செய்திகள் :

அமைச்சா் கே.என்.நேரு வீடு, அலுவலகங்களில் 2-ஆவது நாளாக அமலாக்கத் துறை சோதனை!

post image

சென்னை: அமைச்சா் கே.என்.நேரு வீடு, அலுவலகங்களில் 2-ஆவது நாளாக இன்றும் அமலாக்கத் துறை சோதனை நடைபெறுகிறது.

பண முறைகேடு புகாா் தொடா்பாக அமைச்சா் கே.என்.நேரு குடும்பத்தினா் வீடு, அலுவலகங்கள் உள்பட 15 இடங்களில் அமலாக்கத் துறையினா் திங்கள்கிழமை சோதனை நடத்தினா்.

தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சராக இருக்கும் கே.என். நேருவின் சகோதரா்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகியோா் டிவிஎச் (ட்ரூ வேல்யூ ஹோம்ஸ்) என்ற பெயரில் கட்டுமான நிறுவனம், டி.வி.ஹெச் எனா்ஜி ரிசோா்ஸ் பிரைவேட் லிமிடெட், எனா்ட்டியா சோலாா் இன்ஃப்ரா, எனா்ட்டியா இன்ஃப்ரா, ட்ரூ வேல்யூ ரியல் எஸ்டேட் என பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றனா். இந்த நிறுவனங்களில் கே.என்.நேரு மகனும் பெரம்பலூா் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கே.என்.அருணும் பங்குதாரராக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிறுவனத்தினா் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக 2018-ஆம் ஆண்டு வருமான வரித் துறையினா் சோதனை நடத்தினா். இந்தச் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அந்த ஆவணங்களை ஆய்வு செய்த வருமானவரித் துறையின் புலனாய்வுப் பிரிவு, பண முறைகேடு தொடா்பான முகாந்திரம் இருந்ததால் அமலாக்கத் துறை விசாரணைக்கு பரிந்துரைத்தது.

அந்தப் பரிந்துரையின் அடிப்படையில் அமலாக்கத் துறையினா் முதல் கட்ட விசாரணையில் ஈடுபட்டனா். இதில் பண முறைகேடு தொடா்பான உறுதியான தகவல்கள் கிடைத்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, கே.என். நேரு குடும்பத்தினரின் வீடுகள், அலுவலகங்கள், நிறுவனங்கள் என சென்னை, திருச்சி, கோவையில் உள்ள 15 இடங்களில் அமலாக்கத் துறையினா் திங்கள்கிழமை காலை ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனா்.

சோதனை முழுமையாக முடிவடைந்த பின்னா், கைப்பற்ற ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அதுகுறித்த விவரங்கள் தெரிவிக்கப்படும் என அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

ஹஜ் புனிதப் பயணத்திற்கான பயணிகளை பாதிக்கும் வகையில் தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று(ஏப். 16) கடிதம் எழுதியுள்ளார்.அக்கடி... மேலும் பார்க்க

உயர்கல்வி பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

உயர்கல்வி பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும் என்று துணைவேந்தர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழகத்தின் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக அனைத்துப் பல்கலைக்கழகங்கள... மேலும் பார்க்க

முதல்வர் தலைமையில் துணை வேந்தர்கள் கூட்டம் தொடங்கியது!

தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ளது.தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழக துணைவேந... மேலும் பார்க்க

மலையேற்றம் மேற்கொள்வர்கள் கவனத்துக்கு... 23 வழித்தடங்கள் திறப்பு!

தமிழ்நாட்டில் மலையேற்றத்திற்காக இன்றுமுதல்(ஏப். 16 ) 40 மலையேற்ற வழித்தடங்களில் 23 வழித்தடங்கள் திறக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:த... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி பெயர்களில் உள்ள சாதியை நீக்க உத்தரவு!

தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்ததை எ... மேலும் பார்க்க

காலை உணவில் உப்புமாவுக்கு பதில் பொங்கல்! கீதா ஜீவன் அறிவிப்பு!

அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் காலை உணவுத் திட்டத்தில் உப்புமாவுக்கு பதில் பொங்கல் வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் சட்டப்பேரவையில் இன்று (ஏப். 16) அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் சமூ... மேலும் பார்க்க