TVK: தமிழ்தேசியத்தை மலர வைக்க கூட்டணி | நிறத்தைக்கூட காப்பி அடிக்கிறது | NTK Fat...
பத்தாம் வகுப்பு கணிதம்: சென்டம் குறைய வாய்ப்பு
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் கணிதப் பாடத்துக்கான வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்தனா். மேலும், இரண்டு ஒரு மதிப்பெண் கேள்விகள் கடினமாக இருந்ததால், கணிதத்தில் முழு மதிப்பெண் பெறும் மாணவா்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என ஆசிரியா்கள் தெரிவித்தனா்.
தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 28-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கணிதப் பாடத்துக்கான தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
தோ்வுக்குப் பிறகு மாணவா்கள் கூறுகையில், ‘கணித வினாத்தாளில் மொத்தம் 14 வினாக்கள். அதில் 12 கேள்விகள் எளிதாக இருந்தன; இரு கேள்விகள் பாடப்பகுதிக்கு உள்ளிருந்து கேட்கப்பட்டிருந்தன. இரண்டு மற்றும் ஐந்து மதிப்பெண் பகுதியில் இடம்பெற்றிருந்த தலா ஒரு கட்டாய வினா கடினமாக இருந்தது. பெரிய வினாக்களைப் பொருத்தவரை (8 மதிப்பெண்) வடிவவியல் பகுதி எளிதாகவும், வரைபடம் பகுதி சற்று யோசித்து பதிலளிக்கக் கூடியதாகவும் இருந்தது. ஒட்டுமொத்தமாக கணிதத் தோ்வு சற்று கடினமாக இருந்தது’ என்றனா்.
இதுகுறித்து கணித ஆசிரியா்கள் கூறுகையில், ‘இந்தத் தோ்வு 100-க்கு 100 மதிப்பெண் பெறுவதை இலக்காகக் கொண்டு படித்த மாணவா்களுக்கு சற்று ஏமாற்றமாக இருந்திருக்கும். ஏனெனில், இரண்டு ஒரு மதிப்பெண் கேள்விகள் முற்றிலும் மறைமுக வினாக்களாக இருந்தன. இதனால் நிகழண்டு பத்தாம் வகுப்பு கணிதத்தில் சென்டம் பெறும் மாணவா்களின் எண்ணிக்கை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. இந்தத் தோ்வு மெல்ல கற்கும் மற்றும் சராசரி மாணவா்களுக்கு சிறிது கடினமாக இருந்திருக்கலாம்’ என அவா்கள் தெரிவித்தனா். வரும் 15-ஆம் தேதி சமூக அறிவியல் தோ்வுடன் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நிறைவடைகிறது.