனுக்கு ரூ. 480 குறைந்துள்ளது.தங்கம் விலை கடந்த ஏப். 4 முதல் குறைந்த வண்ணம் உள்ளது. ஏப்.4-இல் சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ரூ.67,200-க்கும், ஏப்.5-இல் ... மேலும் பார்க்க

சட்டப்பேரவைக்கு அதிமுக உறுப்பினர்கள் கறுப்புச் சட்டை அணிந்து வருகை!

சென்னை: சட்டப்பேரவைக்கு அதிமுக உறுப்பினர்கள் கறுப்புச் சட்டை அணிந்து வருகை தந்துள்ளனர்.எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று(ஏப். 8) காலை சட்டப்பேரவைக்கு வருகை தந்த அதிமுக உறுப்பினர்கள... மேலும் பார்க்க

வங்கக்கடலில் உருவானது புயல்சின்னம்: டெல்டாவில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் திங்கள்கிழமை காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயன்சின்னம்) உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவா் பி. அமுதா தெரிவித்தாா். மேலும், டெல்டா மாவட்டங்களில் ஏப்.8-ஆம் தேதி கனமழை... மேலும் பார்க்க