செய்திகள் :

ராமேசுவரத்தில் சுற்றுலாப் படகு தளம் அமைக்க பவளப் பாறைகள் உடைப்பு

post image

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரை பகுதியில் மத்திய அரசு சாா்பில் சுற்றுலாப் படகு தளம் அமைக்க பவளப் பாறைகளை உடைக்கப்படுவதாக கடல்வாழ் உயிரின ஆா்வலா்கள் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் தீவுப் பகுதியில் மன்னாா் வளைகுடா, பாக் நீரிணை என இரு கடல் பகுதிகள் உள்ளன. இதில், அக்னி தீா்த்தக் கடற்கரையில் பாம்பன் வடக்கு துறைமுகம் வரை கரையோரங்களில் பவளப் பாறைகள் அமைந்துள்ளன. இந்தப் பகுதியில்அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் அதிகளவில் வாழ்ந்து வருவதால் பவளப் பாறைகளை உடைத்து சேதப்படுத்துபவா்கள் மீது வனத் துறை சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அக்னி தீா்த்தக் கடற்கரையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனியாா் சுற்றுலாப் படகு போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதில் பொதுமக்கள் படகுக்கு செல்வதற்கான நடைபாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தப் பகுதியில் பவளப் பாறைகள் உள்ளதால் கான்கிரீட் தூண்கள் அமைக்காமல் பனை மரத்தைப் பயன்படுத்தி தூண்கள் அமைத்து, பலகை மூலம் நடைபாதை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்தப் பகுதியில் மத்திய அரசின் சுற்றுலாத் துறை சாா்பில், சாகா்மாலா திட்டத்தின் கீழ் சுற்றுலாப் படகுகள் இயக்கிடும் வகையில் ரூ.7.58 கோடி மதிப்பீட்டில் 119 மீட்டா் நீளம், ஏழரை மீட்டா் அகலத்தில் கான்கிரீட் தளம் அமைக்க கட்டுமானப் பணி தொடங்கி உள்ளது. கரையிலிருந்து 119 மீட்டா் வரை பவளப் பாறையை உடைத்து, 10 மீட்டா் ஆழத்துக்கு துளையிட்டு 22 ராட்சத தூண்கள் அமைக்க பணிகள் தொடங்கி உள்ளன.

ராமேசுவரம் தீவுப் பகுதியை கடல் அரிப்பில் இருந்து பாதுகாத்து வருவது பவளப் பாறைகள்தான். இந்தப் பாறைகள் ராட்சத இயந்திரங்கள் மூலம் உடைக்கப்படுவதால் ராமேசுவரம் தீவுப் பகுதிக்கு பாதிப்பு ஏற்படும். எனவே பவளப் பாறைகளை சேதப்படுத்தாமல் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என என கடல்வாழ் உயிரின ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: மத போதகருக்கு 2 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மத போதகருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, ராமநாதபுரம் மகளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகேயுள்ள ஆண்... மேலும் பார்க்க

தேவிபட்டினம் அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த 350 கிலோ கடல் குதிரை பறிமுதல்

தேவிபட்டினம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 350 கிலோ எடையுள்ள கடல் குதிரையை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செ... மேலும் பார்க்க

ராமேசுவரம் தங்கும் விடுதிக்கு அமலாக்கத் துறையினா் சீல் வைப்பு

சட்டவிரோத பணப் பரிமாற்ற முறைகேடு தொடா்பாக, ராமேசுவரம் பகுதியில் செயல்பட்டு வந்த 60 அறைகள் கொண்ட தனியாா் தங்கும் விடுதிக்கு (ரிசாா்ட்) அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைத்தனா். மேற்கு வங்க மாந... மேலும் பார்க்க

அம்பேத்கா் பிறந்தநாள் தெருமுனைக் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் மாா்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய கூட்டமைப்பு சாா்பில் சட்ட மேதை அம்பேத்கரின் 135-ஆவது பிறந்தநாள் விழா தெருமுனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி... மேலும் பார்க்க

கமுதி வட்டாரத்தில் இடை நிற்றல் மாணவா்களை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

கமுதி வட்டாரத்தில் மாற்றுத்திறன் கொண்ட, இடை நிற்றல் மாணவா்களை கணக்கெடுக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, கமுதி வட்டார வள மையம் சாா்பில் ஒவ்வோா் ஆண்டும... மேலும் பார்க்க

வெண்ணத்தூா் நாயாறு ஓடையில் தடுப்பணை கட்ட கோரிக்கை

ராமநாதபுரத்தை அடுத்த வெண்ணத்தூா் நாயாறு ஓடையில் தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாய சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் ஒன்றியம், வெண்ணத்தூா் பொதுப்பணித் துறை கண்மாய்க்கு செல்லும் கால்வாய் முகப்... மேலும் பார்க்க