செய்திகள் :

ராஜபாளையம்: `9-ம்வகுப்பு மாணவர் தூக்கிட்டு மரணம்' - போலீஸார் விசாரணை!

post image

ராஜபாளையத்தில் 9-ம்வகுப்பு பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில்வே பாலம் அருகே உள்ள ஸ்ரீரங்கபாளையம் தெருவைச் சேர்ந்தவர் கதிரவன். நூற்பாலை தொழிலாளி. இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும் காயத்ரி மற்றும் கௌசிக் கண்ணன் என்ற இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.

கௌசிக் கண்ணன்

கௌசிக் கண்ணன், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துவந்தார். படிப்பில் கெட்டிக்காரர் எனக் கூறப்படுகிறது. பொதுவாகவே, கௌசிக் கண்ணன் மற்றவர்களிடம் சாதாரணமாக பழகுவதில்லையாம். இந்தநிலையில், கதிரவன் வழக்கம்போல வேலைக்குச் சென்று விட்டார்‌. வீட்டிலிருந்த தாயும், சகோதரியும் அருகே உள்ள கடைக்குச் சென்றுள்ளனர்.

இந்தநிலையில் வீட்டில் தனியாக இருந்த கௌசிக் கண்ணன், வீட்டு அறையில் தனக்குத்தானே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்தநிலையில், கடைக்கு சென்றுவிட்டு வீடடுக்கு திரும்பி வந்த தாயும், சகோதரியும், கௌசிக் கண்ணன் வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உடனே, இதுகுறித்த தகவல் ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்துக்கு தெரியப்படுத்தப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், கௌசிக் கண்ணன் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை தடுப்பு மையம்

இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், அக்கம்பக்கத்தினர், பள்ளி மற்றும் சக மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜபாளையம் பகுதியில், பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

'அந்த பொண்ணுக்கு 3 முறை நிச்சயம் ஆகிருக்கு; எல்லாமே மோசடி' - இருட்டுக்கடை உரிமையாளர் சம்பந்தி

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா உரிமையாளரின் மகளுக்கு வரதட்சணை கொடுமை நடந்ததாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அப்போது இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் மகள் கனிஷ்கா தன் மாமனார் யுவராஜ் சிங் மற்றும் ... மேலும் பார்க்க

ராஜபாளையம்: 'குடும்ப தகராறில் கணவன் அடித்துக் கொலை'- தற்கொலை நாடகமாடிய தாய்-மகள் கைது!

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே குடும்பத் தகராறில் கணவனை அடித்துக் கொலை செய்துவிட்டு, தற்கொலை நாடகமாடிய சம்பவத்தில் தாய்-மகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போல... மேலும் பார்க்க

ரயில் தண்டவாளத்தில் தண்டால்; சோஷியல் மீடியாவில் பகிரப்பட்ட வீடியோ- இளைஞரை எச்சரித்து அனுப்பிய போலீஸ்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் அருகே தாமரை குட்டி விளைபகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். 90 கிலோ உடல் எடை கொண்ட கண்ணன், தனது எடையை விட 4 மடங்கு எடை கொண்ட 370 கிலோ காரை, யோக் வாக் என்ற முறைப்படி 25 மீட்ட... மேலும் பார்க்க

`பணம் திருடியதாக சந்தேகம்’ வேதனையில் 4வது மாடியில் இருந்து விபரீத முடிவெடுத்த கோவை மாணவி

கோவை நவ இந்தியா பகுதியில் இந்துஸ்தான் மருத்துவமனை இயங்கி வருகிறது. அவர்களுக்கு சொந்தமாக பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரியும் உள்ளது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். அங்கு திருவண்... மேலும் பார்க்க

`இருட்டுக்கடையைக் கேட்டு கொடுமை செய்கிறார்கள்' - கணவர் வீட்டார் மீது புதுமணப்பெண் வரதட்சணை புகார்!

``இருட்டுக்கடை அல்வா கடையை தன் பெயருக்கு எழுதிக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வேறொரு பெண்ணுடன் குடித்தனம் நடத்துவேன்" என தன் கணவர் மிரட்டியதாக புதுமணப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ... மேலும் பார்க்க

போதைப்பொருளை கடலில் போட்டு தப்பிய கடத்தல் கும்பல்; 300 கிலோ மீட்பு.. குஜராத்தில் நடந்தது என்ன?

குஜராத் கடல் பகுதியில் அடிக்கடி போதைப்பொருள் கடத்தி வரப்படுவது வழக்கமாக இருக்கிறது. குஜராத் கடல் பகுதி மட்டுமல்லாது குஜராத் துறைமுகத்திற்கும் வெளிநாட்டில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதை... மேலும் பார்க்க