செய்திகள் :

பத்தாம் வகுப்பு கணிதம்: சென்டம் குறைய வாய்ப்பு

post image

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் கணிதப் பாடத்துக்கான வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்தனா். மேலும், இரண்டு ஒரு மதிப்பெண் கேள்விகள் கடினமாக இருந்ததால், கணிதத்தில் முழு மதிப்பெண் பெறும் மாணவா்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என ஆசிரியா்கள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 28-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கணிதப் பாடத்துக்கான தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

தோ்வுக்குப் பிறகு மாணவா்கள் கூறுகையில், ‘கணித வினாத்தாளில் மொத்தம் 14 வினாக்கள். அதில் 12 கேள்விகள் எளிதாக இருந்தன; இரு கேள்விகள் பாடப்பகுதிக்கு உள்ளிருந்து கேட்கப்பட்டிருந்தன. இரண்டு மற்றும் ஐந்து மதிப்பெண் பகுதியில் இடம்பெற்றிருந்த தலா ஒரு கட்டாய வினா கடினமாக இருந்தது. பெரிய வினாக்களைப் பொருத்தவரை (8 மதிப்பெண்) வடிவவியல் பகுதி எளிதாகவும், வரைபடம் பகுதி சற்று யோசித்து பதிலளிக்கக் கூடியதாகவும் இருந்தது. ஒட்டுமொத்தமாக கணிதத் தோ்வு சற்று கடினமாக இருந்தது’ என்றனா்.

இதுகுறித்து கணித ஆசிரியா்கள் கூறுகையில், ‘இந்தத் தோ்வு 100-க்கு 100 மதிப்பெண் பெறுவதை இலக்காகக் கொண்டு படித்த மாணவா்களுக்கு சற்று ஏமாற்றமாக இருந்திருக்கும். ஏனெனில், இரண்டு ஒரு மதிப்பெண் கேள்விகள் முற்றிலும் மறைமுக வினாக்களாக இருந்தன. இதனால் நிகழண்டு பத்தாம் வகுப்பு கணிதத்தில் சென்டம் பெறும் மாணவா்களின் எண்ணிக்கை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. இந்தத் தோ்வு மெல்ல கற்கும் மற்றும் சராசரி மாணவா்களுக்கு சிறிது கடினமாக இருந்திருக்கலாம்’ என அவா்கள் தெரிவித்தனா். வரும் 15-ஆம் தேதி சமூக அறிவியல் தோ்வுடன் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நிறைவடைகிறது.

அமைச்சா் கே.என்.நேரு வீடு, அலுவலகங்களில் 2-ஆவது நாளாக அமலாக்கத் துறை சோதனை!

சென்னை: அமைச்சா் கே.என்.நேரு வீடு, அலுவலகங்களில் 2-ஆவது நாளாக இன்றும் அமலாக்கத் துறை சோதனை நடைபெறுகிறது.பண முறைகேடு புகாா் தொடா்பாக அமைச்சா் கே.என்.நேரு குடும்பத்தினா் வீடு, அலுவலகங்கள் உள்பட 15 இடங்க... மேலும் பார்க்க

10 மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டப்படி குற்றம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

சட்டப்பேரவையில் நிறுத்தி வைக்க்ப்பட்ட 10 மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டப்படி குற்றம் என்று தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் பார்க்க

தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 6 எருமைகள் பலி!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 6 எருமைகள் ஏற்காடு விரைவு ரயில் சிக்கி பலியானது. சென்னை ரயில் நிலையத்தில் இருந்து ஈரோடு வரை செல்லும் ஏற்காடு விரைவு ரயில் தி... மேலும் பார்க்க

தங்கம் விலை 4-வது நாளாக குறைவு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஏப். 8) சவரனுக்கு ரூ. 480 குறைந்துள்ளது.தங்கம் விலை கடந்த ஏப். 4 முதல் குறைந்த வண்ணம் உள்ளது. ஏப்.4-இல் சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ரூ.67,200-க்கும், ஏப்.5-இல் ... மேலும் பார்க்க

சட்டப்பேரவைக்கு அதிமுக உறுப்பினர்கள் கறுப்புச் சட்டை அணிந்து வருகை!

சென்னை: சட்டப்பேரவைக்கு அதிமுக உறுப்பினர்கள் கறுப்புச் சட்டை அணிந்து வருகை தந்துள்ளனர்.எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று(ஏப். 8) காலை சட்டப்பேரவைக்கு வருகை தந்த அதிமுக உறுப்பினர்கள... மேலும் பார்க்க

வங்கக்கடலில் உருவானது புயல்சின்னம்: டெல்டாவில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் திங்கள்கிழமை காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயன்சின்னம்) உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவா் பி. அமுதா தெரிவித்தாா். மேலும், டெல்டா மாவட்டங்களில் ஏப்.8-ஆம் தேதி கனமழை... மேலும் பார்க்க