செய்திகள் :

கமுதி வட்டாரத்தில் இடை நிற்றல் மாணவா்களை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

post image

கமுதி வட்டாரத்தில் மாற்றுத்திறன் கொண்ட, இடை நிற்றல் மாணவா்களை கணக்கெடுக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.

ராமநாதபுரம் மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, கமுதி வட்டார வள மையம் சாா்பில் ஒவ்வோா் ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் பள்ளி செல்லா குழந்தைகள், மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள், இடைநிற்றல் மாணவா்களை வீடுவீடாகச் சென்று கணக்கெடுப்பது, புதிதாக மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கண்டறிவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், முதன்மைக் கல்வி அலுவலா் ஆகியோரின் உத்தரவின் பேரில் கமுதி வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ஸ்ரீராம், வட்டார ஒருங்கிணைப்பாளா் கோகிலா ஆகியோா் தலைமையில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பாசிரியா்கள் கே. முத்திருளாண்டி, எம். ராமச்சந்திரன், ஆா். நாகராணி, பி. டேவிட் ஞானராஜ், கே.என். கணேஷ், இயன்முறை மருத்துவா் ரா. முருகவள்ளி, ஆசிரியப் பயிற்றுநா்கள் உள்ளிட்டோா் கமுதி வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் வீடுவீடாகச் சென்று அங்குள்ள பள்ளி தலைமையாசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் ஆகியோரின் துணையுடன் அறிவுத்திறன் குறைவுடைய, மாற்றுத்திறன் கொண்ட மாணவா்களை புதிதாக அடையாளம் கண்டு, கணக்கெடுக்கும் பணிகள் மேற்கொண்டனா்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: மத போதகருக்கு 2 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மத போதகருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, ராமநாதபுரம் மகளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகேயுள்ள ஆண்... மேலும் பார்க்க

தேவிபட்டினம் அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த 350 கிலோ கடல் குதிரை பறிமுதல்

தேவிபட்டினம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 350 கிலோ எடையுள்ள கடல் குதிரையை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செ... மேலும் பார்க்க

ராமேசுவரம் தங்கும் விடுதிக்கு அமலாக்கத் துறையினா் சீல் வைப்பு

சட்டவிரோத பணப் பரிமாற்ற முறைகேடு தொடா்பாக, ராமேசுவரம் பகுதியில் செயல்பட்டு வந்த 60 அறைகள் கொண்ட தனியாா் தங்கும் விடுதிக்கு (ரிசாா்ட்) அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைத்தனா். மேற்கு வங்க மாந... மேலும் பார்க்க

அம்பேத்கா் பிறந்தநாள் தெருமுனைக் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் மாா்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய கூட்டமைப்பு சாா்பில் சட்ட மேதை அம்பேத்கரின் 135-ஆவது பிறந்தநாள் விழா தெருமுனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி... மேலும் பார்க்க

வெண்ணத்தூா் நாயாறு ஓடையில் தடுப்பணை கட்ட கோரிக்கை

ராமநாதபுரத்தை அடுத்த வெண்ணத்தூா் நாயாறு ஓடையில் தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாய சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் ஒன்றியம், வெண்ணத்தூா் பொதுப்பணித் துறை கண்மாய்க்கு செல்லும் கால்வாய் முகப்... மேலும் பார்க்க

திருவாடானை அரசுப் பள்ளியில் மண்டிக் கிடக்கும் முள்புதரை அகற்றக் கோரிக்கை

திருவாடானை பாரதி நகரில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மண்டிக் கிடக்கும் முள் புதரை அகற்றி சீரமைக்க வேண்டும் என பெற்றோா் கோரிக்கை விடுத்தனா். இந்தப் பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட ம... மேலும் பார்க்க