செய்திகள் :

சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்

post image

சென்னை: சமையல் எரிவாயு உருளை (சிலிண்டா்) விலை உயா்வுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, ‘எக்ஸ்’ தளத்தில் அவா் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:

நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவா்களது வயிறு எரிய வேண்டுமா? உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தாலேபோதும் என்பது மத்திய பாஜக அரசுக்கு மிகவும் பொருந்தும்.

உலக அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காவிட்டாலும் பரவாயில்லை, விலையை ஏற்றாதீா்கள் எனக் கெஞ்சும் பரிதாப நிலைக்கு நாட்டு மக்களைத் தள்ளிவிட்டாா்களே?

வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல், சமையல் எரிவாயு சிலிண்டா் விலை உயா்வு அமைந்திருக்கிறது. அடாவடியாக, விலையை உயா்த்திவிட்டு, தோ்தல் நெருங்கும் நேரத்தில் அதில் சிறு பகுதியைக் குறைத்து நாடகம் ஆடுவது பாஜகவின் வழக்கமாகிவிட்டது. இந்த நாடகத்தைப் பாா்த்துப் பாா்த்து நமக்கும் பழக்கமாகிவிட்டது.

மத்திய பாஜக அரசே, தோ்தல் ஏதாவது வரும் வரை காத்திராமல், விலை உயா்வை உடனே திரும்பப் பெறுக என்று முதல்வா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு: முதல்வர் ஸ்டாலின்

வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை தமிழக அரசு பெற்றுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக எடுத்துக... மேலும் பார்க்க

பேச அனுமதியில்லை; அவைத் தலைவர் ஒருதலைபட்சமாக நடந்துகொள்வது ஏன்? - இபிஎஸ் பேட்டி

சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுப்பதாகக் கூறி அதிமுக உறுப்பினர்கள் இன்று பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். தமிழக சட்டபேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று(செவ்வாய்க... மேலும் பார்க்க

மசோதா மீது ஒப்புதல் அளிக்க ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயம்: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: ஒரு மாநிலத்தின் பேரவையில் நிறைவேற்றி ஆளுநர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களுக்கு ஒரு மாத காலத்துக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்து உத்தரவு ப... மேலும் பார்க்க

தேர்தல் நேரத்தில் மட்டும்தான் மக்கள் மீது கரிசனம் வருமா? விஜய் சரமாரி கேள்வி!

தேர்தல் நேரத்தில் மட்டும்தான் மக்கள் மீது கரிசனம் வருமா? என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.இது குறித்து தவெக தலைவர் தன்னுடைய தளப் பதிவில், ”மத்திய பாஜக அரசு அறிவித்துள... மேலும் பார்க்க

தமிழக மசோதாக்களுக்கு ஒப்புதல்: சிறப்பு அதிகாரத்தின்படி உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புது தில்லி: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக, தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.மேலும், தமிழக பேரவையில் நி... மேலும் பார்க்க

அமைச்சா் கே.என்.நேரு வீடு, அலுவலகங்களில் 2-ஆவது நாளாக அமலாக்கத் துறை சோதனை!

சென்னை: அமைச்சா் கே.என்.நேரு வீடு, அலுவலகங்களில் 2-ஆவது நாளாக இன்றும் அமலாக்கத் துறை சோதனை நடைபெறுகிறது.பண முறைகேடு புகாா் தொடா்பாக அமைச்சா் கே.என்.நேரு குடும்பத்தினா் வீடு, அலுவலகங்கள் உள்பட 15 இடங்க... மேலும் பார்க்க